எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : நடப்பு ஐ.பி.எல். தொடரில் சொந்த மைதானத்தில் வெற்றி பெற முடியாமல் ஐ.பி.எல். அணிகள் திணறி வருகின்றன.
சொந்த மைதானம்...
ஐ.பி.எல். 2025 டி20 கிரிக்கெட் லீக் தொடர் கடந்த மாதம் 22ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதல் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ஒவ்வொரு அணிக்கும் சொந்த மைதானங்கள் உள்ளன. சி.எஸ்.கே. அணிக்கு சேப்பாக்கம், ஆர்.சி.பி. க்கு பெங்களூரு சின்னசாமி, கொல்கத்தாவுக்கு ஈடன் கார்டன், மும்பை இந்தியன்ஸ்க்கு வான்கடே சொந்த மைதானம் ஆகும். இதேபோல் மற்ற அணிகளுக்கும் சொந்த மைதானம் உள்ளது.
விரக்தி...
ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் விளையாட வேண்டும். இதில் ஏழு போட்டிகள் சொந்த மைதானத்திலும், ஏழு போட்டிகள் வேறு மைதானத்திலும் நடைபெறும். சொந்த மைதானங்கள் அந்தந்த அணிகளுக்கு சாதகமாக இருக்கும். ஆனால் இந்த சீசனில் சொந்த மைதானத்தில் அணிகள் வெற்றி பெற திணறி வருகின்றன. இந்த தடுமாற்றத்திற்கு தங்களுக்கு ஏற்றவகையில் ஆடுகளம் தயாரிக்கப்படவில்லை என கொல்கத்தா அணி கேப்டன் ரகானே, ஆர்.சி.பி. அணி பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக் வெளிப்படையாக தங்களது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ்...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது வரை சென்னை சேப்பாக்கத்தில் 4 போட்டிகளில் விளையாடியுள்ளது. மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான முதல் போட்டியில் மட்டும் 156 இலக்கை எட்டி வெற்றி பெற்றது. அதன்பின் ஆர்.சி.பி.க்கு எதிராக 50 ரன்னிலும், டெல்லிக்கு எதிராக 25 ரன்னிலும், நேற்று கொல்கத்தாவுக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்திலும் தோல்வியடைந்துள்ளது.
ஆர்.சி.பி....
ஆர்.சி.பி. அணி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளது. இரண்டிலும் தோல்வியடைந்துள்ளது. குஜராத் அணிக்கெதிராக 8 விக்கெட் வித்தியாசத்திலும், டெல்லிக்கு எதிராக 6 விக்கெட் வித்தியாசத்திலும் தோல்வியடைந்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்...
கொல்கத்தா அணி ஈடன் கார்டனில் 3 போட்டிகளில் விளையாடியுள்ளது. ஆர்.சி.பி.-க்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்திலும், லக்னோவிற்கு எதிராக 4 ரன்னிலும் தோல்வியடைந்துள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக 80 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குஜராத் டைட்டன்ஸ்...
குஜராத் டைட்டன்ஸ் தனது சொந்த மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் 3 போட்டிகளில் விளையாடி 2-ல் வெற்றி பெற்றுள்ளது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத்...
சன்ரைசர்ஸ் ஐதராபாத் ராஜஸ்தானுக்கு எதிராக 44 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்பின் லக்னோ, குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு எதிராக தோல்வியை சந்தித்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ்...
ராஜஸ்தான் ராயல்ஸ் ஜெய்ப்பூர் மற்றும் கவுகாத்தி ஆகிய இரண்டு மைதானங்களை சொந்த மைதானமாக கொண்டுள்ளது. கவுகாத்தியில் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளது. ஒன்றில் தோல்வியடைந்துள்ளது. ஒன்றில் வெற்றி பெற்றுள்ளது.
மும்பை இந்தியன்ஸ்...
மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் ஆர்.சி.பி.க்கு எதிராக தோல்வியடைந்தது. கொல்கத்தாவுக்கு எதிராக வெற்றி பெற்றது.
டெல்லி கேப்பிட்டல்ஸ்...
டெல்லி கேப்பிட்டல்ஸ் டெல்லி மற்றும் விசாகப்பட்டினம் ஆகியவற்றை சொந்த மைதானமாக கொண்டுள்ளது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் டெல்லி வெற்றி பெற்றுள்ளது.
பஞ்சாப் கிங்ஸ்...
சண்டிகார், தரம்சாலா ஆகிய இரண்டு மைதானங்களை சொந்த மைதானமாக கொண்டுள்ளது. ராஜஸ்தானுக்கு எதிராக 50 ரன்னில் தோல்வியடைந்துள்ளது. சி.எஸ்.கே.-வுக்கு எதிராக 18 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்...
பஞ்சாப் அணிக்கெதிராக 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 3 weeks ago |
-
பாக். கிரிக்கெட் வாரியம் மறுப்பு
21 Apr 2025செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 26 வரை இந்தியாவில் ஐ.சி.சி.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-04-2025
22 Apr 2025 -
அடுத்த சீசனுக்கு ஆடும் லெவனை தயார் செய்ய வேண்டும்: கேப்டன் தோனி
21 Apr 2025மும்பை : நடப்பு ஐ.பி.எல். சீசனில் 6-வது தோல்வியை பதிவு செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
-
சென்னையை பந்தாடிய 16 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டிய மும்பை
21 Apr 2025மும்பை : வான்கடேவில் மும்பை இந்தியன்ஸின் ஆதிக்கம் நீடித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயித்த 177 ரன்கள் இலக்கை 16 ஓவர்களில் எட்டி வெற்றியை ருசித்தது.
-
கோலி சாதனைகளை முறியடித்த ரோகித்
21 Apr 2025மும்பை : சி.எஸ்.கே.வுக்கு எதிரான போட்டியில் கோலி, தவான் சாதனைகளை ரோகித் சர்மா முறியடித்தார்.
-
சுரேஷ் ரெய்னா சி.எஸ்.கே கேப்டனாக இருந்திருக்க வேண்டும்: ஹர்பஜன் சிங்
21 Apr 2025மும்பை : சுரேஷ் ரெய்னா சி.எஸ்.கே. அணியின் கேப்டனாக இருந்திருக்க வேண்டும் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
மும்பை வெற்றி...
-
வீரர்களின் ஒப்பந்த விவரம் வெளியீடு: ஸ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன் சேர்ப்பு
21 Apr 2025மும்பை : இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வீரர்களின் ஆண்டு ஒப்பந்த விவரத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) வெளியிட்டுள்ளது.
-
சி.எஸ்.கே. மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புமா? அம்பத்தி ராயுடு பதில்
21 Apr 2025சென்னை : சி.எஸ்.கே. மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புமா? என்ற கேள்விக்கு அந்த அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு பதிலளித்துள்ளார்.
-
ரோகித்தின் பார்ம் பற்றி கவலைப்பட தேவையில்லை: பாண்ட்யா நிம்மதி
21 Apr 2025மும்பை : ரோகித் சர்மாவின் பார்ம் குறித்து கவலை கொள்ள அவசியமே இல்லை என மும்பை கேப்டன் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
-
பிளே-ஆப் சுற்றுக்கு செல்லுமா சி.எஸ்.கே.?
21 Apr 2025சென்னை : எஞ்சிய 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற இக்கட்டான நிலைக்கு சி.எஸ்.கே. தள்ளப்பட்டுள்ளது.
-
பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் : சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
22 Apr 2025சென்னை : அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டம் விவகாரத்தில் உரிய நேரத்தில், உரிய முடிவை அரசு எடுக்கும் என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ள
-
புதுச்சேரியில் பேருந்து நிலையத்தை திறக்க கோரி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
22 Apr 2025புதுச்சேரி : புதுச்சேரியில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை திறக்க வலியுறுத்தி அ.தி.மு.க. மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
-
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கின் முக்கிய குற்றவாளிகளுக்கு ஜாமீன் : சென்னை ஐகோர்ட் உத்தரவு
22 Apr 2025சென்னை : கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் முக்கிய குற்றவாளிகளான தாமோதரன், கன்னுக்குட்டி ஆகியோருக்கு சென்னை ஐகோர்ட் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
-
பென்னாகரம் புளிக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை: அமைச்சர் உறுதி
22 Apr 2025சென்னை : பென்னாகரம் புளிக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
-
நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக சம்பளம்: தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
22 Apr 2025சென்னை : தொகுப்பூதிய செவிலியர்களுக்கும் நிரந்தர செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
நிஷிகாந்த் துபே கருத்துக்கு எதிரான மனு: அடுத்த வாரம் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்
22 Apr 2025புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட் மற்றும் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவை விமர்சித்து பா.ஜ.க.
-
100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு துறைகளில் வேலைவாய்ப்பு : துணை முதல்வர் உதயநிதி தகவல்
22 Apr 2025சென்னை : விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் இந்த ஆண்டு 100 வீரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி தெரிவி
-
பேச அனுமதி கொடுக்கவில்லை என்பது ஜனநாயக படுகொலை : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
22 Apr 2025சென்னை : தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் பேச அனுமதி கொடுக்கவில்லை என்பது ஜனநாயக படுகொலை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார். 
-
சென்னையில் 25-ம் தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
22 Apr 2025சென்னை : சென்னையில் வரும் 25-ம் தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
-
ஜெய்ப்பூர் ஆம்பர் கோட்டையை பார்வையிட்ட ஜே.டி.வான்ஸ்
22 Apr 2025ஜெய்ப்பூர் : இந்தியா வந்துள்ள அமெரிக்கா துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ், நேற்று குடும்பத்துடன் ஜெய்ப்பூர் ஆம்பர் கோட்டையை பார்வையிட்டார்.
-
ஊட்டி துணைவேந்தர்கள் மாநாட்டில் குடியரசு துணைத்தலைவர் பங்கேற்பு : ஆளுநர் மாளிகை அறிவிப்பு
22 Apr 2025சென்னை : ஊட்டியில் வரும் ஏப்.25, 26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கலந்து கொண்டு மாநாட்டினைத் தொடங்கி
-
போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்வில் தமிழக அரசு சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்பு
22 Apr 2025சென்னை : கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில், தமிழக அரசின் சார்பில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துற
-
மோசடி வழக்கில் நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன்
22 Apr 2025ஹைதராபாத் : ரியல் எஸ்டேட் நிறுவன நிதி மோசடி தொடர்பான வழக்கில் வரும் 28-ம் தேதி ஹைதராபாத் அலுவலகத்தில் ஆஜராக வேண்டுமென தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுக்கு அமலாக்கத்துறை
-
பாராளுமன்றத்திற்கு மேலான அதிகாரம் கொண்டவர்கள் யாரும் இல்லை : துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பேச்சு
22 Apr 2025புதுடெல்லி : பாராளுமன்றம் தான் உயர் அதிகாரம் கொண்டது. அவர்களுக்கு மேலான அதிகாரம் கொண்டவர்கள் யாரும் இல்லை என்று ஜெகதீப் தன்கர் கூறியுள்ளார்.
-
காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி
22 Apr 2025ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.