எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு என்ற அமலாக்கத்துறை குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்
டாஸ்மாக் கடைப்பணியாளர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அனைத்தும் சரியான முறைகளின்படியே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
சென்னை அமலாக்க இயக்குநரகம் 06-03-2025 அன்று சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது. அதில் 13-03-2025 அன்று மாலை சோதனை தொடர்பாக வெளியிட்ட செய்தி குறிப்பில் பல்வேறு முதல் தகவல் அறிக்கைகள், பல்வேறு பிரிவுகளில் பதியப்பட்டதாக குறிப்பிட்டுள்ள நிலையில், எந்த முதல் தகவல் அறிக்கை எந்த ஆண்டில் பதிவு செய்யப்பட்டது என்ற விவரங்கள் குறிப்பிட்டு தெரிவிக்கப்படவில்லை.
கடைப்பணியாளர்களின் பணியிட மாறுதல் உத்தரவுகள், அவர்களின் குடும்ப சூழ்நிலை, மருத்துவ காரணங்கள், பணியில் தவறு செய்யும் பணியாளர்களை விடுவித்து அப்பணியிடங்களுக்கு மாற்றுப் பணியாளர்களை நியமித்தல், மனமொத்த மாறுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பணியிட மாறுதல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், மூடப்பட்ட கடைகளில் பணியாற்றிய 2,157 கடைப்பணியாளர்களுக்கு 2023-ம் ஆண்டு கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சரியான முறைகளின்படியே மேற்கொள்ளப்பட்டுள்ளன. போக்குவரத்து ஒப்பந்தப்புள்ளி பிப்ரவரி 2023-ல் கோரப்பட்டு, பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளில் குறைவான தொகை கோரிய ஒப்பந்ததாரர்களுக்கு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு தமிழ்நாடு முழுவதும் நடைமுறைபடுத்தப்பட்டது. விவரங்கள், வங்கி வரைவோலைகள் உள்ளிட்ட விண்ணப்பதாரர்களின் அனைத்து விவரங்களும் சரிபார்க்கப்பட்ட பின்பே ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டது.
இந்த ஒப்பந்தப்புள்ளிகள் மூலம் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் நிறுவனத்திற்கும் மற்றும் அரசிற்கும் வரவேண்டிய வருவாய் கணக்கிடப்பட்டு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் சில போக்குவரத்து ஒப்பந்தம் தொடர்பான வழக்குகள் மாண்பமை சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளன. எனவே இதில் முறைகேடுகள் எதுவுமில்லை. கடந்த காலங்களில் நடைபெற்ற மதுக்கூட ஒப்பந்தப்புள்ளி விண்ணப்பங்கள் அனைத்தும் ஒப்பந்தப்புள்ளி பெட்டியில் சமர்ப்பிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டது. ஒவ்வொரு மதுக்கூடத்திலும் குறுமத் தொகை முறையாக நிர்ணயிக்கப்பட்டு குறுமத் தொகைக்கு மேல் கூடுதலாக கேட்கப்படுபவர்களுக்கு மதுக்கூட உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறே, 2020-2021 ஆம் ஆண்டு நடைபெற்ற மதுக்கூட ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கைகள் நடைபெற்றன.
2023 டிசம்பர் மாதம் மாவட்ட மேலாளரால் மதுக்கூட ஒப்பந்தங்கள் இணையவழி மூலமாக வரவேற்கப்பட்டு, அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது), உதவி ஆணையர் (கலால்) மற்றும் மாவட்ட மேலாளர், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் ஆகியோர் அடங்கிய மாவட்ட கலெக்டரால் அமைக்கப்பட்ட கூராய்வுக் குழுவால் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு மாவட்ட கலெக்டர் மற்றும் விண்ணப்பதாரர்கள் முன்னிலையில் ஒப்பந்தங்கள் திறக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டன. இதுவரை இணையவழி மூலமாக மதுக்கூட ஒப்பந்த நடவடிக்கைகள் மூன்று கட்டங்களாக நடைபெற்றுள்ளன. சட்ட விதிகளுக்கு உட்பட்டே ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த முறை மூலம் டாஸ்மாக் நிறுவனத்தின் வருவாய் அதிகரித்துள்ளது.
டாஸ்மாக் ஒரு வணிக நிறுவனம். வணிகநோக்கில் மதுபான நிறுவனங்களிடமிருந்து உயரதிகாரிகளுக்குப் பல கோரிக்கைகள் வைக்கப்பட்டாலும், அக்கோரிக்கைகள் சட்ட, திட்ட விதிமுறைக்களுக்குட்பட்டே பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. டாஸ்மாக் நிறுவனத்தில் எவ்வித பாரபட்சமும் இன்றி உரிய வழிமுறையின் அடிப்படையில் ஒவ்வொரு மதுபான வகையின் மூன்று மாத விற்பனை அளவினை கணக்கிட்டும், அவற்றுடன் கடைசி மாத விற்பனை அளவினை கணக்கிட்டும், அதனடிப்படையிலான கொள்முதல் வெளிப்படையான இணையவழியில் உரிய வழிமுறையில் மட்டுமே வழங்கப்படுகிறது.
மதுபான உற்பத்தியாளர்கள் மற்றும் மதுபுட்டிகள் தயாரிப்பு நிறுவனங்களுக்கிடையே பணபரிமாற்றங்கள் நடைபெற்றதாக தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுகள் அந்த இரு நிறுவனங்களுக்கு இடையேயானது எனினும், இந்த பணப்பரிமாற்றங்களைப் பயன்படுத்தி தமிழ்நாடு மாநில வாணிபக் கழக நிறுவனத்திடம் இருந்து கூடுதல் கொள்முதலைப் பெற்றதாக தெரிவித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல. மேலும், இதில் ரூபாய் 1,000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை.
இவ்வாறு உள்நோக்கத்தோடு ஆதாரங்கள் ஏதுமின்றி முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுப்பதோடு, இதுதொடர்பான சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 2 weeks ago |
-
ஓ.பன்னீர்செல்வம் கேள்வியால் குலுங்கி சிரித்த எடப்பாடி பழனிசாமி
17 Mar 2025சென்னை : மாந்திரீக பூஜை குறித்து ஓ.பன்னீர்செல்வம் குறுக்கிட்டு கேள்வி எழுப்பியபோது எடப்பாடி பழனிசாமி குலுங்கி சிரித்தார்.
-
நாய் கடித்தவுடன் ரேபிஸ் தடுப்பூசி போடுவது அவசியம்: சுகாதாரத்துறை
17 Mar 2025சென்னை : நாய் கடித்தவுடன் ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
-
எதிர்க்கட்சியினரை ஏன் பேச அனுமதித்தீர்கள் என முதல்வர் கேட்டதில்லை: சபாநாயகர்
17 Mar 2025சென்னை : எதிர்க்கட்சியினரை ஏன் இவ்வளவு நேரம் பேச அனுமதித்தீர்கள் என முதல்வர் இதுவரை என்னிடம் கேட்டதில்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
-
சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் இன்று மாலை பூமிக்கு திரும்புகிறார்
17 Mar 2025வாஷிங்டன் : 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை பூமி திரும்பவுள்ளார்.
-
தி.மு.க. - அ.தி.மு.க. இடையே காரசார விவாதம்: மடிக்கணினி விவகாரத்தில் இ.பி.எஸ். கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்
17 Mar 2025சென்னை : மடிக்கணினி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் தி.மு.க. - அ.தி.மு.க. உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இ.பி.எஸ்.
-
தி.மு.க. - பா.ஜ.க. இடையே மறைமுக கூட்டணி: த.வெ.க. பகீர் குற்றச்சாட்டு
17 Mar 2025சென்னை : தி.மு.க. , பா.ஜ.க. இடையே மறைமுக கூட்டணி உள்ளதாக த.வெ.க. குற்றஞ்சாட்டியுள்ளது.
-
உக்ரைனிய ஆயுத படைகளுக்கு புதிய தலைவரை நியமனம் செய்தார் அதிபர் ஜெலன்ஸ்கி
17 Mar 2025கீவ் : உக்ரைனிய ஆயுத படைகளின் புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
சந்திரயான்-5 திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்: ஜப்பானுடன் இணைந்து செயல்படுத்த முடிவு
17 Mar 2025புதுடில்லி : சந்திரனின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்கான சந்திரயான்-5 திட்டத்திற்கு மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளதாக இஸ்ரோ தலைவர் வி.
-
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான அ.தி.மு.க.வின் நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டசபையில் தோல்வி : தீர்மானத்துக்கு 63 பேர் ஆதரவு - 154 பேர் எதிர்ப்பு
17 Mar 2025சென்னை : தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு மீது அ.தி.மு.க. கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மற்றும் டிவிஷன் முறையில் தோல்வி அடைந்தது.
-
பாலாற்றின் குறுக்கே ரூ.70 கோடியில் தடுப்பணை: அமைச்சர் துரைமுருகன்
17 Mar 2025சென்னை : வெண்கோடி அருகே பாலாற்றின் குறுக்கே ரூ.70 கோடியில் தடுப்பணை அமைக்க திட்டம் உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
-
சுப்ரீம் கோர்ட் புதிய நீதிபதியாக பதவியேற்ற ஜாய்மல்யா பாக்சி : நீதிபதிகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்வு
17 Mar 2025புதுடெல்லி : கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் மூத்த நிதிபதியான ஜாய்மல்யா பாக்சி, சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
-
ஐ.பி.எல்.அணி கேப்டன்கள் கூட்டம்: பி.சி.சி.ஐ. ஏற்பாடு
17 Mar 2025மும்பை : ஐ.பி.எல். தொடரில் பங்கேற்க உள்ள அனைத்து அணிகளின் கேப்டன்களுடன் கூட்டம் நடத்த பி.சி.சி.ஐ. ஏற்பாடு செய்துள்ளது.
-
மும்பை வீரருக்கு நோட்டீஸ்
17 Mar 202518-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 22-ம் தேதி தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த கிரிக்கெட் தொடர் மே மாதம் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது.
-
பிரதமர் மோடி - நியூசி. பிரதமர் சந்திப்பு
17 Mar 2025டெல்லி : பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது இருநாட்டு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து கிறிஸ்டோபர் லக்சன் ஆலோசனை நடத்தினார்.
-
லக்னோ அணியில் ஷர்துல் தாகூர்?
17 Mar 2025லக்னோ, மார்ச் 18-
-
எங்களை யாராலும் பிரிக்க முடியாது: செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு இ.பி.எஸ். பதில்
17 Mar 2025சென்னை : நாங்கள் ஒற்றுமையாக தான் இருக்கிறோம்.
-
உள்கட்சி பிரச்னைகளை திசைதிருப்ப சபாநாயகர் மீது அ.தி.மு.க. தீர்மானம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
17 Mar 2025சென்னை : உள்கட்சிப் பிரச்னைகளைத் திசைதிருப்பவே பேரவைத் தலைவர் மீது அ.தி.மு.க. தீர்மானம் கொண்டுவந்துள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
புதிய கல்விக் கொள்கை அமலுக்கு எதிர்ப்பு: புதுச்சேரி சட்டசபையில் இருந்து தி.மு.க., காங்கிரஸ் வெளிநடப்பு
17 Mar 2025புதுச்சேரி : புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை அமலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க. , காங்கிரஸ் எம்.எல்.ஏ.
-
டாஸ்மாக் முற்றுகை போராட்டம்: அண்ணாமலை, பா.ஜ.க. தலைவர்கள் கைது
17 Mar 2025சென்னை : டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார்.
-
அமைச்சர்கள் பெரியகருப்பன், சிவசங்கர் மீதான வழக்குகளை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்
17 Mar 2025சென்னை : அமைச்சர்கள் பெரியகருப்பன், சிவசங்கர் மீதான வழக்குகள் ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
-
செங்கோட்டையனுக்கு பிடித்தது போல பதில் சொல்வேன்: எ.வ.வேலு கலகல!
17 Mar 2025சென்னை : மானிய கோரிக்கையில் செங்கோட்டையனுக்கு பிடித்ததுபோல பதில் சொல்வேன் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
-
அமிர்தசரஸ் கோயில் மீது கையெறி குண்டு வீச்சு: சந்தேக நபர் சுட்டுக்கொலை
17 Mar 2025அமிர்தசரஸ் : போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அமிர்தசரஸ் கோயில் குண்டுவெடிப்பு சந்தேக நபர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
-
கனிவானவர் - கண்டிப்பானவர்:நடுநிலையோடு செயல்படுபவர் பேரவைத் தலைவர் அப்பாவு : சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
17 Mar 2025சென்னை : நடுநிலையோடு செயல்படுபவர் பேரவைத் தலைவர் அப்பாவு என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
நம்பிக்கையில்லா தீர்மானம்: பேரவையிலிருந்து வெளியேறினார் அப்பாவு
17 Mar 2025சென்னை : அ.தி.மு.க. தீர்மானத்தைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவைத் தலைவா் அப்பாவு அவையைவிட்டு வெளியேறினார்.
-
‘தமிழர் நிதி நிர்வாகம்: தொன்மையும் தொடர்ச்சியும்’ ஆவண நூலை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் : சிறப்பு இணைய தளத்தையும் தொடங்கி வைத்தார்
17 Mar 2025சென்னை : தமிழக அரசின் நிதித்துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ‘தமிழர் நிதி நிர்வாகம்: தொன்மையும் தொடர்ச்சியும்’ ஆவண நூலினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு, இதற்க