முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்கிறார் எஸ்.ஏ.பாப்டே

ஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : சுப்ரீ்ம் கோர்ட்டின்  தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டே இன்று பதவியேற்கிறார்.

சுப்ரீம் கோர்ட்டின் 46-வது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய், கடந்த ஆண்டு அக்‍டோபர் 3-ம் தேதி பதவியேற்றுக்‍ கொண்டார். நேற்றுடன் அவர் பணி ஓய்வு பெற உள்ள நிலையில், தனது கடைசி வேலைநாள் பணியை நிறைவு செய்தார். அவருக்‍கு, சுப்ரீம் கோர்ட் வழக்‍கறிஞர்கள் சார்பில் வாழ்த்து தெரிவிக்‍கப்பட்டது. ரஞ்சன் கோகோயின் பணி ஓய்வையொட்டி சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பதவிக்‍கு எஸ்.ஏ. பாப்டேவை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் ஓய்வு பெற்றதையடுத்து எஸ்.ஏ. பாப்டே சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இன்று  (18- ம்தேதி)  பதவியேற்க உள்ளார். அவர் சுப்ரீம் கோர்ட்டின்  47-வது தலைமை நீதிபதி ஆவார். அவர் 2021-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி வரை அந்த பதவியில் நீடிப்பார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து