முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான் ஸிவாவை கடத்தலாம் டோனியிடம் கூறிய நடிகை

செவ்வாய்க்கிழமை, 7 மே 2019      விளையாட்டு
Image Unavailable

மும்பை : நான் ஸிவாவை கடத்தலாம், ஜாக்கிரதையாக இருங்கள் என நடிகையும், பஞ்சாப் அணியின் உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா போட்ட டுவீட் தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை, பஞ்சாப் அணிகள் மோதிய ஐ.பி.எல். போட்டி நடைபெற்றது. அதன் பின் டோனியுடன் பேசிய பிரீத்தி ஜிந்தா அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட பிரீத்தி ஜிந்தா, கேப்டன் கூல் டோனி, நான் உட்பட பல ரசிகர்களை கொண்டிருக்கிறார். ஆனால் இந்த முறை எனது விஸ்வாசம் அவரது மகள் ஸிவாவிடம் மாறியுள்ளது. இந்தப் புகைப்படம் எடுக்கும் போது அவரிடம்... நான் ஸிவாவைக் கடத்தலாம் ஜாக்கிரதையாக இருங்கள் என்று கூறினேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் அந்த புகைப்படத்திற்கு ரசிகர்களையும் கேப்ஷன் வைக்க சொல்லியுள்ளார். இதனால் அவரின் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் சென்னை ரசிகர்கள் தான் தங்கள் கருத்துக்களை அதிகமாக பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து