எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,ஏப்.2 - தமிழக சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அமைத்து உள்ள மாபெரும் கூட்டணிக்கு மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 164 தொகுதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இந்த தேர்தல் மூலம் தி.மு.க. ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும் என்றும் இந்தியா டுடே, ஹெட்லைன்ஸ் டுடே, ஆஜ்தக் மற்றும் ஓ.ஆர்.ஜி. நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. மேலும் தி.மு.க. கூட்டணிக்கு இத்தேர்தலில் 68 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் மேற்கண்ட கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 13 ம் தேதி நடக்கவிருக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் மனுத்தாக்கல் செய்த பிறகு கட்சித் தலைவர்கள் பிரச்சாரக் களத்தில் சுறுசுறுப்பாக இறங்கி பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த தேர்தல் முடிவு குறித்து பல்வேறு கருத்துக் கணிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த கருத்துக் கணிப்புகள் எல்லாமே அ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாகவே உள்ளன.
சமீபத்தில் கோவையில் செயல்பட்டு வரும் ஒரு அமைப்பு அ.தி.மு.க. கூட்டணியே அமோக வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்பு வெளியிட்டது. அதற்குப் பிறகு ஆனந்த விகடன் இதழ் தனது கருத்துக் கணிப்பை வெளியிட்டது. இந்த கருத்துக் கணிப்பில் அ.தி.மு.க. கூட்டணி 44.26 சதவீத வாக்குகளை பெறும் என்றும் தி.மு.க. கூட்டணி 34.60 சதவீத வாக்குகளை பெறும் என்றும் மற்ற கட்சிகள் 21.14 சதவீத வாக்குகளை பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களை சேர்ந்த வாக்காளர்களை சந்தித்து எடுக்கப்பட்ட சர்வே இது என்று அந்த இதழ் குறிப்பிட்டிருந்தது.
மேலும் அ.தி.மு.க. கூட்டணியே பலமான கூட்டணி என்றும் தி.மு.க. கூட்டணி பலவீனமான கூட்டணி என்றும் ஆனந்த விகடன் இதழ் கருத்து தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது மேலும் பல கருத்துக் கணிப்புகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. 2011 சட்டமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியும், தமிழ்நாட்டில் ஜெயலலிதாவுமே வெற்றி பெறுவார்கள் என்று பல கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. அதே போல அசாம் மாநிலத்தில் தொங்கு சட்டமன்றம் ஏற்படும் என்றும் சில கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.
இந்தியா டுடே, ஹெட்லைன்ஸ் டுடே, ஆஜ்தக் தொலைக்காட்சி மற்றும் ஓ.ஆர்.ஜி. நிறுவனமும் இணைந்து ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளன. இந்த கருத்துக் கணிப்பும் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. கூட்டணிக்கே ஆதரவாக உள்ளது. அ.தி.மு.க. தலைமையிலான மாபெரும் கூட்டணிக்கு மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 164 தொகுதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் இத்தேர்தல் மூலம் தி.மு.க ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும் என்றும் ஹெட்லைன்ஸ் டுடே கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
இ.கம்யூனிஸ்டு, வ. கம்யூனிஸ்டு, தே.மு.தி.க, போன்ற பல கட்சிகளை உள்ளடக்கிய அ.தி.மு.க. கூட்டணிக்கு 50 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும் இந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது. அது மட்டுமல்ல, தி.மு.க. கூட்டணிக்கு மொத்தமே 68 இடங்கள்தான் கிடைக்கும் என்றும் இந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது. 2006 ம் ஆண்டு தேர்தல் நடந்த போது அ.தி.மு.க. 69 இடங்களை கைப்பற்றியது. ஆனால் தி.மு.க. கூட்டணி 163 இடங்களை அப்போது கைப்பற்றியது. ஆனால் இன்றைய நிலைமையோடு ஒப்பிட்டு பார்த்தால் எல்லாம் தலைகீழாக மாறி விட்டது.
அ.தி.மு.க. கூட்டணிக்கு 164 இடங்களும், தி.மு.க. கூட்டணிக்கு 68 இடங்களும்தான் கிடைக்கும் என்று இந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. காரணம், 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், விலைவாசி உயர்வு, மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு சீரழிவு போன்றவற்றால் தி.மு.க.வின் செல்வாக்கு அடியோடு சரிந்து விட்டது என்பதுதான் உண்மை. ஸ்பெக்ட்ரம் ஊழலை அ.தி.மு.க மக்கள் மத்தியில் தெளிவாக எடுத்துரைத்து வருகிறது. இந்த கொள்ளையர்களை வெளியேற்றுங்கள் என்று நேற்று கூட ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார்.
இலங்கை ராணுவத்தால் இந்திய மீனவர்கள் கொல்லப்பட்ட போது அதை தி.மு.க. அரசு சரியான முறையில் கையாளவில்லை. இதனாலும் மக்கள் அந்த அரசு மீது வெறுத்துப் போயிருக்கிறார்கள். அது மட்டுமல்ல, வேலையில்லாத் திண்டாட்டம், குடிநீர் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளும் தமிழ்நாட்டில் நிலவுகின்றன. இந்த பிரச்சினைகளுக்கு தி.மு.க. அரசு சரியான தீர்வு காணவில்லை. அதனால் ஜெயலலிதாவே அடுத்த முதல்வராக வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். 36.1 சதவீத மக்கள் ஜெயலலிதாவை விரும்புகிறார்கள். ஆனால் கருணாநிதி முதல்வராக வேண்டும் என்று 34.1 சதவீத மக்களே விருப்பம் தெரிவித்துள்ளனர்.
தன் மகன் ஸ்டாலினை முதல்வராக்க கருணாநிதி விரும்புகிறார். ஆனால் 3.5 சதவீத வாக்காளர்களே ஸ்டாலினை விரும்புகிறார்கள். ஸ்டாலினுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை. இந்த தேர்தல் மூலம் தே.மு.தி.க.வுக்கு 11.3 சதவீத வாக்கு கிடைக்கும் என்று இந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது. ஒட்டுமொத்தமாக சொன்னால் ஹெட்லைன்ஸ் டுடே கருத்துக் கணிப்பு மூலம் அ.தி.மு.க. கூட்டணியே மகத்தான வெற்றி பெறும் என்று தெரியவந்துள்ளது.
அ.தி.மு.க. கூட்டணிக்கு 50 சதவீத வாக்குகளும், தி.மு.க. கூட்டணிக்கு 45 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்றும் இந்த கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. மேலும் மேற்கு வங்க நிலவரத்தையும் இந்த கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. மேற்கு வங்க சட்டப் பேரவை தேர்தலில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு 44 சதவீத வாக்குகளும், 182 சட்டப் பேரவை தொகுதிகளும் கிடைக்கும் என்றும் இந்த கருத்துக் கணிப்பு கூறியுள்ளது.
ஆனால் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணிக்கு 43 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும், இந்த கூட்டணி 101 தொகுதியில் வெற்றி பெறும் என்றும் இந்த கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 32 சதவீத வாக்குகளும், 46 தொகுதிகளும்தான் கிடைக்கும். அசாம் கண பரிஷத் கட்சிக்கு 25 சதவீத வாக்குகளும், 38 தொகுதிகளும்தான் கிடைக்கும் என்றும் அந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க.வுக்கு 12 சதவீத வாக்குகளும், 15 தொகுதிகளும் கிடைக்கும் என்றும் இந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது.
கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 48 சதவீத வாக்குகளும், 96 தொகுதிகளும் கிடைக்கும் என்றும் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி முன்னணிக்கு 40 சதவீத வாக்குகளும், 41 தொகுதிகளும்தான் கிடைக்கும் என்றும் மற்றர்களுக்கு 12 சதவீத வாக்குகளும், 3 தொகுதிகளும் கிடைக்கும் என்றும் இந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது. தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வருவதும், தி.மு.க. கூட்டணி வீட்டுக்கு செல்வதும் இந்த கருத்துக் கணிப்பு மூலம் உறுதியாகி விட்டது. மேலும் நேற்று சென்னையில் வெளியான லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு மற்றும் குமுதம் ரிப்போர்ட்டர் கருத்துக் கணிப்புகளும் அ.தி.மு.க.வுக்கு சாதகமாகவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.18 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 17 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 17 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n