எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தமிழக சட்ட சபையில் மின்சாரத்துறை மானியக் கோரிக்கையின் போது முக்கிய அறிவிப்புகளை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டார்.
அதன்படி,
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தால் இந்த ஆண்டில் 50,000 புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும்.தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் தேவைக்கேற்ப நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 600 மெகாவாட் அனல் மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று செந்தில் பாலாஜி அறிவித்தார்.
மேலும் அவர் வெளியிடப்பட்ட அறிவிப்பில், “ரூ.57 கோடி மதிப்பீட்டில், மன்னார்குடி, மலைக்கோட்டை, சிதம்பரம், திருஉத்திரக்கோசமங்கை, திருவிடந்தை, சமயபுரம், மேல்மலையனூர், திருவிடைமருதூர், காளையார் கோவில் ஆகிய ஊர்களில் அமைந்துள்ள தேரோடும் வீதிகள் மற்றும் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் செல்லும் மேல்நிலை மின் பாதைகள் புதைவடங்களாக மாற்றி அமைக்கப்படும்.
ரூ.490 கோடி மதிப்பீட்டில் இயற்கை பேரிடர்களால் இன்னலுக்கு உட்படும் கடலோர நகரங்களான கடலூர் மற்றும் நாகப்பட்டினத்தில் மேல்நிலை மின் பாதைகள் புதைவடங்களாக மாற்றி அமைக்கப்படும்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் பல்வேறு மின் கழகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர்கள் பயன்பெறும் வகையில் தற்பொழுது இயக்கத்தில் உள்ள மருந்தகங்கள் மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ரூ.215 கோடி மதிப்பீட்டில் 18 புதிய 33/11 கி.வோ துணை மின் நிலையங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும். ரூ. 55 கோடி மதிப்பீட்டில், 26 துணை மின் நிலையங்களில் (33/11 கி.வோ) தற்போதுள்ள மின்மாற்றிகளின் திறன் மேம்படுத்தப்படும்.
ரூ.500 கோடி மதிப்பீட்டில் தூத்துக்குடி அனல் மின் நிலையம், மேட்டூர் அனல் மின் நிலையம்–I, மேட்டூர் அனல் மின் நிலையம்–II, வட சென்னை அனல் மின் நிலையம்-I மற்றும் வட சென்னை அனல் மின் நிலையம்-II ஆகியவற்றில் உள்ள பல்வேறு உபகரணங்களில் மூலதனப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
ரூ. 111 கோடி மதிப்பீட்டில் வழுதூர் எரிவாயு மின் நிலையம் – I (95 மெகாவாட்) சுழலியின் வெப்ப எரிவாயு பாதை ஆய்வு மற்றும் உலர்ந்த நைட்ரஜன் ஆக்சைடு (DLN) கட்டுப்படுத்தும் அமைப்பின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும். காடம்பாறை (4x100 மெகாவாட்) நீரேற்று புனல் மின் நிலையத்தை புதுப்பித்து நவீனப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய, எஞ்சிய ஆயுள் மதிப்பீட்டு ஆய்வுப் பணி மேற்கொள்ளப்படும்.
ரூ.1,192 கோடி மதிப்பீட்டில், ஒரு புதிய 400 கி.வோ துணை மின் நிலையம் மற்றும் 11 புதிய 110 கி.வோ துணை மின் நிலையங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.94 கோடி மதிப்பீட்டில், 25 துணை மின் நிலையங்களில் (110 கி.வோ) தற்போதுள்ள மின்மாற்றிகளின் திறன் மேம்படுத்தப்படும்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் அனைத்து களப்பணியாளர்களுக்கும் பணியாளர்களின் பாதுகாப்பிற்காக, பயிற்சி மையங்கள் மூலம் பணியிடத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும்.
திறன் மிகு மின் கட்டமைப்பு செயல்பாட்டிற்கான ஒருங்கிணைந்த மேலாண்மை தகவல் அமைப்பு மேம்பாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தரவு பகுப்பாய்வுகளை மேற்கொள்ள தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் ஒரு சிறப்பு தரவுப் பகுப்பாய்வு பிரிவை உருவாக்கும். ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-04-2025
22 Apr 2025 -
நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக சம்பளம்: தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
22 Apr 2025சென்னை : தொகுப்பூதிய செவிலியர்களுக்கும் நிரந்தர செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
புதுச்சேரியில் பேருந்து நிலையத்தை திறக்க கோரி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
22 Apr 2025புதுச்சேரி : புதுச்சேரியில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை திறக்க வலியுறுத்தி அ.தி.மு.க. மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
-
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கின் முக்கிய குற்றவாளிகளுக்கு ஜாமீன் : சென்னை ஐகோர்ட் உத்தரவு
22 Apr 2025சென்னை : கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் முக்கிய குற்றவாளிகளான தாமோதரன், கன்னுக்குட்டி ஆகியோருக்கு சென்னை ஐகோர்ட் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
-
பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் : சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
22 Apr 2025சென்னை : அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டம் விவகாரத்தில் உரிய நேரத்தில், உரிய முடிவை அரசு எடுக்கும் என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ள
-
காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி
22 Apr 2025ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பேச அனுமதி கொடுக்கவில்லை என்பது ஜனநாயக படுகொலை : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
22 Apr 2025சென்னை : தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் பேச அனுமதி கொடுக்கவில்லை என்பது ஜனநாயக படுகொலை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார். 
-
பென்னாகரம் புளிக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை: அமைச்சர் உறுதி
22 Apr 2025சென்னை : பென்னாகரம் புளிக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
-
யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வில் உ.பி.யை சேர்ந்த மாணவி முதலிடம்
22 Apr 2025புதுடெல்லி : 2024 ஆம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் (ஏப். 22) வெளியிடப்பட்டுள்ளன.
-
சென்னையில் 25-ம் தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
22 Apr 2025சென்னை : சென்னையில் வரும் 25-ம் தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
-
ஊட்டி துணைவேந்தர்கள் மாநாட்டில் குடியரசு துணைத்தலைவர் பங்கேற்பு : ஆளுநர் மாளிகை அறிவிப்பு
22 Apr 2025சென்னை : ஊட்டியில் வரும் ஏப்.25, 26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கலந்து கொண்டு மாநாட்டினைத் தொடங்கி
-
100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு துறைகளில் வேலைவாய்ப்பு : துணை முதல்வர் உதயநிதி தகவல்
22 Apr 2025சென்னை : விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் இந்த ஆண்டு 100 வீரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி தெரிவி
-
போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்வில் தமிழக அரசு சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்பு
22 Apr 2025சென்னை : கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில், தமிழக அரசின் சார்பில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துற
-
நிஷிகாந்த் துபே கருத்துக்கு எதிரான மனு: அடுத்த வாரம் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்
22 Apr 2025புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட் மற்றும் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவை விமர்சித்து பா.ஜ.க.
-
தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருவாய் ரூ. 48,344 கோடியாக அதிகரிப்பு
22 Apr 2025சென்னை : கடந்த 2024-2025ம் நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் 48,344 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஜெய்ப்பூர் ஆம்பர் கோட்டையை பார்வையிட்ட ஜே.டி.வான்ஸ்
22 Apr 2025ஜெய்ப்பூர் : இந்தியா வந்துள்ள அமெரிக்கா துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ், நேற்று குடும்பத்துடன் ஜெய்ப்பூர் ஆம்பர் கோட்டையை பார்வையிட்டார்.
-
மோசடி வழக்கில் நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன்
22 Apr 2025ஹைதராபாத் : ரியல் எஸ்டேட் நிறுவன நிதி மோசடி தொடர்பான வழக்கில் வரும் 28-ம் தேதி ஹைதராபாத் அலுவலகத்தில் ஆஜராக வேண்டுமென தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுக்கு அமலாக்கத்துறை
-
பிராமணர்கள் குறித்த அவதூறு கருத்து: மன்னிப்பு கோரிய அனுராக் காஷ்யப்
22 Apr 2025டெல்லி : பிரமாணர் சமூகம் குறித்த கருத்துக்கு மீண்டும் மன்னிப்புக் கோரியிருக்கிறார் இயக்குநர் அனுராக் காஷ்யப்.
-
அரசு முறை பயணமாக சவுதி அரேபியா சென்றடைந்தார் பிரதமர் நரேந்திரமோடி
22 Apr 2025புதுடெல்லி : "சவுதி அரேபியாவுடனான வரலாற்று ரீதியிலான நீண்ட கால உறவுகளை இந்தியா மதிக்கிறது.
-
சென்னையில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு
22 Apr 2025சென்னை : சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
3 ஆண்டுகளாக நீடிக்கும் உக்ரைன் போர்: அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்: ரஷ்ய அதிபர் புதின் திடீர் அறிவிப்பு
22 Apr 2025மாஸ்கோ : உக்ரைன் போர் தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.
-
புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யும் குழுவில் 4 இந்திய கார்டினல்களுக்கு இடம்
22 Apr 2025வாடிகன் : புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யும் குழுவில் 4 இந்திய கார்டினல்கள் இடம் பெற்றனர்.
-
போப் பிரான்சிஸ் மறைவுக்கு 3 நாட்கள் அரசு துக்கம் அனுசரிப்பு: மத்திய அரசு
22 Apr 2025புதுடெல்லி : போப் பிரான்சிஸின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக 3 நாட்கள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
இங்கிலாந்தில் ரூ. 56 லட்சத்துக்கு ஏலம் போன உடைந்த பூந்தொட்டி!
22 Apr 2025லண்டன் : இங்கிலாந்தில் உடைந்த பூந்தொட்டி ஒன்று ரூ.56 லட்சத்துக்கு ஏலம் போயுள்ளது.
-
சித்ரா பவுர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலையில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து
22 Apr 2025திருவண்ணாமலை : சித்ரா பவுர்ணமி கிரிவலத்தில் திருவண்ணாமலையில் கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.