முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிர புதியமுதல்வர் சோனியாவுடன் சந்திப்பு

ஞாயிற்றுக்கிழமை, 16 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, செப். - 16 - மகராஷ்டிரத்தில் தற்போதைய முதல்வர் பிருத்விராஜ் சவாணை கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் புதிய முதல்வராக நாராயண் ரானே நியமிக்கப்படக் கூடும் எனத் தெரிகிறது. இவர் ஏற்கெனவே மகாராஷ்டிரா மாநில முதல்வராக பதவி வகித்தவர். டெல்லியில் நாராயண் ரானே நேற்று சோனியாவை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது நாளை மாற்றியமைக்கப்பட இருக்கும் மகாராஷ்டிர மாநில அமைச்சரவை பற்றி விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. தற்போதைய முதல்வர் பிருத்விராஜ் சவாணை அமைச்சராக வைத்துக் கொண்டு முதல்வராக நாராயண் ரானேவை நியமிக்க காங்கிரஸ் முடிவு செய்துவிட்டதாகவே கூறப்படுகிறது. மகாராஷ்டிர அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள தேசியவாத கட்சியின் அமைச்சர்களுக்கு பிருத்விராஜ் சவாண் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்பது அக்கட்சியின் புகாராக இருந்து வந்தது. இது அண்மையில் பெரும் புகைச்சலை இரு கட்சிகளிடையே ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் மேலிடம் முதல்வரை மாற்ற முடிவு செய்திருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்