எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜெருசலேம், இஸ்ரேலை நோக்கி ஈரான் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசிய நிலையில், இதற்கான விலையை அந்த நாடு கொடுக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
பாலஸ்தீனத்தின் காசா, லெபனான் மீதான தாக்குதல்கள், ஹிஸ்புல்லா தலைவர்கள் படுகொலை உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான். நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை இஸ்ரேலின் டெல் அவிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை நோக்கி ஈரான் ஏவியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. உடனடியாக பொதுமக்களுக்கு சைரன் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் பணிகளை அந்நாட்டு அரசு முடுக்கி விட்டது.
இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சில “இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளன. இஸ்ரேலியர்கள் விழிப்புடன் இருக்கவும், அரசின் உத்தரவுகளை சரியான முறையில் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இஸ்ரேல் குடிமக்களைப் பாதுகாக்க தேவையான அனைத்தையும் இஸ்ரேல் ராணுவம் செய்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த தாக்குதலுக்கான பின்விளைவுகளை ஈரான் சந்திக்க நேரிடும் என்றும், இதற்கான பதிலடி சரியான நேரத்தில் சரியான இடத்தில் கொடுக்கப்படும் என்றும் இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது. மேலும், ஏவுகணைகள் பலவற்றை இஸ்ரேல் விமானப்படை வழியிலேயே தாக்கி அழித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலை நோக்கி வரும் ஏவுகணைகளை வழியிலேயே தடுத்து வீழ்த்துமாறு அமெரிக்க ராணுவத்துக்கு அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். மேலும், இதற்கான பதிலடி எவ்வாறு இருக்கும் என்பது குறித்து இஸ்ரேல் பிரதமருடன் ஆலோசிக்க இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் முழு ஆதரவு இஸ்ரேலுக்கு உண்டு என்றும் பைடன் தெரிவித்துள்ளார்.
ஈரானின் இந்த தாக்குதலைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “ஈரான் மிகப் பெரிய தவறை செய்துவிட்டது. இதற்கான விலையை அந்த நாடு கொடுக்கும். முன்னதாக யாஃபா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டிலும் தெஹ்ரானின் (ஈரான் தலைநகர்) தலையீடு இருக்கிறது. நம்மை தற்காத்துக் கொள்ளும் நம்முடைய உறுதியை ஈரான் புரிந்து கொள்ளவில்லை.
இஸ்ரேலை நோக்கி ஈரான் நூற்றுக் கணக்கான ஏவுகணைகளை வீசியுள்ளது. ஆனால் அவர்களின் இந்த தாக்குதல் தோல்வியடைந்து விட்டது. உலகிலேயே அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட இஸ்ரேல் விமானப் படையால் இந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. அமெரிக்காவின் ஆதரவுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். லெபனான், காசா உள்ளிட்ட எல்லா இடங்களிலும் தீய சக்திகளுடன் நாங்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம். எங்களுடைய வீரர்கள் அங்கு தீவிரமாக களமாடி வருகின்றனர். முன்னெப்போதையும் விட அயத்துல்லாவின் இருண்ட ஆட்சிக்கு எதிராக உலக சமூகம் இஸ்ரேலுடன் ஒன்றிணைய வேண்டும்” இவ்வாறு நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 week 6 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 week 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 2 days ago |
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 8-ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்
01 Oct 2024சென்னை, தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 8-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-10-2024.
02 Oct 2024 -
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகள்: இந்திய அணி 4-வது இடம்
01 Oct 2024கான்பூர் : வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிப்பெற்ற அணிகளின் பட்டியலி
-
டெஸ்ட் சாம்பியன்ஷிப் புதிய பட்டியல்: வங்காளதேச அணி சரிவு
01 Oct 2024துபாய் : இந்தியாவுக்கு எதிரான தொடரை இழந்த வங்காளதேசம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் புதிய தரவரிசை பட்டியலில் (34.38 சதவீதம்) 5வது இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு
-
தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு
01 Oct 2024வங்கதேச டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசம்- தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் அக்டோபர் இறுதியில் தொடங்குகிறது.
-
அதிக முறை தொடர் நாயகன் விருது: முரளிதரனின் சாதனையை சமன் செய்தார் அஸ்வின்
01 Oct 2024கான்பூர் : வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. இதன் மூலம்
-
வரும் 6-ம் தேதி விமான சாகச நிகழ்ச்சி: மெரினாவில் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
02 Oct 2024சென்னை, வரும் 6-ம் தேதி விமான சாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ளதை முன்னிட்டு மெரினாவில் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
-
சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் வரும் 8-ம் தேதி அ.தி.மு.க. மனிதச்சங்கிலி போராட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
02 Oct 2024சென்னை, 40 மாத காலமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதற்குக் காரணமான தி.மு.க.
-
மருத்துவமனையில் இருந்து அமைச்சர் அன்பில் மகேஷ் டிஸ்சார்ஜ்
02 Oct 2024சென்னை, திடீர் உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் உடல் நலம் சீரானதை தொடர்ந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-10-2024.
02 Oct 2024 -
தேசத் தந்தை முகத்தில் விழிக்காத பாசிஸ்டுகள்: பார்லி. காந்தி சிலை இடமாற்றம் குறித்து சு.வெங்கடேசன் பதிவு
02 Oct 2024சென்னை, பாராளுமன்றத்தில் காந்தி சிலை இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சு.வெங்கடேசன் பதிவிட்டுள்ளார்.
-
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி எதிரொலி: 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: தமிழகத்தில் 4 நாட்கள் மழை தொடரும்
02 Oct 2024சென்னை, வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து
-
தொலைபேசி மூலம் ரஜினியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார் பிரதமர் மோடி
02 Oct 2024சென்னை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்துள்ளார்.
-
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பள்ளி மாணவர்களுடன் இணைந்து தூய்மை பணி செய்த பிரதமர் மோடி
02 Oct 2024புதுடெல்லி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் நேற்று காலை மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
-
இஸ்ரேல் தாக்குதல் நடத்த திட்டம்: ஈரானுக்கு தேவையில்லாமல் யாரும் பயணிக்க வேண்டாம்: இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
02 Oct 2024டெல்லி, இஸ்ரேல் எந்நேரத்திலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம் என்று சூழலை அடுத்து ஈரானுக்கு தேவையில்லாமல் யாரும் பயணிக்க வேண்டாம் என்று இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்ச
-
காலாண்டு விடுமுறையில் ஆன்லைன் வகுப்புகள்: தனியார் பள்ளிகளுக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை
02 Oct 2024சென்னை, காலாண்டு விடுமுறையில் ஆன்லைன் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக புகார் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் எச்சரிக
-
நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல்: ஈரானுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கடும் எச்சரிக்கை
02 Oct 2024ஜெருசலேம், இஸ்ரேலை நோக்கி ஈரான் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசிய நிலையில், இதற்கான விலையை அந்த நாடு கொடுக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
-
புனேவில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து: 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி
02 Oct 2024புனே, மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் நேற்று (புதன்கிழமை) காலை வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் விழுந்து விபத்தில் சிக்கியது.
-
உடனடியாக வெளியேறுங்கள்: தெற்கு லெபனான் மக்களுக்கு இஸ்ரேல் மீண்டும் எச்சரிக்கை
02 Oct 2024ஜெருசலேம், தெற்கு லெபனானில் உள்ள இரண்டு கிராமங்களில் உள்ள மக்கள் தங்களின் பாதுகாப்பு கருதி உடனடியாக வீடுகளைவிட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் மீண்டும் எச்சரித்துள்ளது.
-
இஸ்ரேல் விவகாரத்தில் தலையிட வேண்டாம்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை
02 Oct 2024டெக்ரான், இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலுக்கு பின்பு இந்த விஷயத்தில் அமெரிக்கா தலையிட வேண்டாம் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
-
ஏழுமலையான தரிசனம் செய்து பவன் கல்யான் லட்டு பரிகார விரதத்தை நிறைவு செய்தார்
02 Oct 2024திருப்பதி, ஏழுமலையான தரிசனம் செய்த பவன் கல்யான் நேற்று 11 நாள் லட்டு பரிகார விரதத்தை நிறைவு செய்தார்.
-
மதுரையில் மீண்டும் பரபரப்பு: தங்கும் விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
02 Oct 2024மதுரை, மதுரையில் உள்ள 4 தங்கும் விடுதிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் வந்துள்ளது.
-
டெல்லியில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 500 கிலோ போதைப்பொருள் பறிமுதல்; கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பேர் கைது
02 Oct 2024புதுடெல்லி, டெல்லியில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 500 கிலோ கொகைன் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனர்.
-
தொடரும் டாக்டர்கள் போராட்டம்: மேற்கு வங்காளத்தில் மருத்துவ சேவை பாதிப்பு
02 Oct 2024கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் தொடரும் டாக்டர்கள் போராட்டத்தால் மருத்துவ சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
-
ஒரே நாளில் ரூ.400 அதிகரிப்பு: ரூ. 57 ஆயிரத்தை நெருங்கும் ஒரு பவுன் தங்கத்தின் விலை
02 Oct 2024சென்னை, தங்கம் விலை சமீபகாலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.