எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி தி.மு.க. அணியால் ஏற்கெனவே தோற்கடிக்கப்பட்ட கூட்டணிதான். ஒரு முறை அல்ல; இரு முறை. 2024 பாராளுமன்றத் தேர்தலிலேயே இரு கட்சிகளும் பிரிந்தது போலத் தெரிந்தாலும் கள்ளக்கூட்டணியாகத்தான் இருந்தார்கள் என்று குற்றம் சாட்டினேன். அதை வெளிப்படுத்தும் வகையில்தான் அண்மைக்கால நிகழ்வுகள் உள்ளன.” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க.வின் தொகுதி மறுவரையறை எதிர்ப்பு, இந்தித் திணிப்புகள் கொள்கைகள், தமிழக சட்டம் - ஒழுங்கு நிலவரம் எனப் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார். அந்தப் பேட்டியில் இடம்பெற்ற சில கேள்விகளின் தொகுப்பு வருமாறு:-
தொகுதி மறுவரையறையை ஏன் எதிர்க்கிறீர்கள்..?
சிறு திருத்தம். தொகுதி மறுசீரமைப்பை தி.மு.க. எதிர்க்கவில்லை. எதிர்வரவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பைத்தான் உறுதியாக எதிர்க்கிறோம். மக்கள்தொகைக் கட்டுப்பாடு என்பது நாட்டின் பொருளாதாரம் - மக்களின் நல்வாழ்வு - வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு 50 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்டது. நாட்டு நலனில் அக்கறை உள்ள மாநிலமாகத் தமிழ்நாடும் தென்மாநிலங்களும் இருந்த காரணத்தால் குடும்பக் கட்டுப்பாடுத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம்.
மக்கள்தொகைப் பெருக்கம் என்ற நெருக்கடியை, மனிதவள ஆற்றல் என்ற சாதகமான அம்சமாக மாற்றியதில் தமிழ்நாட்டின் பங்கு முக்கியமானது. நாட்டின் நலனுக்காக மத்திய அரசு முன்வைத்த ஒரு திட்டத்தைச் சிறப்பாக நிறைவேற்றிய தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்குத் தண்டனையாக, அதே மக்கள்தொகையை அடிப்படையாக வைத்து பாராளுமன்றத் தொகுதிகளைக் குறைப்பது என்ன நியாயம்? இந்த அளவுகோலைத்தான் எதிர்க்கிறாம்.
1971-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என நீங்கள் கோருவது தமிழ்நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளை பற்றி பேசாமல் மக்களை திசைதிருப்பவே என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். அதற்கு தங்களின் பதில் என்ன?
தி.மு.க.வின் மாநில உரிமைக் குரலுக்கு நியாயமான பதில் சொல்ல முடியாதவர்கள்தான் திசை திருப்புகிறார்கள். மத்திய அரசு வெளியிடும் புள்ளிவிவரங்கள், அறிக்கைகளின்படியே தமிழ்நாடு பல்வேறு இலக்குகளில் முன்னேறியிருக்கிறது. திராவிட மாடல் அரசின் திட்டங்கள் தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் போய்ச் சேர்ந்திருக்கிறது. மக்களின் ஆதரவு தி.மு.க.வுக்கு வலுவாக உள்ளது. எனவே, திசை திருப்ப வேண்டிய சூழலோ அவசியமோ எங்களுக்கு கிடையாது.
1971 மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு என்பது ஏற்கெனவே இந்திய அளவில் விவாதிக்கப்பட்டதுதான். அது மேலும் 25 ஆண்டுகளுக்குத் தொடரவேண்டும் என்றுதான் வலியுறுத்துகிறோம்.
மும்மொழிக் கொள்கை தமிழ்நாட்டுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் இன்னொரு சர்ச்சைக்குரிய விசயமாக இருந்து வருகிறது. இந்தி திணிப்பு பற்றிய உங்களது பயம் அதீதமா அல்லது உண்மையா?
இந்திமொழி ஆதிக்கம் என்பது எத்தகைய மோசமான விளைவுகளை உருவாக்கும் என்பதற்கும், இந்தித் திணிப்பினால் வடமாநிலங்களிலேயே பலர் அவரவர் தாய்மொழிகளையும், வட்டார மொழிகளையும் கடந்த ஐம்பதாண்டுகளில் இழந்திருப்பதையும் ஆதாரத்துடன் முன்வைத்திருக்கிறோம்.
தமிழ்நாடு ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு முன்பே இதுகுறித்த விழிப்புணர்வுடனும், தொலைநோக்குப் பார்வையுடனும் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து நின்றது. அதில் திராவிட இயக்கத்தின் பங்கு முக்கியமானது. தி.மு.க. ஆதரவு மாணவர்கள் – இளைஞர்கள் - தொண்டர்கள் பலர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். தி.மு.க. தலைவர்கள் கொடுமையான சிறைத் தண்டனையை எதிர்கொண்டனர். பேரறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்ததும் இருமொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தினார்.
அதுதான் இன்றைய தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழ் மொழி - பண்பாட்டின் பாதுகாப்பிற்கும் அடித்தளமாக உள்ளது. மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு உறுதியுடன் எதிர்ப்பதற்கு காரணம், அது தமிழ்நாட்டின் வளர்ச்சியை சிதைக்கும் நோக்கிலான பா.ஜ.க. அரசின் மறைமுகத் திட்டம் என்பதால்தான்.
நீங்கள் பிரிவினைவாதம் மற்றும் வெறுப்பு அரசியலை முன்னெடுக்கிறீர்கள் என பா.ஜ.க. உங்கள் மீது வைக்கும் குற்றசாட்டுகளுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
அரசியல்சட்டம் தந்த கூட்டாட்சி கோட்பாட்டை பாதுகாக்க குரல் கொடுப்பதும், அரசியல் சட்ட அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட மொழிகளை வளர்க்கப் பாடுபடுவதும் எப்படி பிரிவினை அரசியலாக இருக்க முடியும்? வெறுப்பையே அரசியல் கொள்கையாகக் கொண்ட பா.ஜ.க., உருவாக்கிய மதக் கலவரங்கள், இனக்கலவரங்கள் இன்னமும் இந்திய வரலாற்றின் கறை படிந்த பக்கங்களாக உள்ளன. மணிப்பூர் மாநிலம் இப்போதும் கலவரத்தின் பச்சை ரத்தம் காயாத பூமியாக உள்ளது. நாடு போர்க்களத்தில் நின்ற ஒவ்வொரு நேரத்திலும் துணை நின்று- அதிக அளவில் நிதி தந்து இந்த நாட்டிற்கு உற்ற துணையாக இருந்த தமிழ்நாட்டைப் பார்த்து- தி.மு.க.வைப் பார்த்து பா.ஜ.க.வினர் குற்றம்சாட்டுவது, மல்லாக்கப் படுத்துக்கொண்டு எச்சில் துப்புவது போலத்தான் இருக்கிறது.
பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணியை வலிமையான எதிரியாக பார்க்கிறீர்களா? அவர்கள் ஒன்று சேர்ந்திருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?
இது தி.மு.க. அணியால் ஏற்கெனவே தோற்கடிக்கப்பட்ட கூட்டணிதான். ஒரு முறை அல்ல; இரு முறை. 2024 பாராளுமன்றத் தேர்தலிலேயே இரு கட்சிகளும் பிரிந்தது போலத் தெரிந்தாலும் கள்ளக்கூட்டணியாகத்தான் இருந்தார்கள் என்று குற்றம் சாட்டினேன். அதை வெளிப்படுத்தும் வகையில்தான் அண்மைக்கால நிகழ்வுகள் இருந்தன. தமிழ்நாட்டிற்கு வஞ்சகம் செய்யும் பா.ஜ.க.வையும், அதனுடன் கூட்டணி சேர்ந்து துரோகம் இழைக்கும் அ.தி.மு.க.வையும், மூன்றாவது முறையும் தமிழ்நாட்டு மக்கள் தோற்கடிப்பார்கள்.
உங்கள் அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் தற்போது சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக எதிர்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
முத்திரைத் திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றி, நல்லாட்சிக்கு இலக்கணமாக திராவிட மாடல் அரசு செயலாற்றி வருகிறது. நலத் திட்டங்களின் பயனாளிகளாக இருக்கும் மக்கள் போற்றுகிறார்கள். பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சீரழிந்து கிடந்த நிர்வாகம் இப்போது சீரடைந்து இருக்கிறது. சட்டம்- ஒழுங்கு, பொது அமைதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு காவல்துறை தலைநிமிர்ந்து செயலாற்றுகிறது. தொழில் முதலீடுகள், புதிய வேலை வாய்ப்புகள், மாநிலம் முழுவதும் பரவலான வளர்ச்சி என தமிழ்நாடு முதன்மை மாநிலமாக – முன்னனி மாநிலமாக நிற்கிறது.
இவற்றை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள், இந்த அரசின் மீது எவ்வித குற்றச்சாட்டையும் கூற முடியாத எதிர்க்கட்சிகள், கற்பனை குற்றச்சாட்டுகளைக் கூறி விதண்டவாத அரசியலும் - வீண் பிரச்சாரமும் செய்கிறார்கள். உண்மை நிலை என்ன என்பது ஒவ்வொரு திட்டத்திலும் பயன் பெறும் மக்களுக்கும், ஒவ்வொரு பகுதிக்கும் பயணித்துவிட்டு பத்திரமாகத் திரும்புகிறவர்களுக்கும் தெரியும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 3 weeks ago |
-
அரசு ஊழியர்கள் புத்தகங்கள் வெளியிட அனுமதி தேவையில்லை: தமிழக அரசு
20 Apr 2025சென்னை, அரசு ஊழியர்கள் புத்தகங்கள் எழுதி வெளியிட அனுமதி தேவையில்லை என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
-
தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வா? முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
20 Apr 2025சென்னை, அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணையும் என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுபற்றி தி.மு.க.
-
அமெரிக்காவில் ராகுல் காந்தி
20 Apr 2025வாஷிங்டன், காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்கா சென்றடைந்தார்.
-
ஆரோக்கியமாக இருக்க அமித்ஷா பகிர்ந்த சீக்ரெட்
20 Apr 2025புதுடில்லி, ஆரோக்கியமாக இருப்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.
-
மக்கள் குறைகளை தீர்க்காத அரசு: திருச்சி சம்பவத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
20 Apr 2025சென்னை, திருச்சியில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்து மூன்று பேர் உயிரிழந்தது தொடர்பாக, ‘மக்களின் குறைகளை கேட்காத, அவற்றை நிறைவேற்றாத தி.மு.க.
-
சுப்ரீம் கோர்ட்டை விமர்சித்த பா.ஜ.க. எம்.பி.க்கள் - ஜே.பி.நட்டா விளக்கம்
20 Apr 2025புதுடில்லி, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்த நிலையில் அது தொடர்பான வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு கவர்னருக்கு கடும்
-
சீனாவில் 10ஜி இணைய சேவை அறிமுகம்
20 Apr 2025பெய்ஜிங், ஹூவாய் தொழில்நுட்ப நிறுவனம், சீனா யூனிகாம் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து, ஹெபெய் மாகாணத்தின் சியோங்கான் நியூ என்ற பகுதியில் சீனாவின் முதல் 10-ஜி ஸ்டாண்ட
-
திருமணமானதை மறைத்து மோசடி: நடிகர் காதல் சுகுமார் மீது வழக்கு பதிவு
20 Apr 2025சென்னை, திருமணம் செய்து கொள்வதாக கூறி நகை, பணத்தை மோசடி செய்ததாக துணை நடிகை அளித்த புகாரின் பேரில் நடிகர் காதல் சுகுமார் மீது மாம்பலம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர
-
உத்தவ், ராஜ் தாக்கரே இணைவதில் மகிழ்ச்சி: மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்
20 Apr 2025மும்பை, மகாராஷ்டிரா அரசியலில் முக்கிய புள்ளிகளாக உள்ள உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் மீண்டும் ஒன்றிணைய உள்ளது தங்களுக்கு மகிழ்ச்சி என மகாராஷ்டிரா முதல்வர்
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்: ரஷ்யா மீது உக்ரைன் குற்றச்சாட்டு
20 Apr 2025கீவ், ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்த 30 மணி நேர போர் நிறுத்தத்தை மீறி ரஷ்ய படைகள் உக்ரைன் மீது 387 குண்டு வீச்சுத் தாக்குதல்களையும்
-
திருநங்கைகள் குறித்து இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக போராட்டம்
20 Apr 2025லண்டன், இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட், சட்டப்படி பெண் என்பவர் யார் என்பது குறித்த வழக்கில் அளித்த தீர்ப்பில் பெண்ணாகப் பிறந்தவரை மட்டுமே சட்டப்படி பெண்ணாகக் கருத முடியும்
-
அடுத்த 10 நாட்கள் வெயில் சுட்டெரிக்கும்: வானிலை ஆய்வாளர்கள் தகவல்
20 Apr 2025சென்னை, தமிழகத்தில் அடுத்த 10 நாட்கள் வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
அ.தி.மு.க. சார்பில் மே தின விழா பொதுக்கூட்டங்கள்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
20 Apr 2025சென்னை, அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டங்கள் நடந்திடவேண்டும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து
-
ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பு: திடீர் மழை, வெள்ளத்தில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு
20 Apr 2025ராம்பன், ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் செனாப் ஆற்றை ஒட்டி அமைந்துள்ள தரம் குந்த் பகுதியில் மேக வெடிப்பால் நேற்று முன்தினம் இரவு முதல் பொழிந்த மழையால் திடீர் வெள
-
பா.ஜ.-அ.தி.மு.க. கூட்டணியால் தி.மு.க. மேலும் வலுப்பெறும் சி.பி.எம். பொதுச் செயலாளர் பேபி கருத்து
20 Apr 2025சென்னை, பா.ஜ.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் இடையே சந்தர்ப்பவாத கூட்டணி ஏற்பட்டுள்ளதால் மக்கள் திமுக தலைமையிலான அணிக்கு மேலும் வலுசேர்ப்பார்கள் என்று நம்புவதாக சி.பி.எம்
-
கழிவு நீர் கலந்த குடிநீர் குடித்து 3 பேர் பலி: குடிநீர் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைப்பு
20 Apr 2025திருச்சி, திருச்சியில் கழிவு நீர் கலந்த குடிநீர் குடித்து 3 பேர் பலியானதாக வெளியான தகவலை அடுத்து குடிநீர் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
-
அமெரிக்கா: விமான விபத்தில் 4 பேர் பலி
20 Apr 2025வாஷிங்டன், அமெரிக்காவின் இல்லினாய்ஸில் சிறிய ரக விமானம் வெடித்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மா.கம்யூ. கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி சந்திப்பு
20 Apr 2025சென்னை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தேசிய பொதுச்செயலர் எம்.ஏ. பேபி சந்தித்து பேசினார்.
-
ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு கிறிஸ்துவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
20 Apr 2025சென்னை, ஈஸ்டர் திருநாள் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள கிறிஸ்துவ தேவாலங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.
-
கவர்னர் பதவி என்பது ஒரு கவுரவப் பதவிதான்: மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே கவர்னர் என்பவர் தபால்காரர்தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து
20 Apr 2025சென்னை, கவர்னரின் அதிகாரம் என்பது ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே தபால்காரராக இருப்பது மட்டுமே என்று ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தமிழ்நாடு முதல்வர் மு
-
காஸாவில் போரிடுவதை தவிர வேறுவழியில்லை: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தகவல்
20 Apr 2025டெல்அவிவ், காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல்களில் கடந்த இரு நாள்களில் 90க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
-
நிர்வாகக் குழுக்கூட்டத்தில் நடந்தது என்ன? துரை வைகோ - மல்லை சத்யா சமரசம்
20 Apr 2025சென்னை, ம.தி.மு.க. நிர்வாகக் குழுக் கூட்டத்தில் நடந்த விவாதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
பா.ஜ.க.வின் மும்மொழிக் கொள்கை தமிழ்நாட்டின் வளர்ச்சியை சிதைக்கும் மறைமுக திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
20 Apr 2025சென்னை, அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி தி.மு.க. அணியால் ஏற்கெனவே தோற்கடிக்கப்பட்ட கூட்டணிதான். ஒரு முறை அல்ல; இரு முறை.
-
மதுரை சித்திரைத் திருவிழா ஏற்பாடுகள்: அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு
20 Apr 2025மதுரை, மதுரை சித்திரை திருவிழாவின்போது, உயிர்ச் சேதம் போன்ற எந்த ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும்
-
கல்விக்கட்டண நிர்ணய விண்ணப்பம்: தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை அறிவுறுத்தல்
20 Apr 2025சென்னை, புதிய கல்விக் கட்டண நிர்ணய விண்ணப்பங்களை தனியார் பள்ளிகள் மே 15-க்குள் சமர்ப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.