முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்காசி தோரணமலை கிரிவல பாதை அமைக்கப்படுமா? - சட்டசபையில் அமைச்சர் சேகர்பாபு பதில்

செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2025      தமிழகம்
Sekar-Babu 2023-04-20

Source: provided

சென்னை : தென்காசி தோரணமலை கிரிவல பாதை அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது. இதில், உறுப்பினர்களில் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அந்த வகையில், தென்காசி மாவட்டம் கடையம் அருகே தோரணமலை முருகன் கோவிலில், மலையை சுற்றி கிரிவல பாதை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? தென்காசி ஆலங்குளம் தொகுதி அ.தி.மு.க. உறுப்பினர் பால் மனோஜ் பாண்டியன் கேள்வி எழுப்பினார்.

அந்த கேள்விக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்து கூறியதாவது, தோரணமலை முருகன் கோவில் நிர்வாகத்திடம் போதிய நிதி வசதி இல்லாததால் உபயதாரர்களை எதிர்நோக்கி காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அடுத்த 3 மாதத்திற்குள் தோரணமலை கிரிவல பாதை பணிகள் தொடங்கும்' என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து