முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்தியஅணி தொடரை வெல்லுமா?

செவ்வாய்க்கிழமை, 31 ஜூலை 2012      விளையாட்டு
Image Unavailable

கொழும்பு, ஜூலை. - 31 - இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பு நகரில் இன்று பகலிர வு ஆட்டமாக நடக்க இருக்கிறது. இதற்காக இரு அணிகளும் ஆயத்தமாக உள்ளன.  இந்திய அணி ஏற்கனேவே 2- 1 என்ற கணக்கில் இந்தத் தொடரில் முன்னிலை    பெற்று உள்ளது. எனவே இந்தப் போட்டி யிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லு மா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.  இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி தலைமையில் இலங்கையில் சுற்றுப் பயண ம் மேற்கொண்டு கேப்டன் ஜெயவர்த்தனே தலைமையிலான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.  இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நா ள் தொடர் மற்றும் ஒரே ஒரு டி - 20 போட்டி ஆகியவை நடத்த திட்டமிடப்பட்டது.  இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடந்த முதல் போட்டியில் இந்திய ணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தத் தொடரில் 1- 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.  அடுத்து நடந்த 2- வது போட்டியில் இலங் கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந் தத் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனானது.  இந்தப் போட்டியில் இந்திய பேட்மேன்கள் மோசமாக ஆடினர். துவக்க வீரர் காம்பீர் மட்டும் தாக்குப் பிடித்து ஆடிஅரை சதம் அடித்தார். மற்ற வீரர்கள் குறைந்த ரன்னில்ஆட்டம் இழந்தனர்.  பின்பு நடந்த 3-வது போட்டியில் இந்திய அணி பரபரப்பான ஆட்டத்தில், 5 விக்கெ ட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ் த்தி இந்தத் தொடரில் 2- 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.  இந்த நிலையில், இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 4-வது போட்டி கொழும்பு நகரில் இன்று பகலிரவு ஆட்டமாக நடக்க இருக்கிறது.  இதில் வெற்றி பெற இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளனர். கடந்த போட்டியில் தோல்வி அடைந்ததால் இலங்கை அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற புதிய வியூகம் அமைத்து வருகிறது.  இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 4-வது போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு துவங்குகிறது. இந்தப் போட்டி டென் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடி யாக ஒளிபரப்பாகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்