எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![sellur-raj 2023 06 19](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2024/07/02/sellur-raj_2023_06_19.jpg?itok=yGasOzPb)
Source: provided
மதுரை : மதுரை பரவை பேரூராட்சிக்கு ஊர்மெச்சிக்குளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மேற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டிடத்தை முன்னாள் அமைச்சர் செல்லூர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.
அருகில் ஜெயந்திராஜூ, பரவை சேர்மன் கலாமீனாராஜா மற்றும் வில்லாபுரம் ஜெ.ராஜா, எம்.எஸ்.பாண்டியன், ஆர்.அண்ணாத்துரை, பா.குமார், முன்னாள் சேர்மன் பரவைராஜா, கு.திரவியம், வி.பி.ஆர்.செல்வகுமார், நீதிகாந்த், பள்ளி ஆசிரியைகள், பரவை பேரூராட்சி அ.தி.மு.க.கவுன்சிலர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் மதுரை மாநகர மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது-
திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகி உள்ளது. நான் பல்வேறு தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்து கோரிக்கை விடுத்து வருகிறேன். நான் விடுக்கும் கோரிக்கை செவிடன் காதில் ஊதும் சங்கை போல கிடப்பில் போடப்பட்டது. மூன்று ஆண்டுகளாகியும் திமுக தொகுதிகளுக்கு எந்த ஒரு வளர்ச்சி பணிகளையும் செய்து தரவில்லை.சட்டமன்ற தொகுதி வாரியாக 10 நிலுவைத் திட்டங்கள் குறித்து முதல்வருக்கு கடிதம் எழுதினோம்.
10 நிலுவை திட்டங்களில் 1 ஒரு திட்டத்தை கூட முதலமைச்சர் நிறைவேற்றி தரவில்லை.தொகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை செய்து தராமல் மக்களிடம் எம்எல்ஏக்களை திமுக அரசு பழிகாடாக மாற்றுகிறது. மதுரை மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்கக்கூடிய அம்ருத் குடிநீர் திட்டம் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றது. மதுரையில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் எந்தவொரு பயனும் இல்லை. தமிழக அரசிடம் பேசி திட்டங்களை நிறைவேற்ற அமைச்சர்கள் முன் வரவில்லை.
அ.தி.மு.க. 10 ஆண்டுகால ஆட்சியில் கள்ளச்சாராய விற்பனை நடைபெறவில்லை.கள்ளச்சாராயம் மரணங்கள் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க அனுமதி தரவில்லை.கள்ளச்சாராய மரணங்களுக்கு அந்த மாவட்ட ஆட்சியர் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் முழு பொறுப்பு, கள்ளக்குறிச்சிக்கு முதல்வர் ஏன் நேரில் செல்லவில்லை.கள்ளச்சாராயம் மரணங்கள் குறித்து சட்டப்பேரவையில் விதி எண் 56 படி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசுவதற்கு அனுமதிக்கவில்லை.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் சிபிஐ விசாரணை கோரினார்.கோரிக்கையை ஏற்று சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.மடியில் கனமில்லை என்றால் கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த பரிந்துரை செய்யலாமே சட்டப்பேரவை கண்ணியத்தை காக்கும் விதமாக கள்ளச்சாராய மரணங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையிலிருந்து வெளியேறினோம்.
நாங்கள் எங்களுடைய சட்டைகளை கிழித்துக்கொண்டு சட்டப்பேரவையில் இருந்து வெளியேறவில்லையே?, அரசு விற்பனை செய்யும் மதுபானத்தில் கிக்கு இல்லையே என அமைச்சர் துரைமுருகன் பேசியது அமைச்சருக்கு அழகில்லை, திமுக ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என கூறுவதற்கு பதிலாக கள்ளச்சாராய ஆட்சி, போதை பொருள் ஆட்சி என கூறலாம்.
அரசு மதுபானங்கள் கொள்முதலில் வெளிப்படை தன்மைகளுடன் நடந்து கொள்ளவில்லை என தணிக்கைத்துறை குற்றம் சாட்டியுள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் மதுபான கொள்முதல் ஊழல் தொடர்பாக முதல்வர் உட்பட அனைவரும் மீதும் நடவடிக்கை எடுப்போம்.பிரதமர் மோடி மணிப்பூருக்க ஏன் செல்லவில்லை என கேட்கும் ராகுல் காந்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் கள்ளக்குறிச்சிக்கு செல்லவில்லை என கேட்கலாமே?, கள்ளக்குறிச்சிக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் நேரில் வந்திருக்க வேண்டும். நல்ல தலைவர்கள் இல்லை என விஜய் சொன்னதன் அர்த்தம் வேறு, மாணவர்கள் அரசியலுக்கு வராமல் ஒதுங்கி சென்று விடக்கூடாது என்ற நோக்கத்தில் தான் அப்படி சொல்லியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட தயாரா என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பாரா?, சட்டமன்ற தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட்டால் அ.தி.மு.க.வும் தனித்துப் போட்டியிடும். பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளிநாட்டில் சென்று கல்வி கற்க உள்ளதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். அண்ணாமலை வெளிநாட்டில் நன்றாக கல்வி கற்று தமிழகத்திற்கு வர வேண்டும். தலைவர்களைப் பற்றி எப்படி பண்புடன் பேச வேண்டும் என்பதை வெளிநாட்டில் அண்ணாமலை கற்று வரவேண்டும் என கூறினார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பெப்பர் சிக்கன்![]() 1 day 1 min ago |
புரோட்டீன் லட்டு![]() 3 days 20 hours ago |
காலிபிளவர் ரோஸ்ட்![]() 1 week 1 day ago |
-
ராஜீவ்காந்தி மருத்துவமனை முன்பு திடீர் மறியல்: ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் குண்டுகட்டாக கைது
06 Jul 2024சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலையில் சிபிஐ விசாரணை நடத்தக் கோரி அவரது உடல் வைக்கப்பட்டுள்ள சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை அருகே திரண்ட அவரது ஆதரவாளர்கள், உறவினர்கள் சாலை மறி
-
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்
06 Jul 2024சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரண் அடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை.
-
சூர்யகுமார் கேட்ச் குறித்து விமர்சனம்: ஆஸி. ஊடகத்தை விளாசிய கவாஸ்கர்
06 Jul 2024மும்பை : டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச் குறித்து ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று சந்தேகத்தை கிளப்பும் வகையில் செய்தி வெளியிட்டு இருந்த
-
ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தரப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
06 Jul 2024சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கொலையாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தரப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
பீகாரில் மின்னல் தாக்கி 9 பேர் பலி
06 Jul 2024பாட்னா : பீகாரில் உள்ள 6 மாவட்டங்கலில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கியதில் 9 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
பாரம்பரிய தற்காப்பு கலைகள் பள்ளி பாடத்திட்டத்தில் இடம் பெற வேண்டும் : தமிழக அரசுக்கு கவர்னர் ரவி யோசனை
06 Jul 2024சென்னை : பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சிலம்பம், களரி உள்ளிட்ட பாரம்பரிய, தற்காப்பு கலைகளை இடம்பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி யோசனை தெரிவித்துள
-
ஆந்திராவில் இருந்து மணல் எடுத்துவர அனுமதி: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லாரி உரிமையாளர்கள் கடிதம்
06 Jul 2024சென்னை : ஆந்திராவில் இருந்து மணல் எடுத்துவர அனுமதி பெற்றுத் தர வேண்டும் என லாரி உரிமையாளர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
சுப்மன் கிலின் விருப்பம்
06 Jul 2024இந்திய கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
-
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் படுகொலை: ஓ.பன்னீர்செல்வம். கண்டனம்
06 Jul 2024சென்னை : பகுஜன் சமாஜ் மாநில தலைவர் படுகொலைக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ஊட்டி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்த வார்டு கவுன்சிலர் கைது
06 Jul 2024ஊட்டி : ஊட்டி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் வைத்திருந்த ஊராட்சி வார்டு கவுன்சிலரை போலீசார் கைது செய்தனர்.
-
ஜெயக்குமார் வழக்கு: காங்கிரஸ் நிர்வாகிகளிடம் 2 மணி நேரம் விசாரணை
06 Jul 2024திசையன்விளை : ஜெயக்குமார் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
-
சீனாவின் 2-வது மிகப்பெரிய ஏரியில் அணை உடைந்தது : 5,700 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்
06 Jul 2024பெய்ஜிங் : சீனாவின் 2-வது மிகப்பெரிய ஏரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
-
நீட் தேர்வு முறைகேடு எதிரொலி: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் மேலும் தாமதம்
06 Jul 2024புதுடெல்லி : நீட் முறைகேடு தொடர்பான வழக்குகளை நாளை (ஜூலை 8ம் தேதி) சுப்ரீம் கோர்ட் விசாரிக்கவுள்ள நிலையில் இளநிலை மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் இம்மாத இறுதியில் தொட
-
சத்தீஷ்காரில் 5 நக்சல்கள் சரண்
06 Jul 2024ராஞ்சி : சத்தீஷ்காரில் பாதுகாப்பு படையினரிடம் 5 நக்சல்கள் சரணடைந்தனர்.
-
தங்கம் விலை உயர்வு
06 Jul 2024சென்னை : தங்கம் விலை கடந்த மாதத்தில் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.54 ஆயிரத்தை கடந்தது.
-
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்
06 Jul 2024சென்னை : தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரேமலதா விஜயகாந்த், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ள
-
அசாமில் வெள்ள பாதிப்பு: 24.50 லட்சம் பேர் தவிப்பு
06 Jul 2024குவாகாத்தி : அசாம் வெள்ள பாதிப்புகள் சனிக்கிழமை மேலும் மோசமடைந்துள்ளது.
-
இருநாட்டு உறவு மேலும் வலுப்படும்: பிரிட்டன் புதிய பிரதமருடன் பிரதமர் மோடி உரையாடல்
06 Jul 2024புதுடெல்லி : பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மருடன் தொலைபேசியில் பிரதமர் மோடி உரையாடினார்.
-
ஆம்ஸ்ட்ராங் படுகொலை: ஜே.பி.நட்டா கண்டனம்
06 Jul 2024சென்னை : ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளை விரைவாக கண்டறிந்து தண்டிக்க வேண்டுமென பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வலியுறுத்தியுள்ளார்.
-
4 நாட்கள் சுற்றுப்பயணமாக ஒடிசா சென்றார் ஜனாதிபதி
06 Jul 2024புவனேஸ்வர் : 4 நாள் சுற்றுப்பயணமாக ஒடிசா சென்ற ஜனாதிபதி திரெளபதி முர்மு, ஒடிசாவில் உள்ள தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் 13-வது பட்டமளிப்பு நிகழ்ச்சியில
-
பயிற்சியாளராக நான், ரோகித்திடம் எதையும் மாற்ற முயற்சிக்கவில்லை : ராகுல் டிராவிட் பேட்டி
06 Jul 2024மும்பை : இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கேப்டன் ரோகித் சர்மாவிடம் எந்த ஒரு விஷயத்தையும் மாற்ற முயற்சிக்கவில்லை என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
-
வாஷிங்டன் சுந்தர் போராட்டம் வீண்: ஜிம்பாப்வேயிடம் வீழ்ந்தது இந்தியா
06 Jul 2024ஹராரே : அனுபவம் இல்லாத இந்திய இளம் அணி முதல் டி-20 போட்டியில் ஜிம்பாப்வேயிடம் வீழ்ந்தது
பந்துவீச்சு தேர்வு...
-
2028 ஒலிம்பிக்கில் ரோகித், கோலி விளையாடுவார்கள் : பிரதமர் மோடி நம்பிக்கை
06 Jul 2024புதுடெல்லி : டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
-
பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 22-ம் தேதி ஆரம்பம்: பார்லி.யில் ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல் - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்
06 Jul 2024புதுடெல்லி : நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் ஜூலை 23-ம் தேதி பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
-
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகத்தில் நடைபெற்ற சி.பி.சி.ஐ.டி. சோதனை நிறைவு
07 Jul 2024கரூர் : முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகத்தில் நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய சோதனை நிறைவு பெற்றுள்ளது.