எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, காஷ்மீர் தீவிரவாத முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையோருக்கு கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து மத்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் தீவிரவாத முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த இந்திய ராணுவம் திட்டமிட்டு உள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம், உரியில் உள்ள ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி இந்திய இந்திய கமாண்டோ படை வீரர்கள் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் தரைவழியாக நுழைந்து தீவிரவாத முகாம்களை அழித்தனர். இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமாவில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து தீவிரவாத முகாம்கள் மீது சக்திவாய்ந்த குண்டுகளை வீசின. இதில் சுமார் 300 தீவிரவாதிகள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. தற்போது பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையோருக்கு கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து மத்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:- பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சுமார் 40-க்கும் மேற்பட்ட தீவிரவாத முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த முகாம்களில் பயிற்சி பெறும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் காஷ்மீர் எல்லைக்குள் ஊடுருவி அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே இரு முறை பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்பட்டு உள்ளது. இந்த முறை பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத முகாம்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்படலாம். இல்லையெனில் ட்ரோன்கள் மூலம் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் தீவிரவாத முகாம்கள் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படலாம். இவ்வாறு பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சூரத் போர்க்கப்பல் தற்போது குஜராத் கடல் பகுதியில் முகாமிட்டு உள்ளது. இந்த போர்க்கப்பலில் இருந்து நேற்றுமுன்தினம் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. கப்பலில் இருந்து சீறிப் பாய்ந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்தது என்று கடற்படை தெரிவித்துள்ளது. ஐஎன்எஸ் சூரத் போர்க்கப்பலில் பிரம்மோஸ், பராக் 8 ரக ஏவுகணைகள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை தயாரித்து வருகின்றன. இந்த ஏவுகணைகளை உக்ரைன் போரில் ரஷ்ய ராணுவம் பயன்படுத்தி வருகிறது. இதுகுறித்து உக்ரைன் ராணுவ வட்டாரங்கள் கூறும்போது, “அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அதிநவீன ஏவுகணைகள் எங்களிடம் உள்ளன.
இந்த ஏவுகணைகள் மூலம் ரஷ்யாவின் அனைத்து ஏவுகணைகளையும் எங்களால் இடைமறித்து அழிக்க முடியும். ஆனால் பிரம்மோஸ் ஏவுகணையை மட்டும் எங்களால் தடுத்து நிறுத்த முடியாது. அந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை மிகத் துல்லியமாக தாக்கி அழிக்கும். பிரம்மோஸை எங்களால் இடைமறித்து அழிக்க முடியாது என்று தெரிவித்தன. இந்த சூழலில் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் தீவிரவாத முகாம்கள் மீது பிரம்மோஸ் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. ராணுவ தளபதி ஸ்ரீநகர் பயணம்: ராணுவ தளபதி உபேந்திர திவிவேதி நேற்று காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு செல்கிறார். அங்கு ராணுவ மூத்த தளபதிகளுடன் அவர் முக்க்கிய ஆலோசனை நடத்த உள்ளார். பஹல்காம் தாக்குதலால் இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் எழுந்திருக்கும் சூழலில் ராணுவ தளபதி உபேந்திர திவிவேதியின் ஸ்ரீநகர் பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 3 weeks ago |
-
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்த திட்டம்
25 Apr 2025புதுடெல்லி, காஷ்மீர் தீவிரவாத முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2025
25 Apr 2025 -
ஊட்டி துணைவேந்தர்கள் மாநாடு: தமிழ்நாடு கவர்னர் குற்றச்சாட்டு
25 Apr 2025ஊட்டி, மாநில பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழக போலீஸார் மிரட்டியதால் தான் ஊட்டியில் நடந்துவரும் துணைவேந்தர்கள் மாநாட்டில் அவர்கள் பங்கேற்கவில்லை என்று கவர்னர் ஆர்.என்.ரவ
-
பாகிஸ்தான் மீது போரா? - திருமாவளவன் கருத்து
25 Apr 2025திருச்சி : பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் துணை போகுமேயானால் அதை உலகளவில் அம்பலப்படுத்த வேண்டும்.
-
ஆழியார் ஆற்றில் மூழ்கி சென்னை கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி
25 Apr 2025கோவை : கோவயைில் உள்ள ஆழியார் ஆற்றில் மூழ்கி சென்னை கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
தீர்க்கத்துடன் செயல்படுகிறார்: கவர்னருக்கு துணை ஜனாதிபதி பாராட்டு
25 Apr 2025ஊட்டி : கவர்னர்ஆர்.என்.ரவி அரசியல் அமைப்பை பாதுகாக்க தீர்க்கத்துடன் செயல்பட்டு வருகிறார் என்று துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பேசினார்.
-
பயங்கரவாதத்துக்கு துணை போனதை ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் அமைச்சர்
25 Apr 2025புதுடெல்லி : இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாதக் குழுக்களை கடந்த 30 ஆண்டுகளாக ஆதரித்த தவறுகளை பாகிஸ்தான் செய்தது என அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் குவாஜ
-
காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: 50 பாலஸ்தீனா்கள் உயிரிழப்பு
25 Apr 2025டெல்அவீவ் : காஸாவில் இஸ்ரேல் தாக்குதலில் 50 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
-
எல்லையில் போர்ப் பதற்றம்..? ஸ்ரீநகரில் இந்திய ராணுவ தளபதி உபேந்திர முக்கிய ஆலோசனை
25 Apr 2025ஸ்ரீநகர், இந்திய எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ராணுவத் தலைமை தளபதி உபேந்திர துவிவேதி ஸ்ரீநகருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
-
ஊட்டியில் கவர்னர் கூட்டிய மாநாடு: மாநில பல்கலை. துணை வேந்தர்கள் புறக்கணிப்பு
25 Apr 2025ஊட்டி, ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் நேற்று காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. இதில் பெரும்பாலான அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
-
20 பில்லியன் வீடியோக்கள் பதிவேற்றம்: யூடியூப் தகவல்
25 Apr 2025வாஷிங்டன் : 20 ஆண்டுகளில் 20 பில்லியன் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக யூடியூப் தெரிவித்துள்ளது.
-
பாக். வான் வெளியை பயன்படுத்த தடை: இந்திய விமான கட்டணம், பயண நேரம் அதிகரிப்பு
25 Apr 2025புதுடில்லி, இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் நுழையத் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், கட்டண உயர்வும், நேரமும் அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
-
நெல்லை இருட்டுக்கடைக்கு உரிமை கோரும் நயன் சிங்..!
25 Apr 2025நெல்லை : உயிலின் அடிப்படையில் இருட்டுக்கடை தனக்கு சொந்தம் என உரிமை கோருவதாக நயன் சிங் தெரிவித்துள்ளார்.;
-
நிதானத்தை கடைப்பிடியுங்கள்: இந்தியா, பாகிஸ்தான் அரசுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள்
25 Apr 2025ஸ்டீபன் டுஜாரிக், இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது.
-
தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகளில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சிகள்: தமிழக அரசு அறிவிப்பு
25 Apr 2025சென்னை, கல்லூரிகளில் 'மாபெரும் தமிழ்க் கனவு' நிகழ்ச்சிகள் ரூ.3 கோடி செலவில் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
இன்று போப் இறுதிச்சடங்கு: பங்கேற்க வாடிகன் சென்றார் : ஜனாதிபதி திரெளபதி முர்மு
25 Apr 2025புதுடில்லி, கத்தோலிக்க திருச்சபையின் தலைமை திருத்தந்தை போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, வாடிகனுக்குப் புறப்பட்டுச் ச
-
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டுவீசி அழிப்பு
25 Apr 2025புதுடெல்லி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய 2 லஷ்கர் பயங்கரவாதிகளின் வீடுகளை பாதுகாப்புப் படையினர் குண்டுவீசி அழித்தனர்.
-
அரசு மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை: அமைச்சர் பாராட்டு
25 Apr 2025சென்னை, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் மாணவிக்கு ரோபோடிக் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து: பாகிஸ்தானுக்கு கடிதம் அனுப்பியது இந்தியா
25 Apr 2025டெல்லி : சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தானுக்கு இந்தியா அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பியது.
-
திருவாலங்காடு அருகே ரயிலை கவிழ்க்க சதி..? - போலீசார் தீவிர விசாரணை
25 Apr 2025திருவள்ளூர் : திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே தண்டவாள பகுதியில் போல்ட் நட்டுகள் அகற்றப்பட்டிருந்ததால், ரயிலை கவிழ்க்க சதியா?
-
வக்பு சட்டத்திருத்தம் தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்
25 Apr 2025புதுடெல்லி : வக்பு சட்டத்திருத்தம் மத உரிமைகளை பாதிக்காது என்று சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது
-
வருகிற மே 3-ம் தேதி முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா: அமைச்சர் கோவி. செழியன் அறிவிப்பு
25 Apr 2025சென்னை, தமிழக உயர்கல்வித் துறை சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வருகிற மே 3 ஆம் தேதி பாராட்டு விழா நடத்தப்படும் என அமைச்சர் கோவி.
-
சத்துணவு மையங்களில் கட்டமைப்புகளை மேம்படுத்த அரசுக்கு ஓ.பி.எஸ். வலியுறுத்தல்
25 Apr 2025சென்னை, சத்துணவு மையங்களில் கட்டமைப்பு வசதிகளை திமுக அரசு மேம்படுத்தவில்லை என குற்றம் சாட்டியுள்ள முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், பழுதடைந்த எரிவாயு அடுப்பு மற்றும் உபகரணங்களு
-
சென்னை அருகே ரூ.10 ஆயிரம் கோடியில் தைவானிய தொழில் பூங்கா அமைக்கப்படும்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவிப்பு
25 Apr 2025சென்னை, சென்னை அருகே ரூ.10 ஆயிரம் கோடியில் தைவானிய தொழில் பூங்கா அமைக்கப்படும் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவித்துள்ளார்.
-
உ.பி. அரிசி ஆலையில் விஷவாயு தாக்கி 5 பேர் பலி
25 Apr 2025லக்னோ : உத்தரபிரதேசத்தில் அரிசி ஆலையில் விஷவாயு தாக்கியதில் 5 பேர் உயிரிழந்தனர்.