முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவ பரிசோதனைக்கு ஆஜராகும்படி நித்யானந்தாவுக்கு கர்நாடக போலீசார்சம்மன்

திங்கட்கிழமை, 23 ஜூலை 2012      தமிழகம்
Image Unavailable

மதுரை,ஜூலை - 23 - மருத்துவ பரிசோதனைக்கு ஆஜராக வேண்டும் என்று நித்யானந்தாவுக்கு கர்நாடக போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது.   மதுரை இளைய ஆதீனம் நித்யானந்தாவிடம் சம்மன் கொடுப்பதற்காக, கர்நாடக சி.பி.சி.ஐ.டி., போலீஸ் உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையில் போலீசார் மதுரை ஆதீன மடத்துக்கு வந்தனர். அப்போது நித்யானந்தா கொடைக்கானலில் இருப்பதாக மடத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும் ஆதீன மடத்தில் இருந்த முக்கிய நிர்வாகியிடம் சி.பி.சி.ஐ.டி., உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் அந்த சம்மனை அளித்து கையெழுத்து பெற்று சென்றனர். அந்த சம்மனில் வரும் 29ம் தேதி ராம்நகர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
  இது குறித்து மடத்தின் நிர்வாகிகள் கூறும்போது, கர்நாடக போலீசார் வந்ததை உறுதி  செய்தனர். ஆனால் சம்மன் பெற்றது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர். பெண் சீடரின் வழக்கு தொடர்பாக நித்யானந்தாவுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த கர்நாடக சி.பி.சி.ஐ.டி.போலீசார் நடவடிக்கை எடுத்து இருப்பதாக மதுரை போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்