எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Image Unavailable](/sites/all/themes/thinaboomi/images/photos/image-30.jpg)
Source: provided
சென்னை: மக்கள் நலனுக்காகப் புதிய திட்டங்களைக் கொண்டுவந்து, தொழில் துறையில் நாங்கள் ஏற்படுத்திக் கொடுத்த அடித்தளத்தைச் செம்மையாகப் பயன்படுத்தி தமிழ்நாட்டைத் தொழில் துறையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக்க தொடர்ந்து செயலாற்றுங்கள் என எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 'விஷன் 2023' என்ற தொழிற்கொள்கை அறிவிக்கப்பட்டு பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொழில் வளர்ச்சிக்காகப் போடப்பட்டன. முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை 2015-ல் முதல்வர் ஜெயலலிதாவும், இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை 2019-ல் ஜெயலலிதாவின் அரசும் நடத்தி பல்லாயிரம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டது.
இதனால், பல்லாயிரம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள். உலக முதலீட்டாளர் மாநாடு 2015-ல் பல்வேறு துறைகள் சார்பாக கையொப்பமிட்ட 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையில் கையெழுத்திடப்பட்ட 10,073 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
இதன் மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்ட முதலீடு 2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி ரூபாயாகும். இதன் மூலம் 4.70 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. இவற்றில் கடந்த 5 ஆண்டுகளில், 72 சதவிகித திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்ததன் மூலம், 73,711 கோடி ரூபாய் முதலீடுகளும், 1.86 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
2019-ல் நடைபெற்ற இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது, 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - 3 லட்சத்து 501 கோடி ரூபாய் முதலீட்டில் 10.50 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில் கையெழுத்திடப்பட்டன.
இவற்றில் 24,492 கோடி ரூபாய் முதலீட்டில் 1,10,844 நபர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி அளித்துள்ள 81 திட்டங்கள் அதாவது, 27 சதவீத திட்டங்கள் ஒரே ஆண்டில் தமது வணிக உற்பத்தியைத் தொடங்கி சாதனை படைத்துள்ளன. மேலும் 2.20 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் 5.33 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி அளித்துள்ள 191 திட்டங்கள் பல்வேறு நிலையில் முன்னேற்றத்தில் உள்ளன.
வெளிநாட்டுப் பயணத்தின் மூலம் 41 நிறுவனங்களில், 8 ஆயிரத்து 835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளை, தமிழ்நாட்டுக்கு ஈர்த்து, 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வரும் வெளிநாடு வாழ் தமிழ் மக்களுக்கு ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்கவும், "யாதும் ஊரே" என்ற புதிய திட்டத்தைக் கடந்த சட்டப் பேரவையில் நான் அறிவித்து, நேரடியாகச் சென்று அமெரிக்காவில் தொடங்கி வைத்தேன். இது தவிர, கொரோனா ஊரடங்கு காலத்தில் 2020-ல் மே மாதம் முதலே தொழில் துறையின் வளர்ச்சிக்காக தொழில் துறைச் செயலாளர் தலைமையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தொழில் முனைவோரை அழைத்து நானே நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தினேன்.
இதன் பயனாக, 2020-21 நடப்பு ஆண்டில் மட்டும் 60,674 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 1,00,000 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 73 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. மேலும், DLF நிறுவனத்தின் 5,000 கோடி ரூபாய் முதலீட்டிலான தகவல் தொழில்நுட்பப் பூங்கா திட்டம், 1,500 கோடி ரூபாய் முதலீட்டில் அசன்டாஸ் ரேடியல் ஐ.டி. பார்க் திட்டம், 250 கோடி ரூபாய் முதலீட்டில் பட்டாபிராம் டைடல் பார்க் திட்டம், 250 கோடி ரூபாய் முதலீட்டில் ஸ்ரீபெரும்புதூர் வானூர்தி பூங்காவில் நவீன AEROHUB திட்டம் எனப் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
முதல்வராக நான் இருந்தபோது எனது தலைமையிலான உயர்நிலைக் குழு, 39,941 கோடி ரூபாய் முதலீட்டிலான 62 பெரும் தொழில் திட்டங்களை ஆய்வு செய்து உடனுக்குடன் அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.
முதலீடுகளை ஈர்க்கும் வழிகாட்டி நிறுவனம் பெருமளவில் வலுப்படுத்தப்பட்டு, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, சீனா, கொரியா குடியரசு, ஜப்பான், ஐக்கிய அரபு நாடுகள், இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் தைவான் போன்ற முக்கிய நாடுகளுக்கான பிரத்யேக அமைவுகள் (Country Specific Desks) அமைக்கப்பட்டுள்ளன.
மும்பையைச் சேர்ந்த "Projects Today" நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020ஆம் ஆண்டு கோவிட் - 19 காலகட்டத்தில், முதலீடுகளை ஈர்ப்பதில், அகில இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அ.தி.மு.க. அரசால், "மின்சாரக் கொள்கை, 2019" உருவாக்கப்பட்டு, பல்வேறு நிறுவனங்களுடன் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டன. இதனால்தான், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் "எர்த்தர் எனர்ஜி நிறுவனமும்" போச்சம்பள்ளியில் மின்சார இருசக்கர வாகன உற்பத்திகளை ஓலா நிறுவனமும்" தொடங்கியுள்ளன.
கடந்த ஆண்டு (2020) டிசம்பர் மாதம், 14-ம் தேதி, "ஓலா" நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில், 2,354 கோடி ரூபாய் முதலீட்டில், உலகத்திலேயே மிகப் பெரிய மின்சார இருசக்கர வாகனத் தொழிற்சாலையை மொத்தம் 500 ஏக்கர் நிலபரப்பில் "ஓலா" நிறுவனம் அமைத்து வருகிறது.
இங்கு தயாரிக்கப்படும் மின்சார இருசக்கர வாகனங்கள், வரும் 2022-ல் வாகன சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளன என்று கடந்த 2021 மார்ச் 9-ம் தேதி ஓலா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம், படிப்படியாக 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், தற்போது ஆட்சிக்கு வந்துள்ள தி.மு.க. அரசின் தொழில் துறை அமைச்சர் ஏதோ இவர்கள் இந்த இருசக்கர வாகனத் தொழிற்சாலையை தி.மு.க. அரசுதான் ஆட்சிக்கு வந்த 50 நாட்களில் கொண்டுவந்தது போன்ற மாயையை ஏற்படுத்த முயல்கிறார்.
சென்னையில் பேட்டியளித்த அவர், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், காற்று மாசுபடுவதைக் குறைக்கவும், மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும் இந்த அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக, மின்சார வாகனங்களை அதிகம் உற்பத்தி செய்ய, கிருஷ்ணகிரியில் ஓலா நிறுவனம் 500 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப் பெரிய பரப்பில் மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகன உற்பத்தி மையத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் அமைக்க உள்ளது என்று கூறியுள்ளார்.
அ.தி.மு.க. அரசு எடுத்த முயற்சியால் ஓலா நிறுவனம் ஏற்கெனவே பணிகளைத் தொடங்கி தற்போது முடிவடையும் நிலையில் உள்ள ஒரு திட்டத்தை, ஏதோ இந்த ஒன்றரை மாதக் காலத்தில் கொண்டுவந்ததுபோல் அமைச்சர் தங்கம் தென்னரசு சொல்வது வியப்பாக உள்ளது.
அ.தி.மு.க.வின் அரசால் கொண்டுவந்த திட்டங்களை, தாங்கள் ஆட்சிக்கு வந்த 50 நாட்களுக்குள் கொண்டுவந்ததுபோல் பேசுவது ஏற்புடையதல்ல. இந்தப் போக்கைக் கைவிட்டு, ஜெயலலிதாவின் அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களைக் காழ்ப்புணர்ச்சி கொண்டு முடக்காமல் மக்கள் நலனுக்காகப் புதிய திட்டங்களைக் கொண்டுவந்து, தொழில் துறையில் நாங்கள் ஏற்படுத்திக் கொடுத்த அடித்தளத்தைச் செம்மையாகப் பயன்படுத்தி தமிழ்நாட்டைத் தொழில் துறையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக்கத் தொடர்ந்து செயலாற்றுங்கள் என்று இந்த ஆட்சியாளர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 4 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 1 week ago |
-
86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
10 Feb 2025சென்னை : தமிழகம் முழுவதும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏழை, எளிய மக்கள் 86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டத
-
தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
10 Feb 2025சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வேறு ஒருவரை முதல்வராக நியமித்தது கெஜ்ரிவால் செய்த அரசியல் பிழை பிரசாந்த் கிஷோர் விமர்சனம்
10 Feb 2025புதுடெல்லி: தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் வேறு ஒருவரை முதல்வராக நியமித்தது கெஜ்ரிவால் செய்த மிகப்பெரிய அரசியல் பிழை என ஜன் சுராஜ் கட்சித்தலைவர் பிரசாந்த் கிஷோர் விமர
-
இந்த வாரம் வெளியாகும் ஒத்த ஓட்டு முத்தையா
10 Feb 2025கவுண்டமணி கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஒத்த ஓட்டு முத்தையா படம் வரும் 14ம் தேதி காதலர் தினத்தன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
-
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா? சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி
10 Feb 2025சென்னை: கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு எடப்பாடி பழனிசாமி படாதபாடுபட்டுக் கொண்டிருக்கிறார் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
-
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம் பங்கேற்க முடிவு
10 Feb 2025தாம்பரம்: ஆசிரியர் அரசு ஊழியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ள போராட்டத்தில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம் சார்பாக நூறு சதவீதம் ஆசிரியர
-
மதுரை, பாலதண்டாயுதபாணி கோவிலில் அர்ச்சகர்களின் தட்டில் விழும் காணிக்கை உண்டியலில் செலுத்தும் உத்தரவு வாபஸ்
10 Feb 2025மதுரை: அர்ச்சகரின் தட்டில் விழும் காணிக்கை உண்டியலில் செலுத்தும் உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அத்திக்கடவு-அவிநாசி திட்ட விழா விவகாரம்: புறக்கணிக்கவில்லை; என்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தினேன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
10 Feb 2025ஈரோடு: அத்திக்கடவு-அவிநாசி திட்ட விழாவை புறக்கணிக்கிறேன் என்பதைக் காட்டிலும், என்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறேன்” என்று கொள்ளலாம் என அ.தி.மு.க. முன்னாள்
-
அமெரிக்காவில் இரும்பு - அலுமினியத்துக்கு 25 சதவீதம் இறக்குமதிக்கு வரி அதிபர் அறிவிப்பு
10 Feb 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் இரும்பு- அலுமினியத்துக்கு 25 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் அறிவித்துள்ளார்.
-
பத்திரப்பதிவு அலுவலகங்கள் இன்று செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு
10 Feb 2025சென்னை : தைப்பூசத்தையொட்டி இன்று அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
அமெரிக்க வரிவிதிப்பு அச்சுறுத்தல்: 4-வது நாளாக சரிந்த பங்குச் சந்தை
10 Feb 2025மும்பை : அமெரிக்க வரிவிதிப்பு அச்சுறுத்தல் மற்றும் தடையற்ற அந்நிய நிதி வெளியேற்றம் காரணமாக, நேற்றைய வணிகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறியீடுகள் சரிவுடன் முடிந்தன.
-
ஹமாஸ் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட அடையாளம் தெரியாமல் உருமாறி போன இஸ்ரேல் பிணைக்கைதிகள்
10 Feb 2025ஜெருசலேம்: ஹமாஸ் பிடியில் இருந்த இஸ்ரேல் பிணைக்கைதிகளை கண்டு உறவினர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
திருப்பதி லட்டு விவகாரம்: 4 பேரை கைது செய்தது சிறப்பு புலனாய்வு குழு
10 Feb 2025ஐதராபாத்: திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் தனியார் பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர் உள்பட 4 பேரை சிறப்புப் புலனாய்வுக் குழு கைது செய்துள்ளத
-
சென்னை தலைமைச்செயலகத்தில் மதி அனுபவ அங்காடி திறப்பு : துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்
10 Feb 2025சென்னை : தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும் மதி அனுபவ அங்காட
-
‘ஏரோ இந்தியா’ இந்தியாவின் சக்தியை வெளிப்படுத்துகிறது மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்
10 Feb 2025பெங்களூரு: ஆசியாவின் மிகப்பெரிய விண்வெளி, பாதுகாப்பு கண்காட்சியான ‘ஏரோ இந்தியா’ -வை, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள யெலஹங்கா வ
-
மணிப்பூர் மாநில சம்பவங்களை விசாரிக்க நடுநிலை ஆணையம் : கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
10 Feb 2025சென்னை : மணிப்பூரில் நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கும் சம்பவங்களை விசாரிக்க நடுநிலையான ஆன தனி ஆணையத்தை அமைக்க வேண்டும் என தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனி
-
சர்வதேச விருது வென்ற பேட் கேர்ள்
10 Feb 2025அறிமுக இயக்குநர் வர்ஷா பாரத் இயக்கத்தில் உருவாகியுள்ள Bad Girl திரைப்படம் ரோட்டர் டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, உயரிய விருதான NETPAC விருதை வென்றுள்ளது
-
மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்: ஓடும் ரெயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது
10 Feb 2025திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே ரெயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழக கவர்னருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
10 Feb 2025புதுடெல்லி : தமிழ்நாடு கவர்னருக்கு எதிரான வழக்கை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
டெல்லியில் அ.தி.மு.க. புதிய அலுவலம் திறப்பு : இ.பி.எஸ். திறந்து வைத்தார்
10 Feb 2025சென்னை : டெல்லியில் அ.தி.மு.க. புதிய அலுவலகத்தை இ.பி.எஸ். திறந்து வைத்தார்.
-
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் ஓட்டு சதவீதம் அதிகரிப்பு
10 Feb 2025புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கடந்த 2020 தேர்தலில் பெற்றதை விட 2 சதவிகிதம் அதிகம் பெற்றுள்ளது.
-
உ.பி., மகா கும்பமேளாவில் கடும் போக்குவரத்து நெரிசல்
10 Feb 2025பிரயாக்ராஜ்: மகா கும்பமேளாவில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
-
சந்தன கடத்தல் வீரப்பன் உறவினர் மரணம்: விசாரணைக்கு உத்தரவிட ஐகோர்ட் மறுப்பு
10 Feb 2025சென்னை: சந்தன கடத்தல் வீரப்பனின் உறவினர் அர்ஜுனனின் சந்தேக மரணம் குறித்து 30 ஆண்டுகளுக்கு பிறகு விசாரணை நடத்த உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள
-
பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் நரேந்திரமோடி
10 Feb 2025புதுடெல்லி : பிரான்ஸ் நடைபெறும் ஏ.ஐ. உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டார்.
-
உ.பி. மகா கும்பமேளாவில் ஜனாதிபதி புனித நீராடினார்
10 Feb 2025புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் ஜனாதிபதிதிரவுபதி முர்மு புனித நீராடினார்.