எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : ஆதிக்க மொழித் திணிப்பைத் தடுத்து, அன்னைத் தமிழைக் காப்பேன் என முதல்வர் ஸ்டாலின் தனது பிறந்தநாளை ஒட்டி திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாடு காட்டுகின்ற பாதையே ஒவ்வொரு மாநிலமும் தன் தாய்மொழியைக் காப்பதற்கான பாதை. ஆதிக்க மொழிகளை அடையாளம் கண்டு, அவற்றின் வலையில் வீழாமல் தடுத்துப் பயணிக்கும் பாதை என்பதை பஞ்சாப், தெலங்கானா மாநில அரசுகளின் அறிவிப்பு உறுதி செய்திருக்கிறது.
ஒரு மாநிலத்தில் பல வகையான பாடத் திட்டங்களைப் பின்பற்றக்கூடிய பள்ளிகள் உண்டு. எந்த வகைப் பாடத்திட்டத்தைப் பின்பற்றக்கூடிய பள்ளிகளாக இருந்தாலும் அந்தந்த மாநிலங்களின் தாய்மொழி என்பது முக்கியமானது. அதனை இன்று பஞ்சாப்பும், தெலங்கானாவும் உணர்ந்து உத்தரவிட்டிருப்பதை, இருபது ஆண்டுகளுக்கு முன்பே தொலைநோக்குப் பார்வையுடன், தமிழ்நாட்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் ஒரு மொழிப் பாடமாகக் கற்றுத் தரப்பட வேண்டும் என சட்டமாக நிறைவேற்றியவர் கருணாநிதி.
1967ல் பேரறிஞர் அண்ணா தலைமையில் அமைந்த திமுக அரசு, இருமொழிக் கொள்கையை நிறைவேற்றிட முன்வந்தது. 1968 ஜனவரி 23ஆம் நாள் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தை முதல்வர் அண்ணா கூட்டினார். “தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும் மும்மொழித் திட்டத்தை அகற்றிவிட்டு, தமிழ்–ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கு இடமளித்து, இந்தியை அறவே நீக்கிவிட இப்பேரவை தீர்மானிக்கிறது” என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க இருமொழிக் கொள்கை தீர்மானத்தை நிறைவேற்றினார். இந்திய ஒன்றியத்தில் ஒரு மாநிலத்திற்குரிய சட்டவழியிலான உரிமையை மிகச் சரியாகக் கையாண்டு இருமொழிக் கொள்கையைச் சட்டமாக்கிய பேரறிஞர் அண்ணா, “என்னால் ஆனதை நான் செய்துவிட்டேன்.
இனி டெல்லி தன்னால் ஆனதை செய்து கொள்ளட்டும் என்று அறைகூவல் விடுத்தார். மத்திய பா.ஜ.க. அரசு எப்படியாவது தமிழை அழித்து, இந்தி–சமஸ்கிருதத்தைத் திணிக்கலாம் என முயற்சிக்கிறது. அண்ணாவின் இருமொழிக் கொள்கை ஆயுதமாகவும் கேடயமாகவும் தமிழைக் காத்து நிற்கிறது. எப்போதெல்லாம் இந்தி மொழி ஆதிக்கம் செலுத்தும் எண்ணத்துடன் எல்லைப்புறமாகவோ, கொல்லைப்புறம் வழியாகவோ நுழைய முயல்கிறதோ, அப்போதெல்லாம் திராவிட முன்னேற்றக் கழகம் விழிப்புணர்வுடன் இருந்து தமிழ்நாட்டைப் பாதுகாத்து வருகிறது.
மொழிக்காக, நம்முடைய இனத்திற்காகப் போராடுகிறோம். போராடுகிற இந்த நேரத்தில், நம்முடைய உயிரை இழக்கின்ற தியாகத்தைச் செய்வதற்குக்கூட காத்திருக்கிறோம். என்னுடைய தந்தைக்கு நான்கு ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள். எனவே அந்த நான்கு ஆண் பிள்ளைகளில் ஒரு ஆண் பிள்ளை போய்விடுவதால் என்னுடைய தந்தை நிச்சயம் கவலைப்பட மாட்டார். அதுவும் மொழிக்காக, ஒரு இனத்திற்காக, தனயனை இழந்த தந்தை என்று என்னுடைய தந்தைக்கு பாராட்டு கிடைக்கும்.
அத்தகைய பாராட்டை, பெருமையை வாங்கித் தந்த மகிழ்ச்சியும் என்னைச் சேருமல்லவா? எனவேதான் நான் சொல்கிறேன். எத்தகைய தியாகத்தைச் செய்வதற்கும் தயார்.. தயார்..” – என்று நான் முழங்கினேன். பெரியார் மூட்டிய தீயை, அண்ணா திக்கெட்டும் பரவச் செய்தார். தண்டவாளத்தில் தலை வைத்து தமிழைக் காத்தார் கருணாநிதி. அவர்களின் வழியில்தான் நம் கழகம் என்றும் பயணிக்கும்.
உங்களில் ஒருவனான எனக்கு உடன்பிறப்புகள் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து, மகிழ்ச்சியைப் பகிர்ந்து, என்னையும் மகிழ வைத்திருக்கிறீர்கள். உங்கள் அன்பான வாழ்த்துகள் என்னை மேலும் உறுதியுடன் உழைப்பதற்கும் இனம்–மொழி காக்கும் போராட்டத்தை முன்னெடுப்பதற்கும் ஊக்கமாக அமைந்துள்ளது. ஆதிக்க மொழித் திணிப்பைத் தடுத்து, அன்னைத் தமிழைக் காப்பேன் என இந்தப் பிறந்தநாளில் சூளுரைக்கிறேன். இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-03-2025.
01 Mar 2025 -
ரமலான் நோன்பு இன்று தொடக்கம்
01 Mar 2025சென்னை, ஆண்டுதோறும் ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து நோன்பு கடைப்பிடிக்கப்படும்.
-
அரியலூர் ரெயில் நிலையத்தில் பயணியிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 77 லட்சம்: போலீசார் விசாரணை
01 Mar 2025அரியலூர் : அரியலூர் ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து ரூ.77 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இது ஹவாலா பணமா என விசாரணை நடைபெற்று வருகிறது.
-
14-வது குழந்தைக்கு தந்தையான எலான் மஸ்க்
01 Mar 2025அமெரிக்கா, உலக பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். இவர் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் அரசாங்க திறன் துறை தலைவராக உள்ளார்.
-
இந்தாண்டு இறுதிக்குள் போரூர்-பூந்தமல்லி மெட்ரோ ரெயில் சேவை தொடக்கம்
01 Mar 2025சென்னை : போரூர் - பூந்தமல்லி இடையேயான மெட்ரோ ரயில் வழித்தடத்தில் 2025-க்குள் பயணிகள் சேவை தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்த
-
பிரதமர் மோடியுடன் இலங்கை முன்னாள் அதிபர் சந்திப்பு
01 Mar 2025புதுடில்லி : இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை தலைநகர் டில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற என்எக்ஸ்டி மாநாட்டில் பிரதமர் மோடி சந்தித்தார்.
-
ஆதிக்க மொழித் திணிப்பைத் தடுத்து அன்னை தமிழ் மொழியை காப்பேன் : பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
01 Mar 2025சென்னை : ஆதிக்க மொழித் திணிப்பைத் தடுத்து, அன்னைத் தமிழைக் காப்பேன் என முதல்வர் ஸ்டாலின் தனது பிறந்தநாளை ஒட்டி திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளா
-
தென் ஆப்பிரிக்காவில் 3 பேருக்கு புதிதாக குரங்கு அம்மை பாதிப்பு
01 Mar 2025தென் ஆப்பிரிக்கா : தென் ஆப்பிரிக்கா நாட்டில் மூன்று புதிய குரங்கு அம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
-
அமலுக்கு வருகிறது புதிய வரி விதிப்பு: உலகப் பொருளாதாரம் பாதிக்க வாய்ப்பு?
01 Mar 2025வாஷிங்டன் : அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு மார்ச் 4 முதல் அமலுக்கு வருவதால் உலகப் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
3-ம் உலகப்போரை நடத்த சூதாடுகிறீர்கள்: ஜெலன்ஸ்கி மீது டிரம்ப் குற்றச்சாட்டு
01 Mar 2025வாஷிங்டன் : வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பின் போது லட்சக் கணக்கான மனித உயிர்களை வைத்து 3-ம் உலகப் போரை நடத்த ஜெலன்ஸ்கி சூதாடுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம
-
பக்ரீத் பண்டிகையின்போது ஆடுகள் பலியிடப்படுவதை தவிர்க்க மொராக்கோ அரசர் வேண்டுகோள்
01 Mar 2025மொராக்கோ, பக்ரீத் பண்டிகையின்போது ஆடுகள் பலியிடப்படுவதை மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என மொராக்கோ அரசர் வலியுறுத்தியுள்ளார்.
-
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் கூடுதல் நேர சலுகை : வழிகாட்டுதல்களை வெளியிட்டது தேர்வுத்துறை
01 Mar 2025சென்னை : எதிர்பாராத விபத்தால் பாதிக்கப்படும் மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பொதுத் தேர்வில் கூடுதல் நேர சலுகைகள் வழங்க வேண்டுமென தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
-
நடிகை விஜயலட்சுமி வழக்கில் அடுத்த வாரம் அறிக்கை தாக்கல்
01 Mar 2025சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் வளசரவாக்கம் போலீசார்
-
இமாசல பிரதேசத்தில் தனியார் விடுதி தீ விபத்தில் 2 பேர் பலி
01 Mar 2025இமாசல, இமாசல பிரதேசத்தின் தனியார் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் பலியாகியுள்ளார்.
-
பாக்., மசூதியில் குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு
01 Mar 2025பாகிஸ்தானில், பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியின் முகத்துக்கு நேராக உண்மையை போட்டுடைத்த டிரம்ப் : ரஷிய பாதுகாப்பு அதிகாரி விமர்சனம்
01 Mar 2025மாஸ்கோ : முதன் முதலில் ஜெலன்ஸ்கியின் முகத்துக்கு நேராக டிரம்ப் உண்மையை போட்டுடைத்து விட்டார்.
-
டில்லி தமிழ்நாடு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
01 Mar 2025புதுடில்லி : டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
-
அசாமில் ரூ.2.2 கோடி மதிப்பிலான போதை பொருளை கடத்தியவர்கள் கைது
01 Mar 2025அசாம், வடகிழக்கு மாநிலமான அசாமில் ரூ.2.2 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 2 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்ம
-
குற்றால அருவிகளில் குளிக்கத் தடை
01 Mar 2025தென்காசி : தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பயணிகள் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை: நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி
01 Mar 2025சென்னை : தொடர்ந்து 4-வது நாளாக தங்கத்தின் விலை வீழ்ச்சி அடைந்து வருவதால் நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்: ராஜ்நாத் சிங், விஜய், ரஜினி வாழ்த்து
01 Mar 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், நடிகர் ரஜினிகாந்த், த.வெ.க. தலைவர் விஜய் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளனர்.
-
உத்தராகண்ட் மாநிலத்தில் பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்
01 Mar 2025டேராடூன் : உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள மனா கிராமத்தில் நேற்று ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய தொழிலாளர்களில் மேலும் 14 பேர் நேற்று மீட்கப்பட்டுள்ளனர்.
-
கோதுமை கொள்முதல்: 31 மி.டன் இலக்கு நிர்ணயம்
01 Mar 2025புதுடெல்லி, 2025-26 ஏப்ரல் முதல் தொடங்கும் ரபி பருவத்தில் 31 மில்லியன் டன் கோதுமை கொள்முதல் செய்து சந்தைப்படுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
-
72-வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை : இந்தி திணிப்பை எதிர்ப்போம் என உறுதிமொழி
01 Mar 2025சென்னை : 72-வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று பேரறிஞர் அண்ணா, கலைஞர், பெரியார் நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
-
போப் பிரான்சிஸ்-க்கு இருமல், மூச்சுத்திணறல்: வாடிகன் தகவல்
01 Mar 2025ரோம் : போப் பிரான்சிஸ், இருமல், வாந்தி, மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டுள்ளதாக வாடிகன் தெரிவித்துள்ளது.