எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி -தேனி மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உத்தமபாளையம் ஒன்றியம் பண்ணைப்புரத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 102வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய கழக செயலாளர் பி.ஆர்.பி.அழகுராஜா தலைமை தாங்கினார். பேரூர் கழக செயலாளர் பது என்ற லோகநாதன் வரவேற்றார்.; ஒன்றிய கழக செயலாளர்கள் கம்பம் இளையநம்பி, சின்னமனூர் விமலேஷ்வரன், நகர செயலாளர்கள் சின்னமனூர் ராஜேந்திரன், கம்பம் ஜெகதீஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தேனி மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், தலைமை கழக பேச்சாளர் வேதை சிவசண்முகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கம்பம் சட்டமன்ற உறுப்பினரும், கழக அண்ணா தொழிற்சங்க பேரவையின் கன்வீனருமான எஸ்.டி.கே. ஜக்கையன் பேசும்போது, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தனது குழந்தை பருவத்தில் பசி, பட்டினியோடு வாழ்ந்தவர். அதனால் ஏழ்மை இருக்கக்கூடாது, வறுமை இருக்கக்கூடாது என்று எண்ணினார். நிஜ வாழ்க்கையில் சிகரெட், மது குடிப்பதில்லை. அதேபோல் திரைப்படங்களிலும் அதுபோன்ற காட்சிகளில் நடிப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தார். தனது திரைப்படங்கள் மூலம் தேசப்பற்று, மொழிப்பற்று, குடும்ப பாசம், உதவும் குணம் மற்றும் தன்னம்பிக்கையை உருவாக்குதல் என நாட்டு மக்களுக்கு நல்ல செய்திகளை எடுத்துரைத்தார். பேரறிஞர் அண்ணா அவர்களின் பேச்சாற்றால், எழுத்தாற்றல், சொல்லாற்றலால் ஈர்க்கப்பட்டு அவருடைய தலைமையை ஏற்றுக் கொண்டார். பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் உருவான திராவிட முன்னேற்ற கழகத்தின் கொள்கைகளை, தனது படங்கள் மற்றும் படப்பாடல்கள் மூலம் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சென்றார். மக்கள் அண்ணாவை பார்த்து எம்.ஜி.ஆர் கட்சியை சேர்ந்தவரா என்று கேட்கும் அளவிற்கு உண்மையாகவும், விசுவாசமாகவும் கட்சிக்காக உழைத்தார். அதனால் தான் அண்ணா எம்.ஜி.ஆரை எனது இதயக்கனி என்று போற்றினார். 1962ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 52 இடங்களை தி.மு.க பிடித்தது. எம்.ஜி.ஆரின் உழைப்பால், தமிழகத்தில் அசைக்க முடியாத கட்சியாக இருந்த காங்கிரஸை தோற்கடித்து 1967ல் திமுக ஆட்சியை பிடித்தது. அதற்கு பின்னர் காங்கிரஸ் இன்றுவரை தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. தற்போதைய நிலையில் காங்கிரஸ் தமிழகத்தில் தனித்து நின்றால் டெபாசிட் கூட வாங்காது. பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்கு பின் திருக்குவளையிலிருந்து திருட்டு ரயில் ஏறி சென்னை வந்து, எம்.ஜி.ஆர் தயவால் திமுகவின் தலைவரான கருணாநிதி பின்னர் எம்.ஜி.ஆரையே கட்சியிலிருந்து நீக்கினார்.
ஊழலில் ஊறிப்போன கருணாநிதியின் குடும்பம் தற்போது உலக பணக்காரர்கள் வரிசையில் இருக்கிறது. ஊழல் பேர்வழிகளை வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்றப்பட வேண்டுமென்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் 1972ல் அதிமுகவை உருவாக்கினார். 1977ல் தமிழகத்தில் ஆட்சியை பிடித்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தான் சிறுவயதில் தான் பட்ட பசி கொடுமையை யாரும் படக்கூடாது என சத்துணவுத் திட்டத்தை கொண்டு வந்தார்.
மேலும் இலவச வேஷ்டி, சேலை, காலனி, பல்பொடி வழங்கும் திட்டம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், வீட்டுக்கு இலவச ஒரு மின்விளக்கு திட்டம் என பல திட்டங்களை கொண்டு வந்தார். இவருடைய திட்டங்களை பார்த்து யுனெஸ்கோ நிறுவனம் இவரை வெகுவாக போற்றியது, பாராட்டியது. புரட்சிதலைவரின் மறைவுக்கு பின் 30 ஆண்டுகளாக இரும்பு பெண்மணியாக இருந்து கழகத்தை கட்டிக்காத்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 1991, 2001, 2011, 2016 ஆகிய சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா 20 கிலோ அரிசி, விலையில்லா மிக்சி, கிரைண்டர், பேன், தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவி, பசுமைவீடு திட்டம் என மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று வாழ்ந்து எம்.ஜி.ஆரின் எண்ணங்களை, திட்டங்களாக மாற்றி சாதித்து காட்டினார். புரட்சித்தலைவியின் சிறப்பான செயல்பாட்டால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்று 37 இடங்களில் வெற்றி பெற்று பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை கழகத்திற்கு பெற்றுக் கொடுத்தார். அவருடைய வழியில் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் மிகச்சிறப்பான ஆட்சியை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். நீர்நிலைகளை ஆழப்படுத்துதல், நீராபாரன திட்டம், பணிக்கு செல்லும் பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்கும் திட்டம், உலகத்தரம் வாய்ந்த எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைக்கவும், ஸ்மார்ட் சிட்டி திட்டம் என புரட்சித்தலைவியின் திட்டங்களை செயல்படுத்தி வருவதோடு, மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றியுள்ளனர். தற்போது இல்லாத பொல்லாத வதந்திகளை பரப்பி கழக அரசு மீது குற்றச்சாட்டுகளை சிலர் கூறி வருகின்றனர். அவற்றையெல்லாம் தவிடு பொடியாக்கி மீண்டும் சாதிப்போம். நமக்கெல்லாம் இடைத்தேர்தலில் எப்படி பணியாற்ற வேண்டும், சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் எப்படி பணியாற்ற வேண்டும் என்று புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எடுத்துரைத்து இருக்கிறார்கள். எனவே வரும் இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என எந்த தேர்தல் வந்தாலும் நாம் சிறப்பாக செயல்பட்டு வென்று சாதிப்போம் என்று சிறப்புரையாற்றினார். ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் கல்யாணக்குமார் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் முருக்கோடை ராமர், முன்னாள் மாவட்ட செயலாளர் டி.டி.சிவக்குமார், மாவட்ட இணை செயலாளர் மஞ்சுளாமுருகன், ஒன்றிய கழக செயலாளர்கள் தேனி ஆர்.டி.கணேசன், பெரியகுளம் அன்னபிரகாஷ், ஆண்டிபட்டி லோகிராஜன், கடமலை-மயிலை கொத்தாளமுத்து, போடி சற்குணம், நகர செயலாளர்கள் பெரியகுளம் என்.வி.ராதா, கூடலூர் சோலைராஜ், போடி பழனிராஜ், தேனி கிருஷ்ணகுமார், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் பாண்டியராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் பாலமணிமார்பன், மாவட்ட பாசறை செயலாளர் நாராயணன், மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் பிச்சைக்கனி, மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் சிவக்குமார், பண்ணைப்புரம் பேரூர் கழக அவைத்தலைவர் சுருளிராஜ், பொருளாளர் தமிழரசன், உத்தமபாளையம் ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் விமல், ஒன்றிய மாணவர் அணி செயலாளர் தர்மேந்திரன், ஒன்றிய பாசறை செயலாளர் வினோத்குமார், நாகையகவுண்டன்பட்டி ஊராட்சி செயலாளர் வாஞ்சிநாதன், பல்லவராயன்பட்டி கிளை செயலாளர் மாயழகு, டி.மேட்டுப்பட்டி கிளை செயலாளர் மாடசாமி மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பண்ணைப்புரம் பேரூர் கழக நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.18 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 17 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 17 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n