எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பாரா ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கி சுடுதல் பெண்களுக்கான 10மீ ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் பிரிவு இன்று நடைபெற்றது. 8 வீராங்கனைகள் பங்கேற்ற இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய வீராங்கனைகள் தங்கம் , வெண்கலம் என 2 பதக்கங்களை வென்றுள்ளனர். இந்திய வீராங்கனை அவனி லேகரா 249.7 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.மற்றொரு இந்திய வீராங்கனை மோனா அகர்வால் 228.7 புள்ளிகள் பெற்று வெண்கலம் வென்றார்.
இந்த நிலையில் அவனி லேகரா மற்றும் மோனா அகர்வாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், துப்பாக்கி சுடுதல் பெண்களுக்கான 10மீ ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்ற அவனி லேகராவுக்கு வாழ்த்துகள். மேலும் பாரா ஒலிம்பிக்கில் 3 பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் என்ற சாதனையும் படைத்துள்ளார். அவனி லேகராவின் அர்ப்பணிப்பு இந்தியாவை பெருமைப்படுத்துகிறது.என தெரிவித்துள்ளார். வெண்கலப் பதக்கம் வென்ற மோனா அகர்வாலுக்கு வாழ்த்துகள். மோனா அகர்வாலின் குறிப்பிடத்தக்க சாதனை அவரது அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. மோனாவால் இந்தியா பெருமை கொள்கிறது. என தெரிவித்துள்ளார்.
____________________________________________________________________________
கபில்தேவ் சாதனை சமன்
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. தொடக்க டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜோ ரூட் 143 ரன்கள் எடுத்தார். அட்கின்சன் 74 ரன்களுடனும், மேத்யூ போட்ஸ் 20 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இலங்கை தரப்பில் அசிதா பெர்ணாண்டோ, மிலன் ரத்னாயகே மற்றும் லஹிரு குமரா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய அட்கின்சன் சதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் மேத்யூ போட்ஸ் 21 ரன்னில் அவுட் ஆனார். இந்த ஆட்டத்தில் சதம் அடித்த அட்கின்சன் கபில் தேவின் சாதனை ஒன்றை சமன் செய்துள்ளார். அதாவது, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்தவர்கள் பட்டியலில் கபில் தேவின் (4 சிக்சர்) சாதனையை கஸ் அட்கின்சன் (4 சிக்சர்) சமன் செய்துள்ளார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் (9 சிக்ஸ்) உள்ளார்.
____________________________________________________________________________
முதல் நாள் ஆட்டம் ரத்து
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதலாவது டெஸ்டில் வங்காளதேசம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அதே ராவல்பிண்டியில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்க இருந்தது. னால் ராவல்பிண்டியில் கனமழை பெய்வதன் காரணமாக இந்த டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
____________________________________________________________________________
ரஷித் கான் திடீர் ஓய்வு..?
டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் சிறிது காலம் ஓய்வு எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவராக ரஷித் கான் வலம் வருகிறார். அவர் தொடர்ச்சியாக ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார். ஆனால், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணியில் ரஷித் கானின் பெயர் இடம்பெறவில்லை. முதுகில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால் ரஷித் கான் அடுத்த ஓராண்டுக்கு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடப் போவதில்லை என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவித்ததாவது: ரஷித் கானுக்கு அறுவை சிகிச்சை முடிந்த பிறகு, அவரது வேலைப் பளுவை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்துவதே எங்களது திட்டம். அடுத்த 6 மாதம் அல்லது ஓராண்டுக்கு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணியில் ரஷித் கான் விளையாடப் போவதில்லை என்பதும் திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் அவர் தொடர்ச்சியாக பந்துவீச வேண்டியிருக்கும். முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், டெஸ்ட் போட்டிகளில் அவர் தொடர்ச்சியாக பந்துவீசுவது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஒருநாள் தொடரில் ரஷித் கான் விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 weeks 4 days ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்3 weeks 40 min ago |
வயிற்று பொருமல் மற்றும் வாயு தொல்லை குணமாக இயற்கை மருத்துவம்.3 weeks 3 days ago |
-
75 ஆண்டுகள் கழித்தும் தி.மு.க. கம்பீரமாக காட்சியளிக்கிறது: முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
17 Sep 2024சென்னை, ஒரு இயக்கம் 75 ஆண்டுகள் கழித்தும் கம்பீரமாக காட்சியளிப்பது சாதாரனமான சாதனை அல்ல என்று சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற தி.மு.க.
-
சிகிச்சை பெற்று வந்த மேலாளர் பலி: மதுரை விடுதி தீ விபத்து : உயிரிழப்பு 3 ஆக உயர்வு
17 Sep 2024மதுரை : மதுரை தீ விபத்து சம்பவத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் விடுதி மேலாளர் உயிரிழந்தார்.
-
அ.தி.மு.க. மீண்டும் ஒன்றாகும்: ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை
17 Sep 2024சென்னை : பெரியாரின் சமூக சீர்த்திருத்த கொள்கைகளை அ.தி.மு.க.வினர் பின்பற்றி வருகிறார்கள் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுக மீண்டும் ஒன்றாக மலரும் என்று நம்பிக்கை
-
விஜய்க்கு திருமாவளவன் வாழ்த்து
17 Sep 2024சென்னை, தந்தை பெரியாரின் 146-வது பிறந்தநாளையொட்டி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
-
கொல்கத்தா டாக்டர் கொலை வழக்கு: விசாரணையை நேரலை செய்வதை நிறுத்தம் செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு
17 Sep 2024புதுடெல்லி, நேரலையால் பெண் வழக்கறிஞர்கள் ஆசிட் வீச்சு மற்றும் பாலியல் வன்கொடுமை அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாக கபில் சிபல் தெரிவித்த நிலையில் நேரலையை நிறுத்த சுப்ர
-
அர்ஜூன் டெண்டுல்கர் அசத்தல்
17 Sep 2024டாக்டர் கே திம்மப்பையா நினைவு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 19 வயது முதல் 23 வயதுக்கு உட்பட்டோர் மட்டுமே விளையாடி வருகின்றனர்.
-
மகாவிஷ்ணு விவகாரம்: சென்னை முதன்மை கல்வி அலுவலர் பணியிட மாற்றம்
17 Sep 2024சென்னை, மகா விஷ்ணு விவகாரத்தில் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
-
டெல்லியின் புதிய முதல்வர் அதிஷி : ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு
17 Sep 2024புதுடில்லி : மதுபான ஊழல் வழக்கில், ஜாமீனில் வெளியே வந்துள்ள முதல்வர் கெஜ்ரிவால், தனது பதவியை ராஜினாமா செய்தார்.
-
இந்திய அணியையும் வங்கதேசம் வீழ்த்தலாம் : சுனில் கவாஸ்கர் எச்சரிக்கை
17 Sep 2024மும்பை : இந்தியாவுக்கு வந்துள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
-
பிரதமர் நரேந்திர மோடிக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்து
17 Sep 2024ரோம், பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
-
பெண் மருத்துவர் கொலை: பதவி விலகக்கோரிய மம்தாவுக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
17 Sep 2024கொல்கத்தா : மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலகக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட், முதல்வரை பதவி விலகுமாறு உத்தரவிட
-
இந்திய கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 3 பேர் கைது
17 Sep 2024ராமநாதபுரம், இந்திய கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்ததாக 3 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
-
வங்கதேசத்திற்கு எதிரான தொடர்: ரிஷப் பண்ட்-சுப்மன் கில்லுக்கு ஓய்வு
17 Sep 2024மும்பை : இந்தியா - வங்காளதேசம் இடையிலான டி20 தொடர் வரும் அக்டோபர் 6-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 2 முக்கிய இந்திய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்
-
கோடை காலத்தில் வழக்கறிஞர்கள் கோட் அணிய விலக்கு கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
17 Sep 2024புதுடெல்லி : கோடை காலத்தில் வழக்கறிஞர்கள் கோட் அணிய விலக்கு அளிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: பரிசுத்தொகை அறிவிப்பு
17 Sep 2024புதுடெல்லி : மகளிர் டி20 உலகக்கோப்பைக்கான பரிசுத் தொகையை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
இரு பிரிவுகளாக...
-
3 நாள் பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார்
17 Sep 2024புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் 21-ஆம் தேதி அமெரிக்காவுக்கு செல்கிறார். செப்.
-
காம்பீரிடம் நல்ல புரிதல் உள்ளது : கேப்டன் ரோகித் சர்மா தகவல்
17 Sep 2024சென்னை : டிராவிட்டுடன் ஒப்பிடும்போது காம்பீர் தலைமையிலான பயிற்சியாளர்கள் வித்தியாசமான பாணியை கொண்டுள்ளனர் என்று தெரிவித்துள்ள இந்திய அணி கேப்டன் கேப்டன் ரோகித் சர்மா, அ
-
ஏரியில் மூழ்கி 4 குழந்தைகள் பலி
17 Sep 2024ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஏரியில் மூழ்கி 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
-
இன்னும் 6 விக்கெட்டுகள்: புதிய சாதனை படைக்க ஜடேஜாவுக்கு வாய்ப்பு
17 Sep 2024சென்னை : ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 294 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ள நிலையில் இன்னும் 6 விக்கெட்கள் எடுத்தால் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை ப
-
நாட்டின் எந்த பகுதிகளிலும் நீதிமன்றத்தின் அனுமதியின்றி கட்டிடங்களை இடிக்கக்கூடாது : புல்டோசர் நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட் தடை
17 Sep 2024புதுடெல்லி : நீதிமன்றத்தின் அனுமதியின்றி நாட்டின் எந்த பகுதிகளிலும் கட்டிடங்களை இடிக்கக் கூடாது என்று புல்டோசர் நடவடிக்கைகளுக்கு தடை விதித்து சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டு
-
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: சீனாவை வீழ்த்தி இந்தியா 5-வது முறையாக சாம்பியன்
17 Sep 2024ஹூலுன்புயர் : ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் 1-0 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது.
-
தங்கம் விலை சற்று குறைவு
17 Sep 2024சென்னை, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.120 குறைந்து விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-09-2024.
18 Sep 2024 -
லெபனானில் ஒரே சமயத்தில் வெடித்த பேஜர் கருவிகள்: 8 பேர் பலி, 2,750 பேர் படுகாயம்
18 Sep 2024பெய்ரூட், லெபனானில் நேற்று ஹிஸ்புல்லா அமைப்பினர் மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள் தகவல் தொடர்புக்காக பயன்படுத்தி வரும் பேஜர் கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதற
-
பிரேசிலில் டி.வி. நேரடி விவாதத்தில் நாற்காலியால் தாக்கிய மேயர் வேட்பாளர்
18 Sep 2024பிரேசில்லா, பிரேசிலில் மேயர் பதவிக்கான விவாதம் தொலைக்காட்சியில் நேரலை நடைபெற்று கொண்டிருந்த போது வேட்பாளர்களில் ஒருவர் போட்டியாளரை உலோகத்தால் செய்யப்ப்டட நாற்காலியை கொண