முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள முதல்வர் பினராய் குறித்து காங். தலைவர் சர்ச்சை பேச்சு

வியாழக்கிழமை, 24 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் : கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கே. சுதாகரன், முதல்வர் பினராய் குறித்து ஆபாசமாக பேசி சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

கடந்த ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு பின்னர், மாநிலத்தை மீண்டும் கட்டியமைப்பதில் பினராய் அரசு தோல்வி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிராக காங்கிரஸ் தலைவர் சுதாகரன் பேசும் போது,

முதல்வர் பினராய் விஜயன் நிர்வாகத்தை திறம்பட நடத்துவார் என கட்சி எதிர்பார்த்தது. ஆனால் அவர் ஒரு பெண்ணை விட மோசமாக நடத்தி வருகிறார். திறமையான முறையில் செயல்படும் ஒரு முதல்வராக பினராய் விஜயன் இருப்பார் என்று நாங்கள் நம்பினோம். ஆனால் அவரால் மிகப்பெரிய பேரழிவு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று கூறி உள்ளார்.

அவர் அதிகாரத்தை எடுத்துக் கொண்டபோது, அவர் ஏதாவது நல்லது செய்யலாம் என்று நினைத்தோம். ஆனால் அவர் ஒரு முட்டாள்தனமான முதல்வராகி விட்டார். ஒரு பெண் கூட சிறப்பாக செய்திருப்பார். அவர் ஒரு பெண்ணை விட மோசமாக செயல்பட்டு வருகிறார் என்றும் அவர் மேலும் கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து