முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. பொன்விழா ஆண்டை முன்னிட்டு எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைகளுக்கு ஒ.பி.எஸ்., இ.பி.எஸ். மாலை அணிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 17 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : அ.தி.மு.க. பொன்விழா ஆண்டை முன்னிட்டு எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைகளுக்கு ஒ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆகியோர் மாலை அணிவித்தனர். பின்னர் சென்னை மெரினா கடற்கரையில் இருவரது நினைவிடத்திலும் ஒ.பி.எஸ்., இ.பி.எஸ். மலரஞ்சலி செலுத்தினர்

மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர் அ.தி.மு.க. கட்சியை தொடங்கி நேற்றுடன் நாற்பத்தி ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்து, 50-ம் ஆண்டு தொடங்கியது. இதனை அடுத்து அ.தி.மு.க. சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேர்று காலை 10 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும், இருவரும் அ.தி.மு.க. கட்சி கொடியை தலைமை அலுவலகத்தில் ஏற்றி வைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினர்.  அது மட்டுமல்லாமல்  மக்கள் தொண்டில் மகத்தான் 50 ஆண்டுகள் என்ற தலைப்பில் அ.தி.மு.க. பொன்விழா சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.  தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் தயாரிக்கப்பட்ட பொன்விழா பாடலை ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி வெளியிட்டனர். 

இதனைத் தொடர்ந்து  தலைமை அலுவலகத்தில் இருந்து  சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து