எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 26 வரை இந்தியாவில் ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் மகளிர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி விளையாட இந்தியாவுக்கு பயணிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நக்வி அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணி உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்ற விதம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மன் நக்வி பாராட்டுதல்களைத் தெரிவித்தார். உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றுப் போட்டிகள் லாகூரில் நடைபெற்ற போது பாகிஸ்தான் மகளிர் அணி தகுதிச்சுற்றில் 5 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் மகளிர் அணி அயர்லாந்து, ஸ்காட்லாந்து, மே.இ.தீவுகள், தாய்லாந்து, வங்கதேச அணிகளை வென்று ஐ.சி.சி. உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது. இந்தியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகள் ஏற்கெனவே தகுதி பெற்று விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
______________________________________________________________________________________________________
ஆட்ட நாயகன் விருது? கோலி கேள்வி
ஐ.பி.எல். தொடரில் முல்லான்பூரில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் அடித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக விராட் கோலி 73 ரன்களும், படிக்கல் 61 ரன்களும் அடித்தனர். ஆட்ட நாயகன் விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஆட்ட நாயகன் விருது படிக்கலுக்கு செல்ல வேண்டும் என்று விராட் கோலி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- உண்மையிலேயே இந்த வெற்றியின் மூலம் கிடைத்துள்ள இரண்டு புள்ளிகள் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். இந்த போட்டியில் தேவ்தத் படிக்கல் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். எனவே என்னை பொறுத்தவரை இந்த ஆட்டநாயகன் விருது அவருக்கு தான் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதை ஏன் எனக்கு கொடுத்தார்கள்? என்று தெரியவில்லை. என்று விராட் கோலி கூறினார்.
______________________________________________________________________________________________________
லிவிங்ஸ்டன் குறித்து சேவாக்
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பல வெளிநாட்டு வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இருப்பினும் முன்னணி ஆல்ரவுண்டர்களான பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள கிளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா) மற்றும் பெங்களூரு அணியில் இடம்பெற்றுள்ள லியாம் லிவிங்ஸ்டன் (இங்கிலாந்து) ஆகியோர் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வருகின்றனர். .
இந்நிலையில் இது குறித்து பேசிய வீரேந்திர சேவாக் கூறுகையில், "மேக்ஸ்வெல் மற்றும் லிவிங்ஸ்டனிடம் வெற்றிக்கான பசி நீங்கிவிட்டது போல் உணர்கிறேன். அவர்கள் இங்கே (இந்தியா) விடுமுறையை கழிக்க வருகிறார்கள். அவர்கள் வருகிறார்கள், வேடிக்கை பார்க்கிறார்கள், வெளியேறுகிறார்கள். அணியின் வெற்றிக்காக போராடுவதற்கான விருப்பம் அவர்களிடம் தெரியவில்லை. தங்களுடைய அணிக்காக வெற்றியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர்கள் இந்தியாவுக்கு வரவில்லை" என்று கூறினார்.
______________________________________________________________________________________________________
சி.எஸ்.கே. அணி குறித்து ஸ்ரீகாந்த்
ஐ.பி.எல். தொடரில் மும்பையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் சென்னை அணி இதுவரை 8 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 6 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 5 முறை சாம்பியனான சென்னை இம்முறை பேட்டிங்கில் தடுமாறுவதே இந்த மோசமான செயல்பாடுகளுக்கு காரணம். பேட்ஸ்மேன்கள் ஒருவரு கூட அதிரடியாக ஆடி ரன்கள் குவிக்காதது சென்னை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, சி.எஸ்.கே அணிக்கு இந்த சீசன் கிட்டத்தட்ட முடிந்து போய் விட்டது. நன்றாக விளையாடினீர்கள் மும்பை இந்தியன்ஸ். ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் ஆகியோர் பந்தை மைதானத்தின் அனைத்து பகுதிகளிலும் பறக்க விட்டதைப் பார்த்தது விருந்தாக அமைந்தது. மீதமுள்ள ஆட்டங்களுக்காக சி.எஸ்.கே அணிக்கு என்னுடைய ஒரே ஆலோசனை என்னவெனில் எஞ்சியுள்ள போட்டிகளில் அவர்கள் தங்களைத் தாங்களே வெளிப்படுத்தி விளையாட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-04-2025
21 Apr 2025 -
10-ம் வகுப்பு வினாத்தாளில் குழப்பம்: மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவு
21 Apr 2025சென்னை, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாளில் குழப்பம் ஏற்பட்டதையடுத்து மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
-
இந்தியாவில் 30 கோடி மக்களை நிலநடுக்கம் தாக்கும் அபாயம் : அதிர்ச்சி தகவல் வெளியீடு
21 Apr 2025வாஷிங்டன் : உலகில் பெரிய நிலநடுக்கம் ஏற்படும் பகுதியாக இமயமலை உள்ளது.
-
பெல்ஜியம் கார் ரேஸில் 2-ம் இடம் பிடித்த அஜித் அணிக்கு பிரபலங்கள் வாழ்த்துகள்
21 Apr 2025சென்னை : பெல்ஜியம் நாட்டில் உள்ள புகழ்பெற்ற Spa Francorchamps சர்கியூட்டில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித்தின் அணி இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
21 Apr 2025சென்னை, கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் மறைவுக்கு வைகோ, செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
தக் லைஃப் இசை வெளியீடு
21 Apr 2025உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'தக் லைஃப்' திரைப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
-
சீர்திருத்தங்களை ஆதரித்தவர்: போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல்
21 Apr 2025வாடிகன், கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவர் போப் பிரான்சிஸின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
மீண்டும் புதிய உச்சம்: தங்கம் விலை ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்தை கடந்தது
21 Apr 2025சென்னை, தங்கம் விலை மற்றொரு புதிய உச்சமாக நேற்று (ஏப்.21) ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தைத் தொட்டு விற்பனையானது.
-
போப் பிரான்சிஸ் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
21 Apr 2025சென்னை : கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்து வந்தவர் போப் பிரான்சிஸ் (வயது 88).
-
கர்நாடக காவல்துறையின் முன்னாள் டி.ஜி.பி. கொலையில் தாயாரை சந்தேகிக்கும் மகன்..!
21 Apr 2025பெங்களூரு : கர்நாடக காவல்துறையின் முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ், பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை கொலை செய்யப்பட்டார்.
-
20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெளியான சச்சின்
21 Apr 2025விஜய் நடித்த சச்சின் படம் வெளியாகி 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ரீ ரிலிஸாகியுள்ளது.
-
சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜாமீனை ரத்து செய்யக்கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு
21 Apr 2025சென்னை : சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு சேலம் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல் துறை தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம்
-
போப் பிரான்சிஸ் மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்
21 Apr 2025சென்னை : கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்து வந்தவர் போப் பிரான்சிஸ் (வயது 88).
-
வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை: நிர்மலா சீதாராமன் அமெரிக்கா பயணம்
21 Apr 2025புதுடெல்லி : வர்த்தக ஒப்பந்தங்களுக்கான பேச்சுவார்த்தை முயற்சிகளை இந்தியா துரிதப்படுத்த உள்ளது.
-
ஏற்கனவே மேல குற்றம் சொல்றாங்க: மேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு வேற உத்தரவு போடணுமா? சுப்ரீம் கோர்ட்
21 Apr 2025டெல்லி : ஏற்கனவே மேல குற்றம் சொல்றாங்க, இதுல மேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு வேற உத்தரவு போடணுமா? என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
எங்களுடைய இழப்பில் ஆதாயம் தேட வேண்டாம் : உலக நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை
21 Apr 2025பெய்ஜிங் : எங்களுடைய இழப்பில் ஆதாயம் தேட வேண்டாம் என உலக நாடுகளை சீனா எச்சரித்துள்ளது.
-
டாஸ்மாக் சோதனையை எதிர்த்த வழக்கில் நாளை ஐகோர்ட் தீர்ப்பு
21 Apr 2025சென்னை : டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வரும் 23-ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்த
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக், சகோதரருக்கு ஜாமீன்
21 Apr 2025சென்னை : போதைப் பொருள் கடத்தலில், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கைது செய்யபட்ட ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீமுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்
-
யாருடன் வேண்டுமானாலும் நாங்கள் கூட்டணி வைப்போம் : எடப்பாடி பழனிசாமி பேட்டி
21 Apr 2025சென்னை : யாருடன் வேண்டுமானாலும் நாங்கள் கூட்டணி வைப்போம். என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி தெரிவித்துள்ளார்.
-
டென் அவர்ஸ் விமர்சனம்
21 Apr 2025கள்ளக்குறிச்சி அருகே இளம்பெண் ஒருவர் காணாமல் போகிறார். விசாரணையை தொடங்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிபி சத்யராஜ், அந்த பெண் கடத்தப்பட்டிருப்பதை கண்டுபிடிக்கிறார்.
-
தமிழில் பெயர் பலகை வைக்கா விட்டால் அபராதம் அதிகரிப்பு: அமைச்சர் சாமிநாதன்
21 Apr 2025சென்னை, தமிழில் பெயர்பலகை வைக்காத வணிக நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அபராதம் 50 ரூபாயிலிருந்து 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பதாக அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ள
-
மாநில சுயாட்சிக்கான போராட்டம் அனைத்து மாநிலங்களுக்குமானது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
21 Apr 2025சென்னை, கூட்டாட்சியியலின் சமநிலையை உறுதிசெய்வது ஒரு கோரிக்கை மட்டுமல்ல, அது அரசியலமைப்புச் சட்டம் விதிக்கும் கடமை.
-
நாங்கள் விமர்சனம்
21 Apr 2025விவகாரத்தில் தாய் தந்தை பிரிய அவர்களின் மூன்று மகன்கள் கண்டிப்பான தந்தையுடன் வளர்கிறார்கள்.
-
“45” திரைப்பட டீசர் வெளியீடு
21 Apr 2025SP Suraj Production சார்பில் சுமதி.உமா ரமேஷ் ரெட்டி மற்றும் எம் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், சிவராஜ்குமார், உபேந்திரா, இராஜ் பி ஷெட்டி இணைந்து நடிக்க, அர்ஜுன் ஜான்யா இயக்க
-
புதிய போப் எப்படி தேர்வு செய்யப்படுவார்?
21 Apr 2025வாடிகன் : புதிய போப் எப்படி தேர்வு செய்யப்படுவார்? விதிமுறைகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.