முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெக்சிகோ எண்ணெய் குழாய் வெடி விபத்து பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

மெக்சிகோ, மெக்சிகோ நாட்டில் ஹிடால்கோ மாகாணத்தில் டலாகியூலில்பான் என்ற இடத்தில் பெட்ரோல் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பெட்ரோல் வெளியே ஆறாக பெருக்கெடுத்து ஓடத்தொடங்கியது. இது குறித்த தகவல் அங்கு காட்டுத்தீயைப் போல பரவியது. உடனே மக்கள் வாளிகளையும், கேன்களையும் எடுத்துக் கொண்டு பெட்ரோலை வாரிக்கொண்டு வர சென்றனர். பலர் இப்படி பெட்ரோலை கேன்களிலும், வாளிகளிலும் எடுத்துக் கொண்டு வந்தனர்.

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் குழாயில் தீப்பிடித்தது. அந்த தீ மளமளவென பரவி, கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது. இதில் ஏராளமான மக்கள் சிக்கிக்கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் அங்கு விரைந்து வந்தனர்.

தீயில் கருகி 20 பேர் பலிதானதாக முதலில் தகவல் வெளியான நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. அவர்களின் உடல்கள், அடையாளம் காண முடியாத அளவுக்கு கரிக்கட்டைகள் போல மாறி விட்டன. தீக்காயங்களுடன் கதறிக்கொண்டிருந்த 76 பேரை மீட்புப்படையினர் மீட்டு ஆம்புலன்சுகள் மூலம் அந்தப் பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் உடனே வெளியாகி தீவிரமாக பரவின.

அந்த நாட்டின் அதிபர் மேனுவல் லோபஸ் ஓப்ரடார் மருத்துவமனைக்கு விரைந்து சிகிச்சை பெறுவோரை கண்டு ஆறுதல் கூறினார். இந்த மக்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்யுமாறு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து