எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![CM-1-2025-02-06](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2025/02/06/CM-1-2025-02-06.jpg?itok=5kDzr20b)
நெல்லை, நெல்லையில் ரூ.6,874 கோடி மதிப்பில் டாடா மற்றும் விக்ரம் நிறுவனத்தின் சூரிய மின் உற்பத்தி ஆலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். இந்த நிறுவனங்களின் மூலம் 6,500 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும்.
உலகப் புகழ்பெற்ற இந்திய குழுமமான, டாடா குழுமத்தின் துணை நிறுவனங்களான டி.சி.எஸ். டைடன், டாடா மோட்டார்ஸ், டாடா எலெக்ட்ரானிக்ஸ், தாஜ் ஹோட்டல்கள், தனிஷ்க் ஆகியவை ஏற்கெனவே தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் தடம் பதித்துள்ளன. இந்நிலையில், டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாடா பவர் லிமிடெட் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை தணிப்பதற்கு அவசியமான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் துறையில் முதலீடு மேற்கொள்வதற்காக 2022-ம் ஆண்டு ஜூலை மாதம், இத்திட்டத்திற்கான முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது கூடுதலாக முதலீடு மேற்கொள்வதாக இரண்டாவது புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொண்டது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் 3,800 கோடி ரூபாய் முதலீட்டில் 4,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாடா பவர் சோலார் நிறுவனம் அமைத்துள்ள 4.3 ஜி.டபுள்யு சோலார் செல் மற்றும் மாடுல் உற்பத்தி ஆலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து, உற்பத்தியையும் தொடங்கி வைத்தார். பின்னர், தொழிற்சாலையை பார்வையிட்டு, அங்கு பணிபுரியும் பெண் பணியாளர்களிடம் உரையாடி, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும், தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த சோலார் பேனலில் வாழ்த்துகள் என்று எழுதி கையொப்பமிட்டார்.
பெண்களுக்கு 80 சதவிகித வேலைவாய்ப்பு என்பது மட்டுமின்றி, பெண்களுக்கு தங்கும் விடுதி வசதிகளும் அளிக்கப்படவுள்ளது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும். இந்நிகழ்ச்சியில், காணொலிக் காட்சி வாயிலாக டாடா குழுமத் தலைவர் என். சந்திரசேகரன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அதிக திறன் கொண்ட சோலார் பி.வி. உற்பத்தியில் நிபுணத்துவம் பெற்ற விக்ரம் சோலார் லிமிடெட், இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் செயல்பட்டு வரும் முன்னணி நிறுவனமாகும். தமிழ்நாட்டில் ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் அமைக்கப்பட்ட 1.3 ஜி.டபுள்யு உற்பத்தித்திறன் கொண்ட இதன் ஆலை 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் 2574 கோடி ரூபாய் முதலீட்டில், 2500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 3 ஜி.டபுள்யு சோலார் செல் மற்றும் 6 ஜி.டபுள்யு மாடுல் உற்பத்தித்திறன் கொண்ட விக்ரம் சோலார் லிமிடெட் தொழிற்சாலை அமைப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். இந்த நிறுவனத்திலும் பெரும்பான்மையான வேலைவாய்ப்புகள் பெண்களுக்கானவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சிகளில், சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாபு, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், டி.ஆர்.பி.ராஜா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 4 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 1 week ago |
-
நகரம், ஒன்றியம் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகள்: த.வெ.க. மாவட்ட செயலாளர்களுக்கு கட்சி தலைவர் விஜய் முக்கிய உத்தரவு
05 Feb 2025சென்னை : தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர்களுக்கு நகரம், ஒன்றியம், பகுதி, வட்டம் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகளை நியமனம் செய்ய கட்சி தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.&nb
-
இதுவரை இல்லாத வகையில் தமிழ்நாட்டில் 10.41 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கையால் அதிகரிப்பு
05 Feb 2025சென்னை, தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில் 10 .41 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.
-
ஊதிய ஓப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்
05 Feb 2025சென்னை, பிப்.
-
பத்திரப்பதிவு குறித்த அறிவிப்பை முன்னரே அரசு அறிவிக்கவில்லை : ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்
05 Feb 2025சென்னை : பத்திரப்பதிவு குறித்த அறிவிப்பை முன்னரே அரசு அறிவிக்கவில்லை என்று தெரிவித்துள்ள ஒ.பன்னீர் செல்வம் தி.மு.க.
-
ஐ.சி.சி. டி-20 தரவரிசை: அபிஷேக் சர்மா முன்னேற்றம்
05 Feb 2025துபாய் : ஐசிசி ஆடவர் டி20 தரவரிசையில் 38 இடங்கள் முன்னேறி 2ஆம் இடம் பிடித்துள்ளார் இந்திய இளம் வீரர் அபிஷேக் சர்மா.
-
3 பணியாளர்கள் தற்காலிக நீக்கம்: சாம்சங் தொழிற்சாலையில் உள்ளியிருப்பு போராட்டம்
05 Feb 2025காஞ்சிபுரம் : சாம்சங் தொழிலாளர்கள் 3 பேரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ததால் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவியது
-
முதல் ஒருநாள் போட்டி: இந்தியா-இங்கி. அணிகள் நாக்பூரில் இன்று மோதல்
05 Feb 2025நாக்பூர் : இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நாக்பூரில் நடக்கிறது.
சுற்றுப்பயணம்...
-
வாழப்பாடி ராமமூர்த்திக்கு மணிமண்டபம்: முதல்வருக்கு ஐ.என்.டி.யூ.சி. வலியுறுத்தல்
05 Feb 2025சென்னை, முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி இராமமூர்த்திக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் தமிழக முதலமைச்சருக்கு ஐ.என்.டி.யு.சி கோரிக்கை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள்
-
ஊதிய பேச்சுவார்த்தையை தொடங்காவிட்டால் 26-ம் தேதி வேலை நிறுத்தம் தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
05 Feb 2025சென்னை, வருகிற 10-ம் தேதிக்குள் ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை தொடங்காவிட்டால் வருகிற 26-ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று அண்ணா தொழிற்சங்கம்&n
-
அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்
05 Feb 2025அமிர்தசரஸ் : சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கையாக அமெரிக்காவிலிருந்து அனுப்பப்பட்ட 104 இந்தியர்கள் அமிர்தசரஸ் விமான நிலையம் வந்தடைந்தனர்.
-
மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
05 Feb 2025திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசி விஸ்வநாதர், சிக்கந்தர் தர்காவிற்கு பக்தர்கள் செல்ல அனுதி அளிக்கப்பட்டுள்ளது.
-
ஏ.ஐ. செயலிகளை பயன்படுத்த வேண்டாம்: ஊழியர்களுக்கு நிதியமைச்சகம் அறிவுறுத்தல்
05 Feb 2025டெல்லி : அலுவலக மின்னணு சாதனங்களில் ஏ.ஐ தொழில்நுட்ப செயலிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு ஊழியர்களுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
-
எச்-1பி, எல்-1 விசா வைத்திருக்கும் அமெரிக்க இந்தியர்களுக்கு சிக்கல்
05 Feb 2025அமெரிக்கா : எச்-1பி, எல்-1 விசாக்களின் அனுமதி காலம் நிறைவடைந்தால், அதனை 180 நாள்களுக்குள் புதுப்பிக்க வேண்டும் என்ற விதிமுறையை கொண்டுவர அமெரிக்க செனட் உறுப்பினர்கள் தீர
-
காசாவை கைப்பற்ற போவதாக அமெரிக்கா அதிபர் அறிவிப்பு
05 Feb 2025வாஷிங்டன் : காசாவை கைப்பற்றி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம் - டிரம்ப் அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
கிருஷ்ணகிரி அருகே மாணவி வன்கொடுமை: ஆசிரியர்கள் 3 பேர் கைது
05 Feb 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: கெஜ்ரிவால் குடும்பத்தினருடன் வாக்களித்தார்
05 Feb 2025டெல்லி : டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் கெஜ்ரிவால் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார்.
-
பறவையினங்களை வேட்டையாடியதாக அதிபர் டிரம்ப் மகன் மீது இத்தாலியில் வழக்குப்பதிவு
05 Feb 2025வெனிஸ் : இத்தாலியில் பாதுகாக்கப்பட்ட பறவையினங்களை வேட்டையாடிதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகன் டிரம்ப் ஜூனியர் மீது இத்தாலி அரசில் வழக்குப்பதிவு செய்யப்பட
-
தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு
05 Feb 2025பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடர் பிப்.8ஆம் தேதி தொடங்குகிறது.
-
போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: அ.தி.மு.க. இளைஞர் பாசறை வலியுறுத்தல்
05 Feb 2025சென்னை, போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை இரும்புக்கரம் கொண்டு ஓடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
திருப்பரங்குன்றம் போராட்டம்: 195 பேர் மீது வழக்குப்பதிவு
05 Feb 2025திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் போராட்டத்தில் ஈடுபட்ட 195 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
தஜிகிஸ்தானில் பயங்கரம்: சிறையில் இருந்து தப்ப முயன்ற கைதிகள் 5 பேர் சுட்டுக்கொலை
05 Feb 2025துஷான்பே : தஜிகிஸ்தானில் சிறையில் இருந்து தப்ப முயன்ற 5 கைதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
வரும் 16ம் தேதி வேலூரில் நடக்கிறது அ.தி.மு.க. இளைஞர் பாசறை மாநாடு
05 Feb 2025சென்னை, அ.தி.மு.க. இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறையில் மண்டல மாநாடு வரும் 16 ம்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது,
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-02-2025.
06 Feb 2025 -
ஐ.சி.சி. டி-20 தரவரிசை: அபிஷேக் சர்மா முன்னேற்றம்
05 Feb 2025துபாய் : ஐசிசி ஆடவர் டி20 தரவரிசையில் 38 இடங்கள் முன்னேறி 2ஆம் இடம் பிடித்துள்ளார் இந்திய இளம் வீரர் அபிஷேக் சர்மா.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: குடும்பத்தினருடன் வாக்கு செலுத்திய தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார்
05 Feb 2025ஈரோடு : ஈரோடு இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்aதிரகுமார் தனது குடும்பத்தினருடன் வாக்கு செலுத்தினார்.