முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேருந்து மோதி பலியானவர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதி

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.1 - பேருந்து மோதி பலியானவர் குடும்பத்துக்கு முதல்வர் ஜெயலலிதா ரூ.1 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- சென்னை, கிண்டி, ராஜ்பவன் அருகே  31.3.2013 அன்று இரு சக்கர வாகனம் மீது மாநகர அரசுப் பேருந்து மோதியதில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த ராஜ்பவன் குடியிருப்பு வளாகத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரின் மகன் யுவராஜ்ஞு பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில்  உயிரிழந்தார்  என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். 

இந்த சாலை விபத்தில்  அகால மரணமடைந்த யுவராஜ்ஞுகுடும்பத்திற்கு  எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்த துயர சம்பவத்தில்   உயிரிழந்த யுவராஜின்  குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து   ஒரு லட்சம் ரூபாய் வழங்க  நான்  உத்தரவிட்டுள்ளேன். 

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்