முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் - திருவள்ளூர் - தஞ்சை பிரமுகர்கள் மறைவுக்கு இரங்கல்

சனிக்கிழமை, 31 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

கரூர் - திருவள்ளூர் - தஞ்சை அதிமுக பிரமுகர்கள் மறைவுக்கு இரங்கல்
சென்னை - கரூர், திருவள்ளூர், தஞ்சை மாவட்ட அதிமுக பிரமுகர்களின் மறைவுக்கு அண்ணா திமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து அண்ணா திமுக பொதுசெயலாளரும் மக்களின் முதல்வருமான ஜெயலலிதா விடுத்த அறிக்கை வருமாறு:

கருர் மாவட்டல விவசாயப்பிரிவு தலைவர் வி.கே.பழனிச்சாமி, கரூர் ஒன்றிய அதிமுக அவைத்தலைவர் தேவராஜ் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மணலி நகர ஜெயலலிதா பேரவை துணைச்செயலாளர் கெளரிசங்கர், திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பூவிருந்தவல்லி ஒன்றிய இளைஞர் பாசறை , இளம்பெண்கள் பாசறை துணைத்தலைவர் இ.சரவணன், ஆகியோர் மரணமடைந்து விட்டனர் என்ற செய்தி கேட்டும் , தஞ்சை வடக்கு மாவட்டம்,  கும்பகோணம் ஒன்றிய விவசாயப்பிரிவு துணைத்தலைவர் மாரியப்பன் ஆகியோர் சாலை விபத்தில் அகாலமரணமடைந்து விட்டனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
 
அன்புச்சகோதரர்கள் பழனிச்சாமி, தேவராஜ், கெளரிசங்கர் சரவணன் மற்றும் மாரியப்பன் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதுடன், மரணமடைந்தோரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து