முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே நாளில் 843 பேருக்கு கொரோனா: இந்தியாவில் மொத்த பாதிப்பு 5,389 ஆக மேலும் அதிகரிப்பு

சனிக்கிழமை, 18 மார்ச் 2023      இந்தியா
Corona 2022-12-28

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா தொற்று பாதிப்பு 800-ஐ கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தியாவில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 843 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 5,389 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 126 நாட்களுக்குப் பிறகு முதன்முறையாக ஒரு நாளின் பாதிப்பு எண்ணிக்கை 800-ஐ கடந்துள்ளது.

ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மாநிலங்களில் தலா ஒரு மரணமும், கேரளாவில் இரண்டு மரணமும் பதிவாகியுள்ளன. கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 58 ஆயிரத்து161 ஆக உள்ளது. கொரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 799 ஆக உள்ளது. இதுவரை நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், 220.64 கோடி கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து