எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, அமெரிக்காவில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்தியர்களுக்கு கை விலங்கு போடப்பட்டதாக எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப், சட்டவிரோத குடியேறிகள் விவகாரத்தில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக முறையான ஆவணங்கள் இன்றி நாட்டில் தங்கி உள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களை ராணுவ விமானங்கள் மூலம் அவரவர்களின் நாடுகளுக்கு அனுப்பி வைத்து வருகிறது டிரம்ப் நிர்வாகம்.
அந்த வகையில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை திருப்பி அனுப்பும் பணிகள் தொடங்கியதாகவும், முதல்கட்டமாக கடந்த 3 நாட்களுக்கு முன் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து 205 இந்தியர்களுடன் 'சி-17' ரக ராணுவ விமானம் இந்தியாவுக்கு புறப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த சூழலில் இந்தியர்களுடன் புறப்பட்ட அமெரிக்க ராணுவத்தின் 'சி-17' ரக விமானம் நேற்று முன்தினம் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஸ்ரீ குரு ராம்தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதையொட்டி விமான நிலையத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விமானத்தில் வந்த இந்தியர்களை பஞ்சாப் மாநில அதிகாரிகள் வரவேற்றனர். இதனிடையே 205 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், அமிர்தசரஸ் வந்தடைந்த அமெரிக்க ராணுவ விமானத்தில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 104 இந்தியர்கள் வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்கள் கைவிலங்கு போடப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்தது. இது குறித்து ஊடக மற்றும் விளம்பரத் துறைத் தலைவர் பவன் கேரா தனது எக்ஸ் தளத்தில், அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள் கைவிலங்கிடப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட படங்களை பார்ப்பது ஒரு இந்தியராக எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. 2013 டிசம்பரில், இந்திய தூதர் தேவயானி கோப்ரகடே அமெரிக்காவில் கைவிலங்கிடப்பட்டு ஆடைகளை அவிழ்த்து சோதனை செய்யப்பட்டதை நான் நினைவில் கொள்கிறேன்.
இது தொடர்பாக அப்போதைய வெளியுறவு செயலாளர் சுஜாதா சிங் அமெரிக்க தூதர் நான்சி பவலுடன் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார். அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்காவின் நடவடிக்கையை இழிவானது என சாடினார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் அமெரிக்க அரசுக்கு கடும் எதிர்வினையாற்றியது. மீரா குமார், சுஷில் குமார் ஷிண்டே மற்றும் ராகுல் காந்தி போன்ற தலைவர்கள் அந்த நேரத்தில் இந்தியாவுக்கு வருகை தந்திருந்த அமெரிக்க பாராளுமன்ற குழுவை (ஜார்ஜ் ஹோல்டிங், பீட் ஓல்சன், டேவிட் ஷ்வீகெர்ட், ராப் வுடலண்ட் மேடலின் போர்டல்லோ) சந்திக்க மறுத்துவிட்டனர் என்று அதில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்து வந்ததாக கூறப்படும் இந்தியர்களை நாடு கடத்துவது குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற மக்களவையில் நேற்று கோரிக்கை விடுத்தனர். மேலும் அமெரிக்காவில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்தியர்களுக்கு கை விலங்கு போடப்பட்டிருந்ததாக எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். மாநிலங்களவையிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக, பாராளுமன்ற இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.5 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-02-2025.
06 Feb 2025 -
நெல்லையில் புதிய சூரிய மின் உற்பத்தி ஆலைகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
06 Feb 2025நெல்லை, நெல்லையில் ரூ.6,874 கோடி மதிப்பில் டாடா மற்றும் விக்ரம் நிறுவனத்தின் சூரிய மின் உற்பத்தி ஆலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
-
தொடர்ந்து உயரும் தங்கம் விலை: கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,800 உயர்வு
06 Feb 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.63,440-க்கு விற்பனையாகி புதிய வரலாறு படைத்துள்ளது. தொடர்ந்து தங்கம் விலை உயர்
-
இந்தியர்களுக்கு கை விலங்கு போட்ட விவகாரம்: பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளி: இரு அவைகளும் ஒத்திவைப்பு
06 Feb 2025புதுடெல்லி, அமெரிக்காவில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்தியர்களுக்கு கை விலங்கு போடப்பட்டதாக எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக
-
ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் கட்டணம் செலுத்தி நாட்டில் சுங்கச்சாவடிகளில் கட்டணமில்லா பயணம் செய்ய மத்திய அரசு புதிய திட்டம்
06 Feb 2025புதுடெல்லி, ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தினால், நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டணமின்றி சென்று வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் நிதின் க
-
கள ஆய்வுக்காக நெல்லை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொது மக்கள் உற்சாக வரவேற்பு
06 Feb 2025நெல்லை, நெல்லையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு சென்ற நிலையில் அங்கு அவருக்கு பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
-
சாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரத்தில் ஆட்சியாளர்களின் சமூக நீதி வேடம் கலைகிறது: த.வெ.க. தலைவர் விஜய்
06 Feb 2025சென்னை, சாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரத்தில் ஆட்சியாளர்களின் சமூக நீதி வேடம் கலைகிறது என த.வெ.க. தலைவர் விஜய் கூறியுள்ளார்.
-
பள்ளி மாணவி பாலியல் சம்பவத்தை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ். அறிவிப்பு
06 Feb 2025சென்னை, போச்சம்பள்ளி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து நாளை கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி தெ
-
ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி தலைவராக செயல்படுவாரா? இ.பி.எஸ்.க்கு அமைச்சர் ரகுபதி கேள்வி
06 Feb 2025சென்னை, மலிவான அரசியல் செய்வதை விடுத்து எடப்பாடி பழனிசாமி ஆக்கப்பூர்வமான எதிர்கட்சித் தலைவராக செயல்படுவாரா? என அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
சந்திரயான் - 4 ராக்கெட் வரும் 2027-ல் ஏவப்படும்: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்
06 Feb 2025புதுடெல்லி, சந்திரயான் -4 திட்டம் வரும் 2027-ல் விண்ணில் செலுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
-
யு.ஜி.சி. புதிய விதிகளுக்கு எதிராக டெல்லியில் ஒலித்த குரல் நாடு முழுவதும் எதிரொலிக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
06 Feb 2025சென்னை, யு.ஜி.சி. புதிய வரைவு நெறிமுறைகளுக்கு எதிராக டெல்லியில் ஒலித்த குரல் இந்தியா முழுவதும் எதிரொலிக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கைவிலங்கு போடப்பட்ட விவகாரம்: பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம்
06 Feb 2025புதுடெல்லி, பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-
டெல்லி முதல்வர் மீதான அவதூறு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
06 Feb 2025புதுடெல்லி, டெல்லி முதல்வர் அதிஷி மற்றும் சஞ்சய் சிங் மீதான அவதூறு வழக்கு விசாரணை வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது.
-
குடும்ப நலன்தான் அவர்களுக்கு முக்கியம்: அனைவருக்கும் வளர்ச்சி என்பதை காங்கிரசிடம் எதிர்பார்க்க முடியாது: மாநிலங்களவையில் பிரதமர் மோடி பதிலுரை
06 Feb 2025புதுடெல்லி, குடும்ப நலன்தான் காங்கிரஸ் கட்சிக்கு முக்கியம் என்று மாநிலங்களவையில் தெரிவித்த பிரதமர் மோடி, அனைவருக்கும் வளர்ச்சி என்பதை காங்கிரஸிடம் எதிர்பார்க்க மு
-
இந்தியர்களை மரியாதை நடத்துமாறு அமெரிக்காவிடம் கேட்டுள்ளோம்: பார்லி.யில் ஜெய்சங்கர் விளக்கம்
06 Feb 2025புதுடெல்லி, அமெரிக்காவில் இருந்து திரும்பி அனுப்பப்படும் இந்தியர்களை, மரியாதையுடன் நடத்த அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நாடு கடத்தப்படும் போது
-
தூக்கு தண்டனையை எதிர்த்து கேரளா ஐகோர்ட்டில் இளம்பெண் மனு
06 Feb 2025திருவனந்தபுரம், காதலனை விஷம் வைத்து கொன்ற வழக்கில் தூக்கு தண்டனையை எதிர்த்து இளம்பெண் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
மறு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதா மீது முடிவு எடுக்காமல் கவர்னர் மவுனமாக இருக்கலாமா? தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம்கோர்ட் கேள்வி
06 Feb 2025புதுடெல்லி, மறு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதா மீது முடிவு எடுக்காமல் கவர்னர் மவுனமாக இருக்கலாமா?
-
மதுரை அ.தி.மு.க. வட்டசெயலாளர் திடீர் நீக்கம்: இ.பி.எஸ். நடவடிக்கை
06 Feb 2025சென்னை, மதுரை மாவட்ட அ.தி.மு.க. கிழக்கு வட்ட செயலாளர் உதயகுமாரை நீக்கம் செய்து அக்கட்சியின் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா - இஸ்ரேல் விலகல்
06 Feb 2025வாஷிங்டன், ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகும் என ஏற்கனவே டிரம்ப் அறிவித்து இருந்த நிலையில் தற்போது அதற்கான அரசாணையை பிறப்பித்துள்ளார்.
-
சென்னையில் வரி வசூலை அதிகரிக்க புதிய திட்டம்
06 Feb 2025சென்னை: சென்னை மாநகராட்சியில் நீண்ட காலமாக வரி செலுத்தாமல் உள்ள இரண்டு லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பவும் அப்படி நோட்டீஸ் அனுப்பியும் வரி செலுத்தாதோர் மீது நடவடிக்கை எ
-
பவர் லிப்டிங் பெஞ்சு பிரஸ் போட்டியில் தமிழக வீரர் லட்சுமணன் தேசிய சாதனை
06 Feb 2025சென்னை, பவர் லிப்டிங் பெஞ்சு பிரஸ் போட்டியில் தேசிய அளவிலான சாதனை நிகழ்த்திய தமிழக வீரர் லட்சுமணனுக்கு வடசென்னை காவல்துறை இணைக்கமிஷனர் மனோகர், தங்கத்தமிழ்மகன் வ
-
கப்பல்களுக்கு கட்டண விலக்கு அளிக்கும் அமெரிக்காவின் புதிய அறிவிப்பை ஏற்க மறுப்பு: பனாமா திட்டவட்டம்
06 Feb 2025அமெரிக்கா: பனாமா கால்வாய் வழியாகச் செல்லும் அமெரிக்க அரசு கப்பல்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்திருக்கும் நிலையில், அதனை பனாமா கால்வாய் நிர்
-
ஜெயலலி்தா பிறந்த நாள் விழா: அ.தி.மு.க. மகளிர் அணி தீர்மானம்
06 Feb 2025சென்னை, வரும் 24ம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி மகளிர் மனம் குளிர சிறப்பாக கொண்டாட அ.தி.மு.க.
-
மத்தியப் பிரதேசத்தில் இந்திய போர் பயிற்சி விமானம் விபத்து
06 Feb 2025போபால், மத்தியப் பிரதேசத்தில் இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 பயிற்சி விமானம் விபத்தில் சிக்கியது.
-
வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை: ஷேக் முஜிபுர் ரகுமான் வீடு சூறை
06 Feb 2025டாக்கா, வங்காளதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தையின் நினைவு இல்லம் வன்முறையாளர்களால் தீ வைக்கப்பட்டது