முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் அறிவிக்கப்பட்ட பந்த்: கடைகள்அடைப்பு பஸ்கள் வழக்கம்போல் ஓடின

வியாழக்கிழமை, 8 நவம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,நவ.- 8 - தேவரின தொண்டர்கள் கொலை செய்யப்பட்டதற்கு நீதிவிசாரணை கேட்டு நேற்று நடந்த பந்தில் மதுரையில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.  தேவர்ஜெயந்தியான கடந்த 30ம் தேதி மதுரையை அடுத்த புளியங்குளம் கிராமத்தில் இருந்து 20 பேர் ஒரு சுமோ காரில் பசும்பொன் சென்றனர். அவர்கள் திரும்பி வந்த போது, சிந்தாமணி ரிங்ரோடு அருகே ஒருகும்பல் சுமோ கார் மீது பெட்ரோல் குண்டை வீசியது. இதில்கார் தீப்பிடித்து எரிந்தது. காரில் இருந்தவர்கள் கருகினர். ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் இதுவரை 6பேர் பலியாகி விட்டார்கள். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவத்தை கண்டித்தும், நீதி விசாரணை கோரியும் தேவரின கூட்டமைப்பு சார்பில் நேற்று பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.    பந்தான நேற்று மாவட்ட நிர்வாகம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்திருந்தது. மதுரையில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.  பஸ்கள்வழக்கம் போல் ஓடின. ஆனால் பயணிகள் குறைவாகவே வந்தனர். கடையடைப்பையொட்டி மதுரையில் நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேவரின கூட்டமைப்பை சேர்ந்த பி.வி.கதிரவன் எம்எல்ஏ, ஸ்ரீதர் வாண்டையார், பி.டி.அரசகுமார் உள்ளிட்ட தலைவர்கள் மதுரை கோரிப்பாளையத்தில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

---

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்