முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடிவேலு மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்

சனிக்கிழமை, 16 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.16 - மலேசிய கலைவிழாவுக்கு வராமல் ஏமாற்றினார் என்று நடிகர் வடிவேலு மீது போலீஸ் கமிஷனரிடம் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விபரம் வருமாறு: நடிகர் வடிவேலு சார்பில் அவரது மேனேஜர் போலீஸ் கமிஷனரிடம் 'சில திங்களுக்கு முன்னர் இணைய தள ஆசிரியர் செல்வகுமார் மீது புகார் அளித்தார். அதில் வடிவேலுவிடம் ரூ.45 லட்சம் கேட்டு மிரட்டுவதாக குறிப்பிட்டார். 

இந்நிலையில் வடிவேலு மீது இணைய தள ஆசிரியர் செல்வகுமார் மோசடி புகார் அளித்துள்ளார். 

அதில் கூறியிருப்பதாவது:-

நடிகர் வடிவேலு மலேசியாவில் நடந்த நட்சத்திர கலை விழாவுக்கு வருவதாக முன்பணம் பெற்றார். 2007-ம் ஆண்டு மலேசியாவை சேர்ந்த மைக்கேல் கானாவிடம் ரூ.4 லட்சம் வாங்கினார். அந்த பணத்தை இதுவரை திருப்பித் தராமல் ஏமாற்றி வருகிறார். இந்திய தூதரகம் மூலமும் வடிவேலுக்கு பல கடிதங்கள் அனுப்பப்பட்டன. ஆனாலும்  அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. கலை நிகழ்ச்சிக்கு வடிவேலு போகாததால் ரூ.1 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே வடிவேலு மீது புகார் அளிக்க எனக்கு பொது அதிகார வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் புகார் அளிக்கிறேன். இதில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து  இழந்த பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்