முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்தில் 10-ல் ஒருவருக்கு கொரோனா : கட்டுபாடுகள் தீவிரம்

சனிக்கிழமை, 25 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

லண்டன் : இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரண்டு தினங்களுக்கு முன் 1 லட்சத்து 19 ஆயிரத்து 759 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்த எண்ணிக்கை நேற்று முன்தினம் 1 லட்சத்து 22 ஆயிரத்து 186 ஆக உயர்ந்துள்ளது.3-வது நாளாக பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது. அதேபோல் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.

கடந்த 16-ந்தேதி 20 பேரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இது படிப்படியாக அதிகரித்து தற்போது 10-ல் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து கொரோனா பரவலை தடுக்க அந்நாட்டில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. விமான நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து