எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை.ஜூலை26 - முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி, பால் கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களுக்கு சீருடை செலவு ; தையற்கூலி உயர்த்தி வழங்கப்படும் என்று பால்வளத்துறைஅமைச்சர், வி.மூர்த்தி அறிவித்துள்ளார்.
சட்டசபையில் நேற்று பால்வளத்துறை மானியக்கோரிக்கையை அமைச்சர், வி.மூர்த்தி தாக்கல் செய்தார்.அப்போது அவர் அறிவித்ததாவது :
முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படிவிருதுநகர், நீலகிரி மற்றும் திருச்சி ஒன்றியங்களில், பாலிலிருந்து கொழுப்பு பிரித்தெடுக்கும் இயந்திரம், பால்பாக்கெட் தயாரிக்கும் இயந்திரம், கொதிகலன், பால் குளிரூட்டும் இயந்திரம், மின்ஆக்கி, வெண்ணெய் தயாரிக்கும் இயந்திரம் மற்றும் டப்புகள் சுத்தம் செய்யும் இயந்திரங்கள் போன்றவை 1 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும். இதன் மூலம் சுமார் 61,000 பால் உற்பத்தியாளர்கள் மற்றும் 1,50,000 நுகர்வோர் குடும்பத்தினர்கள் பயன்பெறுவர்.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி 25 சரக துணைப் பதிவாளர் (பால்வளம்) அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. துணைப் பதிவாளர் (பால்வளம்) பெரம்பலுhர், அரியலுhர் மற்றும் திருநெல்வேலி ஆகிய 3 துணைப் பதிவாளர் (பால்வளம்) அலுவலகங்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வருகின்றன. இதர 22 அலுவலகங்கள், மாவட்ட ஒன்றிய கட்டடங்கள் மற்றும் தனியார் கட்டடங்களில் இயங்கி வருவதால் அடிக்கடி இடமாற்றம் செய்ய வேண்டியதை தவிர்த்து நிரந்தர இடத்தில் இயங்குவதன் மூலம் பொது மக்களுக்கு சிறப்பான சேவையை அளிப்பதற்காக முதற்கட்டமாக நடப்பாண்டில் 5 சரக துணைப்பதிவாளர் (பால்வளம்) அலுவலகங்களுக்குமுதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி3.15 கோடி ரூபாய் செலவில் சொந்த கட்டடம் கட்டித் தரப்படும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி, தற்போதுள்ள விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களுக்கு வழங்கப்படும் சீருடை செலவு மற்றும் தையற்கூலி ஆகியவை ஆண்களுக்கு ரூ.890/-லிருந்து ரூ.1,200/- ஆகவும், பெண்களுக்கு ரூ.790/-லிருந்து ரூ.1,100/-ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த 20,000 பணியாளர்கள் பயனடைவார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி நுகர்வோர்களுக்கு தரமான பால் வழங்குவதை உறுதி செய்யும் பொருட்டு தகுந்த இடவெளியில் இயந்திர தளவாடம் மற்றும் பால் வழித்தட குழாய்களை சுத்திகரிக்கும் வசதி, குளிர்சாதன வசதி, உயர்மின் அமைப்பு வசதிகள் ஏற்படுத்தும் பொருட்டு புதுக்கோட்டை ஒன்றியத்தில் ரூ.1.21 கோடி, சிவகங்கை ஒன்றியத்தில் ரூ.1.54 கோடி மற்றும் காஞ்சீபுரம்-திருவள்ளூர் ஒன்றியத்தில் ரூ.72 இலட்சம் ஆக மொத்தம் ரூ.3.47கோடி செலவில் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் சுமார் 42,000 பால் உற்பத்தியாளர்கள் மற்றும் 50,000 நுகர்வோர் குடும்பத்தினர் பயன் பெறுவார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி, தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் உறுப்பினர்களின் கறவை மாடுகள் முறையாக பராமரிக்க 5,000 உறுப்பினர்களுக்கு அரசு நிதி உதவியுடன் கால்நடை கொட்டகைகள் கட்டி வழங்கப்படும்.
மேலும், சுகாதாரமான முறையில் தரமான பால் கறவல் மற்றும் கொள்முதல் செய்யப்படுவதை உறுதி செய்யும் வகையில் 25 கறவை மாடுகள் வரை கட்டி பால் கறக்க போதுமான பொது பால் கறவல் கூடங்கள் 100 தொடக்கப் பால் கூட்டுறவு சங்கங்களுக்கு கட்டி வழங்கப்படும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி, தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் உறுப்பினர்கள் பயன் பெறும் வகையில் 20.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 125 பால¦ உற¦பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு 500 துருவுறா பால்கேன்களும் (அரசு மானியம் ரூ.10.00 இலட்சம் மற்றும் பயனாளி சங்கம் ரூ.10.00 இலட்சம்) மற்றும் கால்நடை மருத்துவ சிகிச்சைக்கு பயன்படும் கிட்டிகள் 1.50 கோடி ரூபாய் செலவில் 1,000 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படும்..
மாதவரம் பால்பண்ணையில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், அதில் உள்ள கனி தரும் மரங்களுக்கு தேவையான நீர் ஆதாரத்தை மேம்படுத்தும் விதமாகவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி, பழத்தோட்ட பகுதியில் 5.00 இலட்சம் ரூபாய் செலவில் மழைநீர் சேகரிக்கும் குட்டைகள் அமைக்கப் படும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி, சுற்றுச்சூழல் தூய்மையை கருத்தில் கொண்டு பசுமை பண்ணை முனைப்பின் கீழ் 100 இலட்சம் ரூபாய் செலவில் இரண்டு சூரிய ஒளி செரிவூட்டிகள் நிறுவப்படும். மேலும், 50 மொத்த பால் குளிர்விப்பான் நிலையங்களுக்கு தேவையான சுடுநீர் தயாரிக்க ஒவ்வொன்றும் 500 லிட்டர் கொள்ளவு கொண்ட சூரிய ஒளி கொதிகலன்கள் 57.50 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப் படும்.
.இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.18 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 17 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 17 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n