முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரிக்கெட் சூதாட்டம் 2 தரகர்கள் கைது

புதன்கிழமை, 5 பெப்ரவரி 2014      விளையாட்டு
Image Unavailable

 

ஜெய்ப்பூர், பிப்.6 - ஜெய்ப்பூர் , சித்ரகூட் பகுதியில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 2 தரகர்கள் போலீஸார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து ரூ.40 ஆயிரம் மற்றும் நவீன எலக்ட்ரானிக் சாதனங்களையும் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். கைதான நபர்கள் கொடுத்த தகவலின்படி, வைஷாலிநகரில் கிரிக்கெட் சூதாட்டத்துக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு லேப்டாப்கள், பிரின்ட்டர், 47 செல்போன்கள், குரல் பதிவு இயந்திரம், டைரிகள் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்கள் மீது சூதாட்டம், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ்  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என போலீஸார் தெரிவி்த்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்