முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டத்தை கையில் எடுக்கும் காவல்துறை: வழக்கு ஒன்றில் ஐகோர்ட் கிளை கருத்து

வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2025      தமிழகம்
Mdu-High-Court 2023-04-06

Source: provided

மதுரை: காவல்துறையினர் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்வதாக சென்னை உயர் நீதி மன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது.

காவல்துறையினர் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்வதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை குற்றம்சாட்டி யிருக்கிறது. வழக்கு ஒன்றில், குற்றம்சாட்டப்பட்டுள்ள ரவுடி வெள்ளைக்காளியிடம் காவல்துறையினர் விடியோ கான்ஃபரன்சிங் மூலம் விசாரணை நடத்தக்கோரி அவரது சகோதரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றக் கிளை இந்த கருத்தைத் தெரிவித்துள்ளது. ரவுடி வெள்ளைக்காளி, என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்படும் அபாயம் இருப்பதாகவும் எனவே, காவல்துறையினர் அவரிடம் விடியோகான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்த உத்தரவிடவும் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், அண்மைக் காலமாக காவல்துறையினர் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்கின்றனர். அண்மையில் எத்தனை என்கவுண்டர்கள் நடந்துள்ளன? காவல்துறையினரின் பாதுகாப்புக்காக மட்டும்தான் துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை சுட்டுப்பிடியுங்கள். ஆனால், காலுக்குக் கீழே சுட்டுப்பிடியுங்கள் என்றும் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து