எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்குவதை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி இளம் வீரர்களுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையுடன் எம்.எஸ்.டோனி இருக்கும் புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. இதனிடையே தனது நண்பரின் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட டோனி கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்த திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காகவே டோனி வேட்டி சட்டை அணிந்திருந்தார் என்று தெரிய வந்துள்ளது.
___________________________________________________________________________
பிங்க் நிற ஜெர்சியில் ராஜஸ்தான் அணி
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. அதன்படி இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
முன்னதாக கடந்த சில சீசன்களாக மகளிரை கவுரவிக்கும் விதமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குறிப்பிட்ட ஒரு ஆட்டத்தில் மட்டும் பிங்க் நிற ஜெர்சி அணிந்து விளையாடும். அந்த வகையில் இந்த சீசனிலும் மே 1-ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெறும் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பிங்க் நிற ஜெர்சி அணிந்து விளையாட உள்ளது. இந்த ஆட்டத்துக்கான ஜெர்சி அறிமுக நிகழ்ச்சி சர்வதேச மகளிர் தினமான நேற்று முன்தினம் நடந்தது. இதனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இயக்குனர் சங்ககரா அறிமுகம் செய்தார்.
___________________________________________________________________________
இறுதிப்போட்டியை கண்டு ரசித்த மக்கள்
நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டி மிக முக்கிய போட்டியான இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது. இந்நிலையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியை சென்னையில் இரண்டு இடங்களில் திரையிட்டுள்ளது.
இந்தப் போட்டி மெரினா கடற்கரை (விவேகானந்தா மாளிகைக்கு எதிரே) மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை (போலீஸ் பூத் அருகில்) ஆகிய இடங்களில் திரையிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் திரையிடப்பட்டுள்ள இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராஃபி இறுதிப் போட்டியை ரசிகர்கள் தங்களது நண்பர்கள், குடும்பத்தினருடன் வெயிலையும் பொருட்படுத்தாமல் கண்டு ரசித்தனர்.
___________________________________________________________________________
வேதனையில் ரோகித் சாதனை
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் நேற்று விளையாடின. துபாயில் நடைபெற்ற இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா தொடர்ச்சியாக சந்தித்த 15-வது டாஸ் தோல்வி இதுவாகும்.
இந்திய கேப்டனாக ரோகித் சர்மா சந்தித்த 12-வது தோல்வியாகும். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் டாசில் தொடர்ச்சியாக அதிக தோல்விகளை சந்தித்த கேப்டன் என்ற மோசமான சாதனையில் பிரையன் லாராவுடன் இணைந்து முதலிடத்தை பிடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக பீட்டர் போரேன் 11 தோல்விகளுடன் 2-ம் இடத்தில் உள்ளார்.
___________________________________________________________________________
பும்ரா குறித்து வில்லியம்சன்
இந்தியா - நியூசிலாந்து இடையிலான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த இறுதிப்போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற பேட்டி ஒன்றில் நியூசிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேனான வில்லியம்சனிடம், உங்கள் கெரியரில் நீங்கள் எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர் யார்? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வில்லியம்சன், 'இந்திய வேகப்பந்து வீச்சாளரான பும்ராதான் நான் எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர்" என்று கூறினார்.
___________________________________________________________________________
ஷமி மோசமான சாதனை
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக டேரில் மிச்செல் 63 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து இலக்கை நோக்கி இந்தியா களமிறங்க உள்ளது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி 9 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் மட்டும் வீழ்த்தி 74 ரன்களை வாரி வழங்கியுள்ளார். இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் ஒரு ஆட்டத்தில் அதிக ரன்களை வாரி வழங்கிய 2-வது இந்திய பவுலர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார். இதில் உமேஷ் யாதவ் 2013-ல் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 75 ரன்கள் வழங்கியதே முதலிடத்தில் உள்ளது.
___________________________________________________________________________
வெற்றிக்காக ரசிகர்கள் பூஜை
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிபெற வேண்டி ரசிகர்கள் யாகம் வளர்த்து பூஜை செய்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 2021-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து கோப்பையை கைப்பற்றியிருந்தது.
இதற்கு பதிலடி தரும் வகையில் இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நாடு முழுவதுமுள்ள ரசிகர்கள் எதிர்நோக்கி இருந்தனர். மறுபுறம் சில ரசிகர்கள் இந்திய அணி வெற்றிக்காக பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலா பகுதியில் கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் யாகம் வளர்த்து பூஜையில் ஈடுபட்டனர். இது குறித்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 1 week ago |
-
இந்திய அணி மோசமான சாதனை
09 Mar 2025துபாய் : நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பீல்டிங்கில் மோசமான சாதனை படைத்துள்ளது.
-
வார விடுமுறையையொட்டி குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
09 Mar 2025கன்னியாகுமரி : வார விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்..
-
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: ஜடேஜா ஓய்வு பெறுகிறார்..?
09 Mar 2025துபாய் : சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் ஜடேஜா? ஜடேஜா செய்த சாதனைகள் பற்றி சமூக வலைதளங்களில் ரசிகர்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர்.
-
இந்தி படிப்பதால் வேலை கிடைக்குமா? - பா.ஜ.க.வினருக்கு திருமாவளவன் கேள்வி
09 Mar 2025சென்னை : இந்தி படிப்பதால் எங்கே வேலை கிடைக்கும் என்பதை பா.ஜ.க.வினர் சொல்ல வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
-
இந்தி தெரியாததால் எந்த கஷ்டமும் இல்லை: கனிமொழி எம்.பி. பேட்டி
09 Mar 2025சென்னை : இந்தி தெரியாததால் தனக்கு எந்த கஷ்டமும் ஏற்படவில்லை என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
-
சிரியா உள்நாட்டுப் போரில் ஆயிரக்கணக்கானோர் பலி
09 Mar 2025டமாஸ்கஸ் : சிரியாவில் உள்நாட்டுப் போரில் 2 நாள்களில் ஆயிரக்கணக்கானோர் பலியானதாக போர் கண்காணிப்புக் குழு தெரிவித்தது.
-
ஜம்மு காஷ்மீரில் காணாமல் போன 3 பேர் சடலமாக மீட்கப்பட்டதால் பதற்றம்
09 Mar 2025ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் காணாமல் போன 3 பேர் சடலமாக மீட்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
-
எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடிய வில்லை: ஸ்மிருதி மந்தனா வருத்தம்
09 Mar 2025லக்னோ : கடைசி 5 ஆட்டங்களில் எங்களுக்கு இருந்த எதிர்பார்ப்புகளை எங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை என ஸ்மிருதி மந்தனா தெரிவித்தார்.
-
உங்கள் சொத்து சூறையாடப்படும்: டிரம்புக்கு பாலஸ்தீனர்கள் எச்சரிக்கை
09 Mar 2025எட்ன்பர்க் : காஸாவைக் கைப்பற்றினால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சொத்துகள் சூறையாடப்படும் என்று பாலஸ்தீனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
போப் உடல் நிலை குறித்து வாடிகன் தகவல்
09 Mar 2025வாடிகன் : போப் பிரான்சிஸுக்கு காய்ச்சல் இல்லை என்றும் அவரின் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு சீராக இருப்பதாகவும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) வாடிகன் தெரிவித்துள்ளது.
-
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி: இந்திய அணிக்கு 252 ரன்கள் இலக்கு
09 Mar 2025துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி, இந்தியாவுக்கு 252 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
-
குஜராத் பயிற்சியாளராக மேத்யூ வேட் நியமனம்
09 Mar 2025மும்பை : குஜராத் டைட்டன்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
வேட்டி சட்டையில் எம்.எஸ்.டோனி
09 Mar 202518-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது.
-
பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய அதிபர் யூன்சுக் சிறையில் இருந்து விடுவிப்பு
09 Mar 2025சியோல் : ராணுவச் சட்டத்தை அமல்படுத்தி கிளர்ச்சியைத் தூண்டிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் சனிக்கிழமை சிறையில் இருந்து விடுவி
-
கடலூரில் மீனவர்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்த விஜய் திட்டம்?
09 Mar 2025சென்னை : இலங்கை கடற்படை, மத்திய அரசை கண்டித்து மீனவர்களை திரட்டி கடலூரில் ஆர்ப்பாட்டம் நடத்த விஜய் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
-
இளையராஜாவின் சிம்பொனி அரங்கேற்றம்: லண்டனில் இசையில் மூழ்கிய ரசிகர்கள்
09 Mar 2025லண்டன் : லண்டனில் உள்ள புகழ்பெற்ற எவென்டிம் அப்பல்லோ அரங்கில் நடைபெற்ற சிம்பொனி அரங்கேற்ற நிகழ்ச்சியில் ரசிகர்கள் மெய்மறந்து இசையில் மூழ்கினர்.
-
முதல் அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை அறிமுகப்படுத்திய வட கொரியா..!
09 Mar 2025பியாங்யங் : வட கொரியா தனது முதல் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை அறிமுகப்படுத்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-03-2025.
10 Mar 2025 -
பாம்பன் புதிய ரெயில் பாலத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை
09 Mar 2025ராமேசுவரம் : பாம்பன் புதிய ரெயில் பாலத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
சென்னையில் தி.மு.க. சார்பில் படகுப்போட்டி
09 Mar 2025சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தி.மு.க. சார்பில் மாபெரும் படகுப்போட்டி நடைபெற்றது.
-
பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம்: அமெரிக்கர்களுக்கு அறிவுறுத்தல்
09 Mar 2025நியூயார்க் : பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணங்களில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல் அடிக்கடி நடந்து வருகிறது.
-
அர்ஜென்டினாவில் ஒரு ஆண்டுக்கான மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்தது : வெள்ளப்பெருக்கில் 13 பேர் பலி
09 Mar 2025பியூனஸ் ஐர்ஸ் : அர்ஜென்டினாவில் ஒரு வருடத்திற்குத் தேவையான மழை சில மணி நேரங்களிலேயே பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
-
அமைதியை நிலைநாட்டுவோம்: சிரிய மக்களுக்கு அழைப்பு விடுத்தார் அதிபர்
10 Mar 2025டமாஸ்கஸ் : சிரியாவில் அமைதியை நிலை நாட்டுவோம் என்று அதிபர் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
-
தமிழகத்திற்கு கல்வி நிதி தர மறுப்பு: தி.மு.க. கடும் எம்.பி.க்கள் அமளி; பார்லி. மக்களவை ஒத்திவைப்பு
10 Mar 2025புதுடெல்லி : தமிழகத்திற்கு கல்வி நிதி தர மறுக்கும் மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கடும் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்ற மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
-
பாஸ்போர்ட் ரத்தால் லலித் மோடிக்கு சிக்கல்: இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா?
10 Mar 2025போர்ட் விலா: வானுவாட்டு தீவின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளதால் லலித் மோடிக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.