எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![INDIA 2024-06-21](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2024/07/02/INDIA_2024-06-21.jpg?itok=vKepVVUY)
Source: provided
2024-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் ஜூன் 1- ந் தேதி தொடங்கி ஜூலை 29-ந் தேதி முடிவடைந்தது. இதில் இறுதிபோட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதியது. இந்த பரபரப்பான போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இந்த 2024-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் பல சாதனைகள் படைக்கப்பட்டது. நியூசிலாந்து வீரர் பெர்குசன் 4 ஓவர்களையும் மெய்டன் ஓவர்களாக வீசினார். இந்த உலகக் கோப்பை அதிக பவுண்டரிகள் விளாசப்பட்டது. ஒரு டி20 உலகக் கோப்பை தொடரில் ஒரு வீரர் அதிக சிக்சர் அடித்தது இந்த உலகக் கோப்பையில் தான். அதிக சிக்சர் விளாசிய கிறிஸ் கெய்ல் சாதனையை அந்த அணி வீரரான பூரன் முறியடித்தார்.
அந்த வகையில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் இதுவரை இல்லாத அளவாக 44 மெய்டன் ஓவர்கள் வீசப்பட்டுள்ளன. 2007-ல் தொடங்கப்பட்ட டி20 உலக கோப்பை தொடர் முதல், 2024 ஆண்டு வரை 152 மெய்டன் ஓவர்கள் வீசப்பட்டுள்ளன. 2024-ம் ஆண்டு அதிகபட்சமாக 44 மெய்டன் ஓவர்கள் வீசப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக 2012-ம் ஆண்டில் 21 மெய்டன்கள் வீசப்பட்டது. 2009-ம் ஆண்டில் வெறும் 5 மெய்டன்களே வீச்சப்பட்டது. ஒவ்வொரு டி20 உலகக் கோப்பை தொடரில் வீசப்பட்ட மெய்டன் ஓவர்கள் விவரம்:- 15 - 2007, 05 - 2009, 11 - 2010, 21 - 2012, 13 - 2014, 09 - 2016, 17 - 2021, 17 - 2022, 44 - 2024.
__________________________________________________________________________________________________
ஏன் விண்ணப்பிக்கவில்லை? - டிராவிட் குறித்து ஜெய்ஷா
17 வருடங்களுக்கு பிறகு டி20 உலகக் கோப்பை இந்திய அணி கைப்பற்றியது. பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோரின் தலைமையில் கீழ் இந்திய அணி கோப்பை வென்று சாதித்தது. இந்நிலையில் பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட் ஏன் விண்ணப்பிக்கவில்லை என்ற காரணத்தை ஜெய்ஷா கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- குடும்பக் கடமைகள் காரணமாக அவர் விலக விரும்புவதாக தெரிவித்தார். அவருடைய முடிவை நாங்கள் மதிக்கிறோம். அவரை நீட்டிக்க நான் வற்புறுத்த விரும்பவில்லை.
ராகுல் பாய் கடந்த ஐந்தரை ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட்டுக்கு சேவை செய்துள்ளார். அவர் மூன்று ஆண்டுகள் தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநராக இருந்தார். பின்னர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக, அவர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றினார். இந்த டி20 உலகக் கோப்பை பட்டத்தை வென்றதில் ரோகித் சர்மாவைப் போலவே ராகுல் டிராவிட்டின் பங்கும் முக்கியமானது. அவர் 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு அணியை அழைத்துச் சென்றார். ஆனால் அதில் தோலிவியடைந்தால் மீண்டும் பயிற்சியில் தொடர விரும்பினார். என்று அவர் கூறினார்.
__________________________________________________________________________________________________
விம்பிள்டன் டென்னிஸ்: வெளியேறிய சுமித் நாகல்
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சுமித் நாகல், செர்பியாவின் மியோமிர் கெக்மனோவிக் உடன் மோதினார். இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-2 என்ற புள்ளிக்கணக்கில் மியோமிர் கெக்மனோவிக்கும், 2வது செட்டை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் சுமித் நாகலும் கைப்பற்றினர். இதையடுத்து நடைபெற்ற 3 மற்றும் 4வது செட்களை மியோமிர் கெக்மனோவிக் முறையே 6-3, 6-4 என்ற என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். இதன் மூலம் இந்த ஆட்டத்தில் சுமித் நாகல் 2-6, 6-3, 3-6, 4-6 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வி கண்டு முதல் சுற்றுடன் வெளியேறினார்.
__________________________________________________________________________________________________
யுவராஜ் சிங்கின் சாதனையை சமன் செய்தார் விராட் கோலி
ஐ.சி.சி. 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடரில் மற்ற போட்டிகளில் சொதப்பிய விராட் கோலி முக்கியமான இறுதிப்போட்டியில், விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை நங்கூரமாக நிலைத்து நின்று காப்பாற்றினார். அதனால் இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆட்ட நாயகன் விருது வாங்கிய நிகழ்விலேயே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார். இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக ஓய்வை அறிவித்துள்ளார்.
விராட் கோலி ஏற்கனவே ஐ.சி.சி. வெள்ளைப்பந்து தொடர்களான 19- வயதுக்குட்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடர்களிலும் கோப்பைகளை வென்றுள்ளார். அந்த வரிசையில் தற்போது டி20 உலகக்கோப்பையையும் அவர் வென்றுள்ளார்.
இதன் வாயிலாக அண்டர்-19 உலகக்கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை, 20 ஓவர் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய அனைத்து வகையான ஐசிசி வெள்ளைப்பந்து கோப்பைகளை வென்ற வீரர் என்ற யுவராஜ் சிங்கின் மகத்தான சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார். ஓய்வு பெறுவதற்குள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை மட்டும் கைப்பற்றினால் அனைத்து விதமான ஐ.சி.சி. கோப்பைகளையும் வென்ற ஒரே வீரர் என்ற உலக சாதனையை அவர் படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பெப்பர் சிக்கன்![]() 1 day 1 min ago |
புரோட்டீன் லட்டு![]() 3 days 20 hours ago |
காலிபிளவர் ரோஸ்ட்![]() 1 week 1 day ago |
-
ராஜீவ்காந்தி மருத்துவமனை முன்பு திடீர் மறியல்: ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் குண்டுகட்டாக கைது
06 Jul 2024சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலையில் சிபிஐ விசாரணை நடத்தக் கோரி அவரது உடல் வைக்கப்பட்டுள்ள சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை அருகே திரண்ட அவரது ஆதரவாளர்கள், உறவினர்கள் சாலை மறி
-
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்
06 Jul 2024சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரண் அடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை.
-
சூர்யகுமார் கேட்ச் குறித்து விமர்சனம்: ஆஸி. ஊடகத்தை விளாசிய கவாஸ்கர்
06 Jul 2024மும்பை : டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச் குறித்து ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று சந்தேகத்தை கிளப்பும் வகையில் செய்தி வெளியிட்டு இருந்த
-
ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தரப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
06 Jul 2024சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கொலையாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தரப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
பீகாரில் மின்னல் தாக்கி 9 பேர் பலி
06 Jul 2024பாட்னா : பீகாரில் உள்ள 6 மாவட்டங்கலில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கியதில் 9 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
பாரம்பரிய தற்காப்பு கலைகள் பள்ளி பாடத்திட்டத்தில் இடம் பெற வேண்டும் : தமிழக அரசுக்கு கவர்னர் ரவி யோசனை
06 Jul 2024சென்னை : பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சிலம்பம், களரி உள்ளிட்ட பாரம்பரிய, தற்காப்பு கலைகளை இடம்பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி யோசனை தெரிவித்துள
-
ஆந்திராவில் இருந்து மணல் எடுத்துவர அனுமதி: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லாரி உரிமையாளர்கள் கடிதம்
06 Jul 2024சென்னை : ஆந்திராவில் இருந்து மணல் எடுத்துவர அனுமதி பெற்றுத் தர வேண்டும் என லாரி உரிமையாளர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
சுப்மன் கிலின் விருப்பம்
06 Jul 2024இந்திய கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
-
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் படுகொலை: ஓ.பன்னீர்செல்வம். கண்டனம்
06 Jul 2024சென்னை : பகுஜன் சமாஜ் மாநில தலைவர் படுகொலைக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ஊட்டி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்த வார்டு கவுன்சிலர் கைது
06 Jul 2024ஊட்டி : ஊட்டி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் வைத்திருந்த ஊராட்சி வார்டு கவுன்சிலரை போலீசார் கைது செய்தனர்.
-
ஜெயக்குமார் வழக்கு: காங்கிரஸ் நிர்வாகிகளிடம் 2 மணி நேரம் விசாரணை
06 Jul 2024திசையன்விளை : ஜெயக்குமார் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
-
சீனாவின் 2-வது மிகப்பெரிய ஏரியில் அணை உடைந்தது : 5,700 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்
06 Jul 2024பெய்ஜிங் : சீனாவின் 2-வது மிகப்பெரிய ஏரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
-
நீட் தேர்வு முறைகேடு எதிரொலி: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் மேலும் தாமதம்
06 Jul 2024புதுடெல்லி : நீட் முறைகேடு தொடர்பான வழக்குகளை நாளை (ஜூலை 8ம் தேதி) சுப்ரீம் கோர்ட் விசாரிக்கவுள்ள நிலையில் இளநிலை மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் இம்மாத இறுதியில் தொட
-
தங்கம் விலை உயர்வு
06 Jul 2024சென்னை : தங்கம் விலை கடந்த மாதத்தில் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.54 ஆயிரத்தை கடந்தது.
-
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்
06 Jul 2024சென்னை : தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரேமலதா விஜயகாந்த், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ள
-
சத்தீஷ்காரில் 5 நக்சல்கள் சரண்
06 Jul 2024ராஞ்சி : சத்தீஷ்காரில் பாதுகாப்பு படையினரிடம் 5 நக்சல்கள் சரணடைந்தனர்.
-
அசாமில் வெள்ள பாதிப்பு: 24.50 லட்சம் பேர் தவிப்பு
06 Jul 2024குவாகாத்தி : அசாம் வெள்ள பாதிப்புகள் சனிக்கிழமை மேலும் மோசமடைந்துள்ளது.
-
இருநாட்டு உறவு மேலும் வலுப்படும்: பிரிட்டன் புதிய பிரதமருடன் பிரதமர் மோடி உரையாடல்
06 Jul 2024புதுடெல்லி : பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மருடன் தொலைபேசியில் பிரதமர் மோடி உரையாடினார்.
-
ஆம்ஸ்ட்ராங் படுகொலை: ஜே.பி.நட்டா கண்டனம்
06 Jul 2024சென்னை : ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளை விரைவாக கண்டறிந்து தண்டிக்க வேண்டுமென பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வலியுறுத்தியுள்ளார்.
-
4 நாட்கள் சுற்றுப்பயணமாக ஒடிசா சென்றார் ஜனாதிபதி
06 Jul 2024புவனேஸ்வர் : 4 நாள் சுற்றுப்பயணமாக ஒடிசா சென்ற ஜனாதிபதி திரெளபதி முர்மு, ஒடிசாவில் உள்ள தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் 13-வது பட்டமளிப்பு நிகழ்ச்சியில
-
பயிற்சியாளராக நான், ரோகித்திடம் எதையும் மாற்ற முயற்சிக்கவில்லை : ராகுல் டிராவிட் பேட்டி
06 Jul 2024மும்பை : இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கேப்டன் ரோகித் சர்மாவிடம் எந்த ஒரு விஷயத்தையும் மாற்ற முயற்சிக்கவில்லை என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
-
வாஷிங்டன் சுந்தர் போராட்டம் வீண்: ஜிம்பாப்வேயிடம் வீழ்ந்தது இந்தியா
06 Jul 2024ஹராரே : அனுபவம் இல்லாத இந்திய இளம் அணி முதல் டி-20 போட்டியில் ஜிம்பாப்வேயிடம் வீழ்ந்தது
பந்துவீச்சு தேர்வு...
-
2028 ஒலிம்பிக்கில் ரோகித், கோலி விளையாடுவார்கள் : பிரதமர் மோடி நம்பிக்கை
06 Jul 2024புதுடெல்லி : டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
-
பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 22-ம் தேதி ஆரம்பம்: பார்லி.யில் ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல் - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்
06 Jul 2024புதுடெல்லி : நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் ஜூலை 23-ம் தேதி பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
-
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகத்தில் நடைபெற்ற சி.பி.சி.ஐ.டி. சோதனை நிறைவு
07 Jul 2024கரூர் : முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகத்தில் நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய சோதனை நிறைவு பெற்றுள்ளது.