முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடி பெண் டாக்டர் படுகொலை: மேலூரில் மருத்துவர்கள் போராட்டம்

வியாழக்கிழமை, 5 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

மேலூர், ஜன. - 5 - மதுரை மாவட்டம் மேலூரில் மருத்துவர்கள் சங்கம் சார்பாக, தூத்துக்குடி அரசு பெண் டாக்டர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து டாக்டர்கள் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து டாக்டர்கள் சங்க செயலாளர் அல்லா கூறியதாவது,  பெண் டாக்டர் படுகொலை தொடர்பாக குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் மேலூரில் உள்ள 20 க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் மாலை 6 மணி வரை மூடப்படும். இது தொடர்பான பேரணி 10 மணியளவில் அரசு மருத்துவமனையில் தொடங்கி மேலூர் தாசில்தாரிடம் மனு அளிக்கப்படும் என்று தெரிவித்தார். முன்னதாக, மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ளிருப்பு போராட்டமும் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். மேலும் முரளிபால், கண்ணன், கலாமணி, சதீஸ்குமார், செந்தில்குமார், பிரதீப், லெட்சுமி ஆகிய டாக்டர்களும் கலந்து கொண்டனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்