முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஸ்சில் தீ 36 பயணிகள் உயிர்தப்பினர்

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

பாதலா,ஏப்.- 25 - லாரி மீது மோதிய பஸ் தீப்பிடித்து எரிந்தது. நல்லவேளையாக அந்த பஸ்சில் பயணம் செய்த 36 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இந்த சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் நடந்துள்ளது. ஜம்முவில் இருந்து பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் நகருக்கு பஸ் ஒன்று 36 பயணிகளுடன் வந்து கொண்டியிருந்தது. ஜில்லான்வாலி அருகே பஸ் வந்துகொண்டியிருந்தபோது எதிரே வந்த லாரி மோதியது. அதிலும் பஸ்சில் இருந்த டீசல் டேங்க் மீது லாரி மோதியதால் டாங்கர் தீப்பிடித்து பஸ்சிலும் பரவியது. உடனே சுதாரித்துக்கொண்ட பயணிகள் அனைவரும் கீழே குதித்துவிட்டனர். டிரைவர் மற்றும் கண்டக்டர் கூட சிறு காயம் கூட அடையவில்லை. இதுகுறித்து தகவல் தெரிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்