முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தோல்வியை கண்டு துவண்டு விடாதீர்கள் - கட்சியினருக்கு சந்திரபாபு நாயுடு வேண்டுகோள்

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

ஐதராபாத் : தேர்தலில் அடைந்த தோல்வியைக் கண்டு துவண்டு விட வேண்டாம் என்று கட்சி நிர்வாகிகளை தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆந்திர சட்டசபை தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் ஆகியவற்றில் தெலுங்கு தேசம் கட்சி கடும் பின்னடைவைச் சந்தித்தது. இந்நிலையில், தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாதுக்கு வந்த சந்திரபாபு நாயுடுவை அக்கட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர். அப்போது அவர்களிடம் சந்திரபாபு நாயுடு கூறியதாவது:

தெலுங்கு தேசம் கட்சி தனது பயணத்தில் பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்துள்ளது. ஆதலால், அண்மையில் தேர்தலில் அடைந்த தோல்விகளை கண்டு யாரும் துவண்டு விட வேண்டாம். கட்சி நிர்வாகிகள் மனம் தளராமல் செயல்பட வேண்டும். தொண்டர்களை நிர்வாகிகள் அரவணைத்து செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து