எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மயிலாடுதுறை,ஆக.- 22 - ரூ.5 கோடி மதிப்புள்ள மெட்ரிக் பள்ளியை கைவசப்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டால் மு.க. ஸ்டாலின் உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக ஸ்டாலின் மனைவியின் சகோதரரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மயிலாடுதுறையை அடுத்துள்ள குத்தாலம் நகரில் பொன்ராஜ் என்பவர் தனது ரோமன் கத்தோலிக்கர் கிறிஸ்தவ இயக்கத்தின் சார்பில் சுமார் ரூ.5 கோடி மதிப்பீட்டில் தனது மனைவி ஸ்டெல்லா மேரியை தாளாளராகவும் அதன் செயலாளராக கிறிஸ்துவ பாதிரியார் குணசீலன் மற்றும் 2 உறுப்பினர்களுடன் செயின்மேரி என்ற பெயரில் ஒரு மெட்ரிக்குலேஷன் பள்ளியை உருவாக்கி நடத்தி வந்தார். இந்தநிலையில் தாளாளர் ஸ்டெல்லா மேரியின் கணவர் பொன்ராஜ் இறந்துவிட்டவுடன் இதில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் விலகிவிட்டனர். ஸ்டெல்லா மேரி, பாதிரியார் குணசீலனை செயலாளராக நியமித்து சில ஆண்டுகளாக மெட்ரிக்குலேஷன் பள்ளியை நன்றாக நடத்தி வந்தார். மயிலாடுதுறை கஸ்தூரிபாய் தெருவில் வசித்து வரும் ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரும் முன்னாள் துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா சாந்தியின் சகோதரருமான ஜெயமூர்த்தியின் மாமனாரான மதன்மோகன் மேற்படி பள்ளியை தி.மு.க. ஆட்சிக்காலத்தில் பள்ளியை நடத்தி வந்த ஸ்டெல்லா மேரியை மதன்மோகன், அவரது மருமகன் டாக்டர் ராஜமூர்த்தி ஆகிய இருவரும் சேர்ந்து ரூ.5 கோடி மதிப்புள்ள அந்த பள்ளியை ரூ.80 லட்சம் கொடுத்து விலைக்கு வாங்கினர். அதில் செயலாளராக இருந்த பாதிரியார் குணசீலன் கையெழுத்துப்போட்டால்தான் இடத்தை வசப்படுத்த முடியும் என்பது மட்டுமல்லாது இப்பள்ளியை ரோமன் கத்தோலிக்கர் கிறிஸ்த மதத்தை சேர்ந்தவர்கள்தான் வாங்கி நடத்த முடியும். வேற்று மதத்தவர்களுக்கு இப்பள்ளியை வாங்க உரிமை இல்லை என்று சட்டப்படி பத்திரம பதிவு செய்துள்ளனர். இருந்தாலும் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மிரட்டி கைவசப்படுத்தியுள்ளனர். இதில் முக்கிய நபராக உள்ள செயலாளர் பாதிரியார் குணசீலன் ஒப்புதல் கையெழுத்திட வேண்டும். இதை எதிர்த்து பாதிரியார் குணசீலன் தி.மு.க. ஆட்சியில் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு கொடுத்துள்ளார். ஆனால் அந்த புகார் மனுவை அன்றைய துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் மைத்துனர் ராஜமூர்த்தி கைவசப்படுத்தி அவர் நடத்திய செயலுக்கு அப்போது அரசு அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். ஆட்சி மாறியதும் குணசீலன் மீண்டும் முதல்வர் ஜெயலலிதாவிடம் மு.க. ஸ்டாலின் மைத்துனர் ராஜமூர்த்தி, அவரது மாமனார் மதன்மோகன் ஆகியோர் ரூ.5 கோடி மதிப்புள்ள பள்ளியை ரூ. 80 லட்சத்திற்கு மிரட்டி கைவசப்படுத்தியதுடன் செயலாளராக இருந்த என்னை கையெழுத்துப்போடாவிட்டால் நடப்பதே வேறு என்று மிரட்டி பள்ளியை வசப்படுத்தினர் என புகார் மனு அளித்துள்ளார். இந்த புகாரினை தமிழக முதல்வர் ஜெயலலிதா, நில அபகரிப்பு தனிப்பிரிவு காவல்துறைக்கு நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளார். இதனை அறிந்த மதன்மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தன்னை போலீசார் கைது செய்யக்கூடாது என்று மனுத்தாக்கல் செய்துள்ளார். ஆனால் உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. இதனைத்தொடர்ந்து மயிலாடுதுறை டி.எஸ்.பி. மதன்மோகன், இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மதன்மோகனை கைது செய்து மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவுப்படி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதில் தொடர்புடைய தலைமறைவாகியுள்ள முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மைத்துனர் ராஜமூர்த்தியையும் அவரது மனைவி ஹேமலதாவையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.18 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 17 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 17 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n