முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமர்சனங்களில் இருந்து எப்போதும் தள்ளியிருக்கவே முயற்சிப்பேன்: ரகானே

செவ்வாய்க்கிழமை, 27 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
Image Unavailable

மும்பை : எப்பொழுதும் விமர்சனங்களில் இருந்து தள்ளியிருக்கவே முயற்சிப்பேன் என இந்திய டெஸ்ட் அணி கேப்டன் ரகானே தெரிவித்துள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டன் ரகானே சரியாக விளையாட வில்லை. இவருக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அவருக்குப் பதிலாக ரோகித் சர்மாவை ஆடும் லெவனில் சேர்க்க வேண்டியதுதானே என கடுமையான விமர்சனங்கள் அவரை நோக்கி பாய்வதுண்டு. ஆனால் அதில் இருந்து தள்ளியிருக்கவே விரும்புவேன் என்று ரகானே தெரிவித்துள்ளார்.

ஆண்டிகுவா டெஸ்டில் முதல் இன்னிங்சில் அரைசதமும், 2-வது இன்னிங்சில் சதமும் அடித்த ரகானே இது குறித்து கூறுகையில், நான் விமர்சனங்களால் பாதிக்கப்படாத வகையில், அதில் இருந்து தள்ளியிருக்கவே முயற்சிப்பேன். ஏனென்றால், அது நமக்கு தேவையில்லாதது. அதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஒரு இன்னிங்சை சதமாக மாற்றும் போது எப்போதுமே சந்தோசமாக இருக்கும். இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது திருப்தி அளிக்கிறது. நாம் சதம் அடிக்கும் முன் அணி நல்ல நிலையில் இருப்பது அவசியம் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து