முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. அரிசி ஆலையில் விஷவாயு தாக்கி 5 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2025      இந்தியா
Suicide 2023 04 29

Source: provided

லக்னோ : உத்தரபிரதேசத்தில் அரிசி ஆலையில் விஷவாயு தாக்கியதில் 5 பேர் உயிரிழந்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் பஹராய்ச் மாவட்டம் பைஹந்தா பகுதியில் அரிசி ஆலை உள்ளது. இந்த ஆலையில் நேற்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலைக்கு சென்றனர். இந்நிலையில், அரிசி ஆலையின் டிரையர் எந்திரத்தில் கரும்புகை வந்துள்ளது. இதையடுத்து அப்பகுதிக்கு 8 தொழிலாளர்கள் சென்று பார்த்துள்ளனர். அப்போது, விஷவாயு தாக்கி அனைவரும் மயங்கி விழுந்தனர். இந்த சம்பவம் குறித்து சக ஊழியர்கள், தீயணைப்புத்துறையினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் அனைவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே 5 பேர் உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். எஞ்சிய 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து