எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Modi -2024-07-02](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2024/07/02/Modi_-2024-07-02.jpg?itok=W1P_FYFq)
Source: provided
புதுடெல்லி : பாராளுமன்ற மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சியினரின் முழக்கத்திற்கு மத்தியில் பிரதமர் மோடி நேற்று பதிலளித்து பேசினார். அப்போது பா.ஜ.க. தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி வலுவாக உள்ளது என்றும், காங்கிரஸ் கட்சி ஒட்டுன்ணி கட்சி என்றும் கடுமையாக தாக்கி பேசினார்.
பாராளுமன்ற மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி நேற்று பேசியதாவது., கடந்த காலங்களில் ஒரு ரூபாய் செலவு செய்தால் ஏழைகளுக்கு 10 பைசா தான் கிடைத்தது. ஐ.மு., கூட்டணி ஆட்சியின் மீது மக்கள் முற்றிலுமாக நம்பிக்கை இழந்துவிட்டனர்.
காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் நடந்த ஊழலின் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது. நம்பிக்கை இழந்த சூழலில் நாட்டை எங்கள் அரசு மீட்டுள்ளது. ஊழல் ராஜ்ஜியங்கள் ஒழிக்கப்பட்டு விட்டன. காஸ் சிலிண்டர் இணைப்பை பெறக் கூட எம்.பி.,க்களின் சிபாரிசு பெற வேண்டிய நிலை முந்தைய ஆட்சியில் இருந்தது. 2014 வரை ஊழல் எப்படி செய்வது என்று போட்டி இருந்தது. அப்போதெல்லாம் ஊழல்கள் பற்றிய செய்திகளே அதிகம் வந்தன. 2014க்கு பிறகு இந்தியாவின் மாற்றத்தை மக்கள் பார்க்கத் துவங்கினர்.
5ஜி தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்தியது எங்களின் அரசு தான். செய்ய முடியாத காரியங்களையும் நாங்கள் செய்து காட்டினோம். பயங்கரவாதத்தை துல்லிய தாக்குதல் மூலம் முறியடித்தோம். ஐ.மு கூட்டணி ஆட்சியில் நாட்டின் வளத்தை தங்களின் சொத்து போல கொள்ளையடித்தனர். ஓட்டுகளுக்காக ஜம்மு காஷ்மீரில் வைக்கப்பட்டிருந்த 370வது பிரிவை, நாங்கள் நீக்கினோம். 370வது பிரிவை நீக்கிய பிறகு காஷ்மீரில் வளர்ச்சி காணப்படுகிறது. அங்கு பயங்கரவாதம் குறைந்து, ஜனநாயகம் தழைத்து வருகிறது. பயங்கரவாதிகளுக்கு அவர்களின் கண்முன் தகுந்த பாடம் புகட்டப்பட்டது.
வளர்ச்சி தொடர்பான எங்களின் சாதனைகளை நாங்களே முறியடித்து வருகிறோம். எங்கள் வேகத்தை மிஞ்சுவதற்கு தற்போது நாங்கள் முயன்று வருகிறோம். 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தை 5வது இடத்திற்கு முன்னேற்றியுள்ளோம். 3வது இடத்திற்கு முன்னேற்ற இலக்கு நிர்ணயித்துள்ளோம். கோடிக்கணக்கான சகோதரிகள் தொழில்முனைவோராக மாறியுள்ளனர். 3வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள நாங்கள், 3 மடங்கு வேகத்தில் பணியாற்றுவோம்.
தமிழகத்தில் பல்வேறு தொகுதிகளில் பா.ஜ.,வுக்கு ஏராளமான ஓட்டுகள் கிடைத்தன. அங்கு பல இடங்களில் 2வது இடத்தை பெற்றுள்ளோம். கேரளாவில் முதன்முறையாக பா.ஜ.,வுக்கு எம்.பி., பதவி கிடைத்துள்ளது. இதற்கு முன்பு ஆதரவு இல்லாத பல மாநிலங்களில் கூட தற்போது எங்களுக்கு அன்பும் ஆதரவும் கிடைத்துள்ளது.
எதிர்க்கட்சி வரிசையில் அமருமாறு தான் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் தீர்ப்பளித்தனர். அங்கேயே காங்கிரஸ் தொடர்ந்து அமர்ந்து கொண்டிருக்கும். 3 தேர்தல்கள் நடந்தும் காங்கிரசால் ஆட்சியமைக்க முடியாமல் தோற்று போயுள்ளது. எங்களை தோற்கடித்துவிட்டது போன்ற மாயையை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது. தோல்விக்கு பின் அக்கட்சி சுயபரிசோதனை செய்து ஆராய வேண்டும். காங்கிரசால் விவாதிக்க முடியாத போதெல்லாம் தொடர்ந்து கூச்சலிட்டு கொண்டிருப்பர். 2029ல் தேர்தலிலும் காங்., எதிர்க்கட்சி வரிசையிலேயே அமரும்.
தங்களுக்கு கிடைத்த தோல்வியை காங்., கட்சியால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. 1984க்கு பிறகு அக்கட்சி ஒருமுறை கூட 250 இடங்களுக்கு மேல் வெற்றி பெறவில்லை. தேர்தல்களில் தோல்வி அடைவதில் உலக சாதனை படைத்திருக்கிறது காங்கிரஸ். 543 தொகுதிகளில் 99 இடங்களை வென்ற காங்கிரஸ், 100க்கு 99 இடங்களில் வென்றதுபோல் மக்களை ஏமாற்றுகிறது. 13 மாநிலங்களில் காங்., ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால் அவர்கள் ஹீரோ போன்று நடந்து கொள்கிறார்கள்.
எங்கெல்லாம் அவர்கள் தனியாக போட்டியிட்டார்களோ அங்கெல்லாம் அவர்களின் ஓட்டு சதவீதம் குறைந்துள்ளது. 64 தொகுதிகளில் தனித்துபோட்டியிட்டு 2ல் மட்டுமே வென்றுள்ளனர். கூட்டணி கட்சிகள் இல்லை என்றால், காங்கிரஸ் பூஜ்ஜியம். ஒட்டுண்ணி போல ஊடுருவி, கூட்டணி கட்சிகளையும் சேர்த்து அழித்து வருகிறது. இனி அக்கட்சி ஒட்டுண்ணி கட்சி என அழைக்கப்படும்.
வட மாநிலங்களுக்கு தெற்கிலும், தெற்குக்கு எதிராக வடக்கிலும் பேசி வருகிறது காங்கிரஸ். சமூகங்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி மோதலை தூண்டும் வகையில் செயல்படுகிறது. நாட்டை துண்டாட நினைப்பவர்களுக்கு அக்கட்சியில் இடமளிக்கப்படுகிறது. அக்கட்சி அளித்த வாக்குறுதிகள் நாட்டின் பொருளாதாரத்தை எரித்துவிடும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
பிரதமர் மோடி உரையாற்றியபோது 'மணிப்பூர், நீட் விவகாரத்தில் நீதி வேண்டும்' என்றும், 'நீட் வேண்டாம்' என்றும், மாணவர்களை காப்பாற்று' எனவும் தமிழக எம்.பி.,க்கள் தமிழில் முழக்கமிட்டனர். மற்ற எதிர்க்கட்சியினரும் பிரதமரின் பேச்சுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் முழக்கமிட்டனர். மேலும் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டும் எதிர்க்கட்சியினர் முழக்கம் எழுப்பினர். இதனை அடுத்து 'எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் தவறான முன்னுதாரணமாக திகழ்கின்றனர். எதிர்க்கட்சியினர் மாண்புடன் நடந்து கொள்ள வேண்டும்' என சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரித்தார். பிரதமர் மோடியின் பதிலுரையின்போது எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கூச்சலிட்டபோதும், எதிர்க்கட்சி தலைவர் ராகுல், அமைதியாக பிரதமரின் பேச்சை கேட்டு வந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பெப்பர் சிக்கன்![]() 1 day 1 min ago |
புரோட்டீன் லட்டு![]() 3 days 20 hours ago |
காலிபிளவர் ரோஸ்ட்![]() 1 week 1 day ago |
-
ராஜீவ்காந்தி மருத்துவமனை முன்பு திடீர் மறியல்: ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் குண்டுகட்டாக கைது
06 Jul 2024சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலையில் சிபிஐ விசாரணை நடத்தக் கோரி அவரது உடல் வைக்கப்பட்டுள்ள சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை அருகே திரண்ட அவரது ஆதரவாளர்கள், உறவினர்கள் சாலை மறி
-
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்
06 Jul 2024சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரண் அடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை.
-
மொபைல் கட்டண உயர்வு: மத்திய அரசு விளக்கம்
06 Jul 2024புதுடெல்லி : மொபைல் கட்டண உயர்வு குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
-
சூர்யகுமார் கேட்ச் குறித்து விமர்சனம்: ஆஸி. ஊடகத்தை விளாசிய கவாஸ்கர்
06 Jul 2024மும்பை : டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச் குறித்து ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று சந்தேகத்தை கிளப்பும் வகையில் செய்தி வெளியிட்டு இருந்த
-
அனைவரின்பாதுகாப்பையும் உறுதி செய்ய சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுக : அரசுக்கு த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தல்
06 Jul 2024சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை போன்ற கொடும் குற்றச்சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு
-
ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தரப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
06 Jul 2024சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கொலையாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தரப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தது ஏன்? - கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்
06 Jul 2024சென்னை : ஆற்காடு சுரேசின் பிறந்தநாளில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக சரண் அடைந்தவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
-
பீகாரில் மின்னல் தாக்கி 9 பேர் பலி
06 Jul 2024பாட்னா : பீகாரில் உள்ள 6 மாவட்டங்கலில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கியதில் 9 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
பாரம்பரிய தற்காப்பு கலைகள் பள்ளி பாடத்திட்டத்தில் இடம் பெற வேண்டும் : தமிழக அரசுக்கு கவர்னர் ரவி யோசனை
06 Jul 2024சென்னை : பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சிலம்பம், களரி உள்ளிட்ட பாரம்பரிய, தற்காப்பு கலைகளை இடம்பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி யோசனை தெரிவித்துள
-
ஆந்திராவில் இருந்து மணல் எடுத்துவர அனுமதி: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லாரி உரிமையாளர்கள் கடிதம்
06 Jul 2024சென்னை : ஆந்திராவில் இருந்து மணல் எடுத்துவர அனுமதி பெற்றுத் தர வேண்டும் என லாரி உரிமையாளர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
சுப்மன் கிலின் விருப்பம்
06 Jul 2024இந்திய கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
-
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் படுகொலை: ஓ.பன்னீர்செல்வம். கண்டனம்
06 Jul 2024சென்னை : பகுஜன் சமாஜ் மாநில தலைவர் படுகொலைக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ஊட்டி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்த வார்டு கவுன்சிலர் கைது
06 Jul 2024ஊட்டி : ஊட்டி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் வைத்திருந்த ஊராட்சி வார்டு கவுன்சிலரை போலீசார் கைது செய்தனர்.
-
ஜெயக்குமார் வழக்கு: காங்கிரஸ் நிர்வாகிகளிடம் 2 மணி நேரம் விசாரணை
06 Jul 2024திசையன்விளை : ஜெயக்குமார் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
-
நீட் தேர்வு முறைகேடு எதிரொலி: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் மேலும் தாமதம்
06 Jul 2024புதுடெல்லி : நீட் முறைகேடு தொடர்பான வழக்குகளை நாளை (ஜூலை 8ம் தேதி) சுப்ரீம் கோர்ட் விசாரிக்கவுள்ள நிலையில் இளநிலை மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் இம்மாத இறுதியில் தொட
-
சீனாவின் 2-வது மிகப்பெரிய ஏரியில் அணை உடைந்தது : 5,700 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்
06 Jul 2024பெய்ஜிங் : சீனாவின் 2-வது மிகப்பெரிய ஏரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
-
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்
06 Jul 2024சென்னை : தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரேமலதா விஜயகாந்த், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ள
-
தங்கம் விலை உயர்வு
06 Jul 2024சென்னை : தங்கம் விலை கடந்த மாதத்தில் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.54 ஆயிரத்தை கடந்தது.
-
சத்தீஷ்காரில் 5 நக்சல்கள் சரண்
06 Jul 2024ராஞ்சி : சத்தீஷ்காரில் பாதுகாப்பு படையினரிடம் 5 நக்சல்கள் சரணடைந்தனர்.
-
அசாமில் வெள்ள பாதிப்பு: 24.50 லட்சம் பேர் தவிப்பு
06 Jul 2024குவாகாத்தி : அசாம் வெள்ள பாதிப்புகள் சனிக்கிழமை மேலும் மோசமடைந்துள்ளது.
-
இருநாட்டு உறவு மேலும் வலுப்படும்: பிரிட்டன் புதிய பிரதமருடன் பிரதமர் மோடி உரையாடல்
06 Jul 2024புதுடெல்லி : பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மருடன் தொலைபேசியில் பிரதமர் மோடி உரையாடினார்.
-
ஆம்ஸ்ட்ராங் படுகொலை: ஜே.பி.நட்டா கண்டனம்
06 Jul 2024சென்னை : ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளை விரைவாக கண்டறிந்து தண்டிக்க வேண்டுமென பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வலியுறுத்தியுள்ளார்.
-
4 நாட்கள் சுற்றுப்பயணமாக ஒடிசா சென்றார் ஜனாதிபதி
06 Jul 2024புவனேஸ்வர் : 4 நாள் சுற்றுப்பயணமாக ஒடிசா சென்ற ஜனாதிபதி திரெளபதி முர்மு, ஒடிசாவில் உள்ள தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் 13-வது பட்டமளிப்பு நிகழ்ச்சியில
-
பயிற்சியாளராக நான், ரோகித்திடம் எதையும் மாற்ற முயற்சிக்கவில்லை : ராகுல் டிராவிட் பேட்டி
06 Jul 2024மும்பை : இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கேப்டன் ரோகித் சர்மாவிடம் எந்த ஒரு விஷயத்தையும் மாற்ற முயற்சிக்கவில்லை என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
-
வாஷிங்டன் சுந்தர் போராட்டம் வீண்: ஜிம்பாப்வேயிடம் வீழ்ந்தது இந்தியா
06 Jul 2024ஹராரே : அனுபவம் இல்லாத இந்திய இளம் அணி முதல் டி-20 போட்டியில் ஜிம்பாப்வேயிடம் வீழ்ந்தது
பந்துவீச்சு தேர்வு...