எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : ஆதிக்க மொழித் திணிப்பைத் தடுத்து, அன்னைத் தமிழைக் காப்பேன் என முதல்வர் ஸ்டாலின் தனது பிறந்தநாளை ஒட்டி திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாடு காட்டுகின்ற பாதையே ஒவ்வொரு மாநிலமும் தன் தாய்மொழியைக் காப்பதற்கான பாதை. ஆதிக்க மொழிகளை அடையாளம் கண்டு, அவற்றின் வலையில் வீழாமல் தடுத்துப் பயணிக்கும் பாதை என்பதை பஞ்சாப், தெலங்கானா மாநில அரசுகளின் அறிவிப்பு உறுதி செய்திருக்கிறது.
ஒரு மாநிலத்தில் பல வகையான பாடத் திட்டங்களைப் பின்பற்றக்கூடிய பள்ளிகள் உண்டு. எந்த வகைப் பாடத்திட்டத்தைப் பின்பற்றக்கூடிய பள்ளிகளாக இருந்தாலும் அந்தந்த மாநிலங்களின் தாய்மொழி என்பது முக்கியமானது. அதனை இன்று பஞ்சாப்பும், தெலங்கானாவும் உணர்ந்து உத்தரவிட்டிருப்பதை, இருபது ஆண்டுகளுக்கு முன்பே தொலைநோக்குப் பார்வையுடன், தமிழ்நாட்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் ஒரு மொழிப் பாடமாகக் கற்றுத் தரப்பட வேண்டும் என சட்டமாக நிறைவேற்றியவர் கருணாநிதி.
1967ல் பேரறிஞர் அண்ணா தலைமையில் அமைந்த திமுக அரசு, இருமொழிக் கொள்கையை நிறைவேற்றிட முன்வந்தது. 1968 ஜனவரி 23ஆம் நாள் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தை முதல்வர் அண்ணா கூட்டினார். “தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும் மும்மொழித் திட்டத்தை அகற்றிவிட்டு, தமிழ்–ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கு இடமளித்து, இந்தியை அறவே நீக்கிவிட இப்பேரவை தீர்மானிக்கிறது” என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க இருமொழிக் கொள்கை தீர்மானத்தை நிறைவேற்றினார். இந்திய ஒன்றியத்தில் ஒரு மாநிலத்திற்குரிய சட்டவழியிலான உரிமையை மிகச் சரியாகக் கையாண்டு இருமொழிக் கொள்கையைச் சட்டமாக்கிய பேரறிஞர் அண்ணா, “என்னால் ஆனதை நான் செய்துவிட்டேன்.
இனி டெல்லி தன்னால் ஆனதை செய்து கொள்ளட்டும் என்று அறைகூவல் விடுத்தார். மத்திய பா.ஜ.க. அரசு எப்படியாவது தமிழை அழித்து, இந்தி–சமஸ்கிருதத்தைத் திணிக்கலாம் என முயற்சிக்கிறது. அண்ணாவின் இருமொழிக் கொள்கை ஆயுதமாகவும் கேடயமாகவும் தமிழைக் காத்து நிற்கிறது. எப்போதெல்லாம் இந்தி மொழி ஆதிக்கம் செலுத்தும் எண்ணத்துடன் எல்லைப்புறமாகவோ, கொல்லைப்புறம் வழியாகவோ நுழைய முயல்கிறதோ, அப்போதெல்லாம் திராவிட முன்னேற்றக் கழகம் விழிப்புணர்வுடன் இருந்து தமிழ்நாட்டைப் பாதுகாத்து வருகிறது.
மொழிக்காக, நம்முடைய இனத்திற்காகப் போராடுகிறோம். போராடுகிற இந்த நேரத்தில், நம்முடைய உயிரை இழக்கின்ற தியாகத்தைச் செய்வதற்குக்கூட காத்திருக்கிறோம். என்னுடைய தந்தைக்கு நான்கு ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள். எனவே அந்த நான்கு ஆண் பிள்ளைகளில் ஒரு ஆண் பிள்ளை போய்விடுவதால் என்னுடைய தந்தை நிச்சயம் கவலைப்பட மாட்டார். அதுவும் மொழிக்காக, ஒரு இனத்திற்காக, தனயனை இழந்த தந்தை என்று என்னுடைய தந்தைக்கு பாராட்டு கிடைக்கும்.
அத்தகைய பாராட்டை, பெருமையை வாங்கித் தந்த மகிழ்ச்சியும் என்னைச் சேருமல்லவா? எனவேதான் நான் சொல்கிறேன். எத்தகைய தியாகத்தைச் செய்வதற்கும் தயார்.. தயார்..” – என்று நான் முழங்கினேன். பெரியார் மூட்டிய தீயை, அண்ணா திக்கெட்டும் பரவச் செய்தார். தண்டவாளத்தில் தலை வைத்து தமிழைக் காத்தார் கருணாநிதி. அவர்களின் வழியில்தான் நம் கழகம் என்றும் பயணிக்கும்.
உங்களில் ஒருவனான எனக்கு உடன்பிறப்புகள் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து, மகிழ்ச்சியைப் பகிர்ந்து, என்னையும் மகிழ வைத்திருக்கிறீர்கள். உங்கள் அன்பான வாழ்த்துகள் என்னை மேலும் உறுதியுடன் உழைப்பதற்கும் இனம்–மொழி காக்கும் போராட்டத்தை முன்னெடுப்பதற்கும் ஊக்கமாக அமைந்துள்ளது. ஆதிக்க மொழித் திணிப்பைத் தடுத்து, அன்னைத் தமிழைக் காப்பேன் என இந்தப் பிறந்தநாளில் சூளுரைக்கிறேன். இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 2 days ago |
-
சென்னை வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் சாலை மறியல்
28 Feb 2025சென்னை : சென்னை வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
-
மார்ச் மாதத்தில் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை
28 Feb 2025மும்பை : மார்ச் மாதத்தில் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை விடப்பட உள்ளது.
-
டெல்லியில் சட்டவிரோத குடியேறியவர்களை வெளியேற்ற போலீசாருக்கு அமித்ஷா உத்தரவு
28 Feb 2025புதுடில்லி : டில்லியில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும், என டில்லி அரசு, போலீசாருக்கு மத்திய உள்துறை அமைச
-
முதல்வர் பிறந்த நாள் பொதுக்கூட்டம்; கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு
28 Feb 2025சென்னை : தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் 72-வது பிறந்த நாளையொட்டி நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் கூட்டணி தலைவர்கள் வாழ்த்துரை வழங்கி வகினர்.
-
இந்தியாவில் முதல்முறையாக ரியல் மாட்ரிட் - பார்சிலோனா கால்பந்து போட்டி
28 Feb 2025நவி மும்பை : எல் கிளாசிக்கோ எனப்படும் ரியல் மாட்ரிட் - பார்சிலோனா போட்டி முதல்முறையாக இந்தியாவில் நடைபெறவிருக்கிறது.
-
ஒரே மைதான சர்ச்சைக்கு வாசிம் ஜாபர் கூறும் தீர்வு
28 Feb 2025மும்பை : ஒரே மைதானத்தில் விளையாடுவதாக இந்திய அணி மீதான விமர்சனங்களை தவிர்க்க முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தீர்வு ஒன்றை தெரிவித்துள்ளார்.
-
சுப்மன் கில்லுக்கு தவான் பாராட்டு
28 Feb 2025ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சுப்மன் கில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார்.
-
தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை: சீமான் தாக்கு
28 Feb 2025சேலம் : தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை. சாத்தானின் ஆட்சி நடக்கிறது,'' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
-
அஜித்தின் "குட் பேட் அக்லி" டீசர் வெளியானது
28 Feb 2025சென்னை : அஜித்தின் "குட் பேட் அக்லி" படத்தின் டீசர் நேற்று வெளியானது
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-03-2025.
01 Mar 2025 -
டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்கள்: இந்த மைல்கல்லை எட்ட இம்ரான்கான் தான் காரணம்: கவாஸ்கர் மனம் திறப்பு
28 Feb 2025மும்பை : டெஸ்ட் கிரிக்கெட் உலகில் முதன்முதலாக 10,000 ரன்களை எட்டிய லெஜண்ட் சுனில் கவாஸ்கர்.
-
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சிறுமியை குற்றம் சாட்டி பேச்சு : கலெக்டருக்கு வலுக்கும் எதிர்ப்புகள்
28 Feb 2025மயிலாடுதுறை : பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமி மீது தவறு இருப்பதாக, மாவட்ட கலெக்டர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவரது பேச்சுக்கு எதிர்ப்புகள
-
ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் கேரள அணி 342ரன்னுக்கு ஆல் அவுட்
28 Feb 2025நாக்பூர் : ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் கேரள அணி முதல் இன்னிங்சில் 342ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
கேரள அணி 342ரன் ...
-
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸி.க்கு 274 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ஆப்கான் அணி
28 Feb 2025லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 273 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
-
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மற்றுமொரு சாதனைக்கு தயாராகும் விராட் கோலி
28 Feb 2025துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விராட் கோலி மேலும் ஒரு சாதனையை படைக்கவுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி...
-
முதல்வருடன் மு.க.அழகிரி நேரில் சந்திப்பு
28 Feb 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அவரது அண்ணன் மு.க. அழகிரி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
லாரியஸ் விருதுக்கான போட்டியில் இருந்து யானிக் சின்னர் விலகல்
28 Feb 2025லண்டன் : பிரபல டென்னிஸ் வீரர் யானிக் சின்னர் லாரியஸ் விருதுக்கான போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
லாரியஸ் விருது...
-
14-வது குழந்தைக்கு தந்தையான எலான் மஸ்க்
01 Mar 2025அமெரிக்கா, உலக பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். இவர் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் அரசாங்க திறன் துறை தலைவராக உள்ளார்.
-
பிரதமர் மோடியுடன் இலங்கை முன்னாள் அதிபர் சந்திப்பு
01 Mar 2025புதுடில்லி : இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை தலைநகர் டில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற என்எக்ஸ்டி மாநாட்டில் பிரதமர் மோடி சந்தித்தார்.
-
ரமலான் நோன்பு இன்று தொடக்கம்
01 Mar 2025சென்னை, ஆண்டுதோறும் ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து நோன்பு கடைப்பிடிக்கப்படும்.
-
ஆதிக்க மொழித் திணிப்பைத் தடுத்து அன்னை தமிழ் மொழியை காப்பேன் : பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
01 Mar 2025சென்னை : ஆதிக்க மொழித் திணிப்பைத் தடுத்து, அன்னைத் தமிழைக் காப்பேன் என முதல்வர் ஸ்டாலின் தனது பிறந்தநாளை ஒட்டி திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளா
-
அமலுக்கு வருகிறது புதிய வரி விதிப்பு: உலகப் பொருளாதாரம் பாதிக்க வாய்ப்பு?
01 Mar 2025வாஷிங்டன் : அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு மார்ச் 4 முதல் அமலுக்கு வருவதால் உலகப் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
தென் ஆப்பிரிக்காவில் 3 பேருக்கு புதிதாக குரங்கு அம்மை பாதிப்பு
01 Mar 2025தென் ஆப்பிரிக்கா : தென் ஆப்பிரிக்கா நாட்டில் மூன்று புதிய குரங்கு அம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
-
3-ம் உலகப்போரை நடத்த சூதாடுகிறீர்கள்: ஜெலன்ஸ்கி மீது டிரம்ப் குற்றச்சாட்டு
01 Mar 2025வாஷிங்டன் : வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பின் போது லட்சக் கணக்கான மனித உயிர்களை வைத்து 3-ம் உலகப் போரை நடத்த ஜெலன்ஸ்கி சூதாடுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம
-
பாக்., மசூதியில் குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு
01 Mar 2025பாகிஸ்தானில், பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.