எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.6 - அரசு விரைவு பஸ் கட்டண உயர்வு திடீரென குறைக்கப்பட்டுள்ளது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்கின்றனர். இது பற்றி விபரம் வருமாறு: அரசு போக்குவரத்து கழகங்கள் பெரும் நஷ்டத்தில இயங்கி வந்தன. டீசல் விலை பலமுறை உயர்ந்த போதிலும் பஸ் கட்டணம் கடந்த 10 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை.
ஊழியர்களின் சம்பளம், பராமரிப்பு செலவு, எரிபொருள், உள்ளிட்ட மூலப்பொருட்கள் செலவு ஒருபுறம் அதிகரித்துவிட்டதால் பெரும் நிதி நெருக்கடியில் போக்குவரத்து கழகங்கள் தள்ளாடின. தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வரும் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் பஸ் கட்டணம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உயர்த்தப்பட்டது.
சாதாரண பஸ்களுக்கு கிலோ மீட்டர் 28 பைசாவில் இருந்து 42 பைசாகவும், எக்ஸ்பிரஸ் பஸ்களுக்கு 32 பைசாவில் இருந்து 56 பைசாகவும், சூப்பர் டீலக்ஸ் பஸ்களுக்கு 42 பைசாவில் இருந்து 60 பைசாகவும், அல்ட்ரா டீலக்ஸ் வகை பஸ்களுக்கு 56ல் இருந்து 70 பைசாகவும் கட்டணம் உயர்த்தப்பட்டது.ஏ.சி. பஸ்களுக்கு கிலோ மீட்டருக்கு 70 பைசாவில் இருந்து 90 பைசாகவும், ஏ.சி. வால்வோ பஸ்களுக்கு ஒரு ரூபாயில் இருந்து ஒரு ரூபாய் 10 பைசாகவும் கட்டணம் அதிகரிக்கப்பட்டது.இந்த கட்டண உயர்வுக்கு பின் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் ஓரளவிற்கு வருவாய் ஈட்டி வருகின்றன. பஸ் கட்டணம் 50 சதவீதத்திற்கு உயர்த்தப்பட்டதால் பஸ்களில் கூட்டம் குறைந்தது. 8 அரசு போக்குவரத்து கழகங்களில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் மட்டும் மீண்டும் நஷ்டத்திற்கு தள்ளப்பட்டது.நீண்ட தூரம் செல்லக்கூடிய இந்த பஸ்கள் பெரும்பாலானவை அல்ட்ரா டீலக்ஸ் வகையை சார்ந்தவையாகும். பகலில் செல்லக்கூடிய அரசு விரைவு பஸ்கள் பெரும்பாலும் காலியாகவே ஓடுகின்றன. இரவில் இயக்கக்கூடிய பஸ்களில் மட்டும் பயணிகள் பயணம் செய்கின்றனர்.நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, தென்காசி, செங்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், கோயம்புத்தூர், சேலம், ஓசூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய விரைவு பஸ்களில் இடையில் ஏதாவது ஒரு ஊரில் இறங்க வேண்டும் என்றால் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட்டது.உதாரணத்திற்கு சென்னையில் இருந்து மதுரை செல்லும் விரைவு பஸ்களில் திருச்சி, விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, திண்டிவனம் செல்ல வேண்டும் என்றால் மற்ற பஸ்களை காட்டிலும் கட்டணம் அதிகமாக இருந்தது. இதனால் அரசு விரைவு பஸ்களில் ஏற மக்கள் தயங்கினார்கள்.பயணிகள் இல்லாமல் காலியாக ஓடியதால் டீசல் செலவிற்குகூட வருவாய் ஈடுசெய்ய முடியாமல் இருந்தது. விரைவு பஸ்களில் வருவாயை பெருக்க புதிய யுக்தியை இந்த போக்குவரத்து கழகம் கையாள முடிவு செய்தது.
கட் டிக்கெட் என்ற பெயரில் பஸ் கட்டணத்தை திடீரென குறைத்துள்ளது. அல்ட்ரா டீலக்ஸ் பஸ் கட்டணத்திற்கு பதிலாக எக்ஸ்பிரஸ் கட்டணத்தை வசூலிக்கிறது. அதாவது கிலோ மீட்டருக்கு 70 பைசாவில் இருந்து 56 பைசாவாக குறைந்துள்ளது. இந்த கட்டண குறைப்பு முறைப்படி இடையில் நிற்கக்கூடிய ஊர்களுக்கு மட்டும்தான் பொருந்தும்.150 கிலோ மீட்டர் தூரத்துக்குள் பயணம் செய்பவர்களுக்கு கட்டண குறைப்பு சலுகை கிடைக்கும். மற்ற போக்குவரத்து கழக பஸ்களில் வசூலிக்கப்படும் இதே கட்டண அளவில் இக்கட்டண குறைப்பு இருப்பதால் விரைவு பஸ்களில் இனி பயணிகள் தயக்கமின்றி ஏறி பயணம் செய்வார்கள் என்று அதிகாரிகள் நம்புகிறார்கள். அதிரடி பஸ் கட்டண குறைப்பு கடந்த ஒருவாரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட பஸ்களுக்கு மட்டும் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 70பைசாவாக வசூலிக்கப்பட்ட கட்டணம் 56 பைசாவாக குறைக்கப்பட்டுள்ளது. அதிக பட்சமாக 25ரூபாய் வரை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண குறைப்பு சாதாரண பஸ்களுக்கு இணையாக உள்ளதால் பயணிகள் பஸ்களில் அதிகம் ஏற தொடங்கி உள்ளனர். இந்த கட்டண குறைப்பு பொதுமக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.சேலத்தில் மதுரையில் இருந்து மற்ற ஊர்களுக்கு செல்லும் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களின் கட்டணம் விவரம் வருமாறு: (பழைய கட்டணம் அடைப்பு குறிக்குள்)
சேலம் விழுப்புரம்: புதிய கட்டணம் ரூ.110 (ரூ.125) புதிய கட்டணம் ரூ.100 (ரூ.120)
சேலம் கரூர்: புதிய கட்டணம் ரூ.60 (ரூ.75)
சேலம் ஈரோடு: புதிய கட்டணம் ரூ.30 (ரூ.40)
சேலம் திருப்ர்:புதிய கட்டணம் ரூ.75 (ரூ.85)
சேலம் நாமக்கல்: புதிய கட்டணம் ரூ. 35 (ரூ.45)
சேலம் தர்மபுரி: புதிய கட்டணம் ரூ.40 (ரூ.45)
சேலம் அரூர்: புதிய கட்டணம் ரூ. 40 (ரூ.50)
சேலம் ஆத்தூர்: புதிய கட்டணம் ரூ.35 (ரூ.45)
மதுரை திருநெல்வேலி: புதிய கட்டணம் ரூ.95 (ரூ.115)
விழுப்புரம் சென்னை: புதிய கட்டணம் ரூ. 100 (ரூ.115)
1 1
18212---46860.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 3 min ago |
ஸ்வீட் பால்.4 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 5 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பீகாரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 குழந்தைகளுடன் தாய் உயிரிழப்பு
01 May 2024பாட்னா : பீகாரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகளுடன் தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சியாகும் : நடிகர் விஜய் மே தின வாழ்த்து
01 May 2024சென்னை : உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி என்று மே தினத்தையொட்டி தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.19 குறைவு
01 May 2024சென்னை : 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.19 குறைந்து ரூ.1,911 விற்பனை செய்யப்படுகிறது.
-
ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தானம் அனுமதி
01 May 2024திருமலை : ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய பெங்களூரு மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தான அனுமதி வழங்கியுள்ளது.
-
சத்தியமங்கலம் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
01 May 2024ஈரோடு : சத்தியமங்கலம் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.