முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாக்கை அறுத்து விடுவோம்: மாநில பா.ஜ.க. தலைவரை மிரட்டும் விதமாக பேசிய தெலங்கானா முதல்வர் பேச்சால் சர்ச்சை

திங்கட்கிழமை, 8 நவம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

ஐதராபாத் : தேவையில்லாமல் பேசினால் 'உங்கள் நாக்கை அறுப்போம்' என தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் பாஜக மாநில தலைவரை மிரட்டும் விதத்தில் பேசியிருப்பது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானாவில் செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்,''தெலுங்கானா விவசாயிகளை நெல் பயிரிடச் சொல்லி அவர்களை ஏமாற்றி, விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்படுவதை பாஜக உறுதி செய்யும் என மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் தெரிவித்திருக்கிறார். இது முற்றிலும் பொய்யானது. மத்திய அரசு நெல்-ஐ வாங்கப்போவதில்லை என தெரிவித்துள்ளது.

அதனால்தான், விவசாயிகளின் நஷ்டத்தைத் தடுக்க வேறு பயிர்களை பயிரிடும் படி மத்திய அரசு பொறுப்பற்ற முறையில் கூறியிருக்கிறது. நான் மத்திய விவசாயத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து புழுங்கல் அரிடசியை கொள்முதல் செய்துகொள்ளுமாறு கோரினேன். விரைவில் தொடர்பு கொள்கிறேன் என்று கூறியவர் இதுவரை என்னை தொடர்பு கொள்ளவில்லை. 5 லட்சம் நெல் தற்போது மத்திய அரசால் வாங்கப்படாமல் இருக்கிறது.

ஏற்கெனவே மத்திய அரசு நெல்லை வாங்க மாட்டோம் என கூறியிருக்கிறது. ஆனால் மாநில பாஜக தலைவர் சஞ்சை விவசாயிகளிடம் நெல் பயிரிடுமாறும், அதை மத்திய அரசு வாங்கிக்கொள்ளும் எனவும் கூறி பொய்யை பரப்பி வருகிறார். இப்படி தேவையற்ற முறையில் பேசிக்கொண்டிருந்தால் உங்கள் நாக்கை அறுப்போம்'' என்று கூறியுள்ளார்.

மேலும், ''பா.ஜ.கவினர் காரை ஏற்றி விவசாயிகளை கொலை செய்கிறீர்கள். பா.ஜ.க முதல்வர் ஒருவர் விவசாயிகளை அடித்துக்கொல்லுமாறு கூறியிருக்கிறார். மூன்று வேளாண்சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு நாங்கள் ஆதரவளிப்போம். விவசாயிகளை காக்கும் கடமை எங்களுக்கு உள்ளது. எதிர்கட்சிகள் மலிவான அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள். விவசாயிகளின் உணர்வுகளுடன் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். தெலங்கானா ராஷ்டிரிய சமிதி விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தும்.

இந்தியாவின் ஜிடிபி பாகிஸ்தான், பங்களாதேஷை விட குறைவாக உள்ளது. ஆனால், மத்திய அரசு தேவையற்ற வரிகளை மக்கள் மீது சுமத்துகிறது. நீங்கள் ஒவ்வொருவருக்கும் 15 லட்சத்தை கொடுத்துவிட்டீர்களா? 2 கோடி வேலைவாய்ப்புகளை கொடுத்து உங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டீர்களா?'' என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து