எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை, மதுரை சித்திரை திருவிழாவின்போது, உயிர்ச் சேதம் போன்ற எந்த ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் பகுதியை ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
மதுரை சித்திரைத் திருவிழா ஏப்.29-ம் தேதி தொடங்குகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் மே.12-ல் நடக்கிறது. அப்போது, பல லட்சம் பக்தர்கள் கோரிப்பாளையம் பகுதியில் திரள்வது வழக்கம். அப்பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணி நடப்பதாலும், கட்டுமான பொருட்களாலும் பக்தர்களுக்கு ஏற்படும் இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள், பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு, பி. மூர்த்தி, பழனிவேல் தியாகராசன், மதுரை மாநகர மேயர் இந்திராணி, ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் சத்ரா விஜயன், மாநகர காவல் ஆணையர் லோகநாதன், கோ. தளபதி எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் கோரிப்பாளையம் பகுதியில் ஆய்வு செய்தனர்.
இதன்பின்பு, அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது: விரைவில் சித்திரை திருவிழா தொடங்கும் நிலையில் கோரிப்பாளையம் மேம்பாலம் பணி, கட்டுமான பொருட்களால் இடையூறு ஏற்படும் என, மக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இடையூறாக இருக்கும் கட்டுமான பொருட்களை அப்புறப்படுத்த முதல்வர் உத்தரவிட்டார். இதன்படி, அமைச்சர்கள், அதிகாரிகள் ஆய்வு செய்தோம். மே 10-ம் தேதிக்குள் கோரிப்பாளையம் பகுதியிலுள்ள கட்டுமான பொருட்களை அகற்ற கட்டுமான நிறுவனம், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். வைகையில் சுவாமி இறக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடக்க தகுந்த ஏற்பாடு செய்யப்படும்.
மேம்பாலப்பணி குறிப்பிட்ட காலத்தில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலமடை மேம்பாலம் பணி 75 சதவீதமும், கோரிப்பாளையம் பாலம் 65 சதவீதமும் முடிந்துள்ளது. டிசம்பருக்குள் பால பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
சித்திரைத்திருவிழா போன்ற நேரத்தில் காவல்துறை பணி முக்கியம். 10 லட்சத்துக்கும் அதிகமானோர் இப்பகுதியில் கூடும்போது, அவர்களை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு, தேவை காவல்துறையினருக்கு இருக்கிறது பக்தர்களை துன்புறுத்த வேண்டும் என்ற எண்ணம் காவல்துறைக்கு இல்லை. காவல்துறை, மாவட்ட நிர்வாகத்தை அழைத்து பேசியுள்ளோம்
இத்திருவிழாவையொட்டி நேர்த்திக்கடனுக்கென பக்தர்களுக்கு உணவு வழங்குவதில் கட்டுப்பாடு விதிப்பதாக புகார் தெரிவிக்கின்றனர். பொதுவாக அறநிலையத்துறை சார்பில், மாவட்ட நிர்வாகம் அனுமதித்த சில இடங்களில் சுத்தமில்லாத, ஆரோக்கியமற்ற உணவு பொருட்களை வழங்கக்கூடாது. ஹோட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வில் சில ஹோட்டல்களில் கலப்படம் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார். இதைத்தொடர்ந்து அவர் மதுரை மேலமடை பகுதியில் நடக்கும் மேம்பால பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 3 weeks ago |
-
அமெரிக்காவில் ராகுல் காந்தி
20 Apr 2025வாஷிங்டன், காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்கா சென்றடைந்தார்.
-
மக்கள் குறைகளை தீர்க்காத அரசு: திருச்சி சம்பவத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
20 Apr 2025சென்னை, திருச்சியில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்து மூன்று பேர் உயிரிழந்தது தொடர்பாக, ‘மக்களின் குறைகளை கேட்காத, அவற்றை நிறைவேற்றாத தி.மு.க.
-
தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வா? முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
20 Apr 2025சென்னை, அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணையும் என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுபற்றி தி.மு.க.
-
அரசு ஊழியர்கள் புத்தகங்கள் வெளியிட அனுமதி தேவையில்லை: தமிழக அரசு
20 Apr 2025சென்னை, அரசு ஊழியர்கள் புத்தகங்கள் எழுதி வெளியிட அனுமதி தேவையில்லை என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
-
ஆரோக்கியமாக இருக்க அமித்ஷா பகிர்ந்த சீக்ரெட்
20 Apr 2025புதுடில்லி, ஆரோக்கியமாக இருப்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.
-
சுப்ரீம் கோர்ட்டை விமர்சித்த பா.ஜ.க. எம்.பி.க்கள் - ஜே.பி.நட்டா விளக்கம்
20 Apr 2025புதுடில்லி, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்த நிலையில் அது தொடர்பான வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு கவர்னருக்கு கடும்
-
உத்தவ், ராஜ் தாக்கரே இணைவதில் மகிழ்ச்சி: மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்
20 Apr 2025மும்பை, மகாராஷ்டிரா அரசியலில் முக்கிய புள்ளிகளாக உள்ள உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் மீண்டும் ஒன்றிணைய உள்ளது தங்களுக்கு மகிழ்ச்சி என மகாராஷ்டிரா முதல்வர்
-
திருநங்கைகள் குறித்து இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக போராட்டம்
20 Apr 2025லண்டன், இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட், சட்டப்படி பெண் என்பவர் யார் என்பது குறித்த வழக்கில் அளித்த தீர்ப்பில் பெண்ணாகப் பிறந்தவரை மட்டுமே சட்டப்படி பெண்ணாகக் கருத முடியும்
-
சீனாவில் 10ஜி இணைய சேவை அறிமுகம்
20 Apr 2025பெய்ஜிங், ஹூவாய் தொழில்நுட்ப நிறுவனம், சீனா யூனிகாம் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து, ஹெபெய் மாகாணத்தின் சியோங்கான் நியூ என்ற பகுதியில் சீனாவின் முதல் 10-ஜி ஸ்டாண்ட
-
திருமணமானதை மறைத்து மோசடி: நடிகர் காதல் சுகுமார் மீது வழக்கு பதிவு
20 Apr 2025சென்னை, திருமணம் செய்து கொள்வதாக கூறி நகை, பணத்தை மோசடி செய்ததாக துணை நடிகை அளித்த புகாரின் பேரில் நடிகர் காதல் சுகுமார் மீது மாம்பலம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர
-
ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பு: திடீர் மழை, வெள்ளத்தில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு
20 Apr 2025ராம்பன், ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் செனாப் ஆற்றை ஒட்டி அமைந்துள்ள தரம் குந்த் பகுதியில் மேக வெடிப்பால் நேற்று முன்தினம் இரவு முதல் பொழிந்த மழையால் திடீர் வெள
-
பா.ஜ.-அ.தி.மு.க. கூட்டணியால் தி.மு.க. மேலும் வலுப்பெறும் சி.பி.எம். பொதுச் செயலாளர் பேபி கருத்து
20 Apr 2025சென்னை, பா.ஜ.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் இடையே சந்தர்ப்பவாத கூட்டணி ஏற்பட்டுள்ளதால் மக்கள் திமுக தலைமையிலான அணிக்கு மேலும் வலுசேர்ப்பார்கள் என்று நம்புவதாக சி.பி.எம்
-
அ.தி.மு.க. சார்பில் மே தின விழா பொதுக்கூட்டங்கள்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
20 Apr 2025சென்னை, அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டங்கள் நடந்திடவேண்டும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து
-
கழிவு நீர் கலந்த குடிநீர் குடித்து 3 பேர் பலி: குடிநீர் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைப்பு
20 Apr 2025திருச்சி, திருச்சியில் கழிவு நீர் கலந்த குடிநீர் குடித்து 3 பேர் பலியானதாக வெளியான தகவலை அடுத்து குடிநீர் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்: ரஷ்யா மீது உக்ரைன் குற்றச்சாட்டு
20 Apr 2025கீவ், ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்த 30 மணி நேர போர் நிறுத்தத்தை மீறி ரஷ்ய படைகள் உக்ரைன் மீது 387 குண்டு வீச்சுத் தாக்குதல்களையும்
-
அமெரிக்கா: விமான விபத்தில் 4 பேர் பலி
20 Apr 2025வாஷிங்டன், அமெரிக்காவின் இல்லினாய்ஸில் சிறிய ரக விமானம் வெடித்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர்.
-
காஸாவில் போரிடுவதை தவிர வேறுவழியில்லை: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தகவல்
20 Apr 2025டெல்அவிவ், காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல்களில் கடந்த இரு நாள்களில் 90க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
-
ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு கிறிஸ்துவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
20 Apr 2025சென்னை, ஈஸ்டர் திருநாள் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள கிறிஸ்துவ தேவாலங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.
-
அடுத்த 10 நாட்கள் வெயில் சுட்டெரிக்கும்: வானிலை ஆய்வாளர்கள் தகவல்
20 Apr 2025சென்னை, தமிழகத்தில் அடுத்த 10 நாட்கள் வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மா.கம்யூ. கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி சந்திப்பு
20 Apr 2025சென்னை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தேசிய பொதுச்செயலர் எம்.ஏ. பேபி சந்தித்து பேசினார்.
-
நம்பிக்கை, இரக்கத்தை ஊக்குவிக்கட்டும்: பிரதமர் மோடி ஈஸ்டர் திருநாள் வாழ்த்து
20 Apr 2025புதுடில்லி, இந்த புனிதமான தருணம் ஒவ்வொருவரிடமும் நம்பிக்கை, புதுப்பித்தல், இரக்கத்தை ஊக்குவிக்கட்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
மதுரை சித்திரைத் திருவிழா ஏற்பாடுகள்: அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு
20 Apr 2025மதுரை, மதுரை சித்திரை திருவிழாவின்போது, உயிர்ச் சேதம் போன்ற எந்த ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும்
-
தி.மு.க.வை மட்டுமே வி.சி.க. நம்பி இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்: திருமாவளவன் குற்றச்சாட்டு
20 Apr 2025சென்னை, தி.மு.க.வை மட்டுமே வி.சி.க. நம்பி இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் என்று திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார்.
-
கவர்னர் பதவி என்பது ஒரு கவுரவப் பதவிதான்: மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே கவர்னர் என்பவர் தபால்காரர்தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து
20 Apr 2025சென்னை, கவர்னரின் அதிகாரம் என்பது ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே தபால்காரராக இருப்பது மட்டுமே என்று ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தமிழ்நாடு முதல்வர் மு
-
பா.ஜ.க.வின் மும்மொழிக் கொள்கை தமிழ்நாட்டின் வளர்ச்சியை சிதைக்கும் மறைமுக திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
20 Apr 2025சென்னை, அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி தி.மு.க. அணியால் ஏற்கெனவே தோற்கடிக்கப்பட்ட கூட்டணிதான். ஒரு முறை அல்ல; இரு முறை.