எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, மார்ச். 22 - சங்கரன்கோயில் தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச்செல்வி 68,757 ஓட்டுகள் அதிகம் பெற்று மிகப் பெரும் வெற்றியடைந்தார். தி.மு.க, தே.மு.தி.க. உள்ளிட்ட 12 பேரும் டெபாசிட் இழந்தனர். முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிர் சவால் விட்டு களமிறங்கிய தே.மு.தி.க. நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டது. சங்கரன்கோயில் இடைத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் முத்துச் செல்வி, தி.மு.க. சார்பில் ஜவஹர் சூரியகுமார், ம.தி.மு.க சார்பில் சதன் திருமலைக்குமார், தே.மு.தி.க. சார்பில் முத்துக்குமார், மற்றும் பா.ஜ.க, சுயேட்சை உள்பட 13 பேர் களத்தில் இருந்தனர். வேட்பாளர் அறிவிப்பில் இருந்து அனைத்திலும் முந்திக் கொண்டது அ.தி.மு.க. இந்த தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றி துவக்கத்திலேயே முடிவு செய்யப்பட்டு விட்டது. அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச்செல்வியை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா சங்கரன்கோயிலில் 10 இடங்களில் பிரச்சாரம் செய்தார். தி.மு.க ஆட்சியில் இருப்பது போன்ற உணர்வில் கருணாநிதியின் மகன் அழகிரி, தி.மு.க.வின் தேர்தல் பொறுப்பாளராக களமிறங்கினார். துவக்கத்தில் 15 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவார் என அழகிரி முதலில் பேசினார். தேர்தல் களத்தில் அ.தி.மு.க.வுக்கு மக்களின் ஆதரவை கண்ட அழகிரி, சில நாட்களிலேயே 10 முதல் 15 ஆயிரம் ஓட்டுகளில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவார் என பேசினார். அதிலிருந்து அவரது தேர்தல் பணிகளும் அவ்வளவு சுறுசுறுப்பாக இல்லை.
தொண்டர்களையும், நிர்வாகிகளையும் மிரட்டினாரே தவிர, பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிக்கவோ செல்லவில்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதி, அவரது மகன் ஸ்டாலின், தி.மு.க. முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் மந்திரிகள், எம்.பிக்கள் என ஒரு மாபெரும் படை தி.மு.க. சார்பில் தேர்தல் பணியாற்றியது. அவர்கள் சென்ற இடங்களில் எல்லாம் தி.மு.க. வெற்றி பெற்று விட்டது என்ற தொணியில் அதிகார தோரணையில் பேசி வந்தனர். நாட்கள் செல்லச் செல்ல அ.தி.மு.க.விற்கு ஆதரவு பெருகியது. மேலும் ம.தி.மு.க.வின் தேர்தல் பணிகளும் தீவிரமாக இருந்தது. இதைக் கண்ட தி.மு.க. எங்கே 3 வது இடத்திற்கு சென்று விடுவோமோ என்ற பயத்தில் தங்களது கட்சி ஓட்டுகளையாவது பெற வேண்டுமே என்ற எண்ணத்தில் தேர்தல் பணியாற்றினர்.
வைகோவின் சொந்த தொகுதியான சங்கரன்கோயிலில் எப்படியும் 2 வது இடத்தையாவது பிடித்து விட வேண்டும் என ம.தி.மு.க.வினர் கடுமையாக உழைத்தனர். இந்த தேர்தலில் வெற்றி பெற்று விட்டோம் என்ற பாணியில் விஜயகாந்தின் தேர்தல் பிரச்சாரமும் அமைந்தது. ஆனால் அ.தி.மு.க. வேட்பாளரோ எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி அமைதியாக வீடு வீடாக சென்று தனக்கு இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களிடம் வேண்டிக் கொண்டார். இந்த இடைத் தேர்தலில் சங்கரன்கோயில் தொகுதி மக்கள் அ.தி.மு.க.வுக்கு இந்த தொகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு மாபெரும் வெற்றியை கொடுத்துள்ளனர். சங்கரன்கோயில் தொகுதியை பொறுத்தவரை 2 லட்சத்து 5 ஆயிரத்து 840 வாக்காளர்களில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 045 பெண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 795 பெண் வாக்காளர்களில் மொத்தம் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 756 வாக்காளர்கள் கடந்த 18 ம் தேதி வாக்களித்திருந்தனர். இது 78 சதவீதமாகும்.
ஓட்டுப் பெட்டிகள் புளியங்குடி ராமசாமி செட்டியார் பொறியியல் கல்லூரியில் வைத்து மூன்றடுக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. 18 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. அனைத்து சுற்றுகளிலும் அ.தி.மு.க வேட்பாளர் மிகப் பெரிய ஓட்டு வித்தியாசத்தை கடந்தார்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் மொத்தம் 13 பேர் போட்டியிட்டனர். நேற்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் இறுதிசுற்றில் அவர்கள் பெற்ற வாக்குகள் விபரம் வருமாறு:
1. எஸ்.முத்துசெல்வி அ.தி.மு.க. 94977
2. ஜவகர் சூரியகுமார் தி.மு.க. 26220
3. சதன் திருமலைக்குமார் ம.தி.மு.க. 20678
4. முத்துகுமார் தே.மு.தி.க. 12144
5. முருகன் பா.ஜ.க. 1633
6. நாகேஸ்வர் ராவ் சமாஜ்வாடி 277
7. கணேசன் ஜ.ம.க. 355
8. அய்யனு சுயேட்சை 152
9. ஆறுமுகம் சுயேட்சை 220
10. உடையார் சுயேட்சை 300
11. சங்கர் சுயேட்சை 377
12. பெருமாள் சுயேட்சை 1324
13. வெள்ளத்துரை சுயேட்சை 1115
போட்டியிட்ட 13 பேரில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்துசெல்வி 68757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். மற்ற வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர். சங்கரன்கோயில் தொகுதி வாக்காளர்கள் மின்வெட்டுக்கான உண்மையான நிலையை உணர்ந்திருந்ததாலும், அ.தி.மு.க. அரசின் 9 மாத கால சாதனைகளை மனதில் கொண்டு வாக்களித்திருப்பது தெளிவாகி உள்ளது. எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரங்களை எல்லாம் தவிடுபொடியாக்கி அபார வெற்றி கண்டிருப்பதன் மூலம் சங்கரன்கோயில் தொகுதி என்றென்றும் அ.தி.மு.க.வின் கோட்டைதான் என இந்த இடைத் தேர்தல் மூலம் மீண்டும் நிரூபணமாகி உள்ளது. மகத்தான வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச்செல்விக்கு தேர்தல் அலுவலர் செல்வராஜ் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார். இதில் அமைச்சர் செந்தூர் பாண்டியன், கழக அமைப்பு செயலாளர் பி.எச். பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.18 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 17 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 17 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n