முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் தொடரில் சச்சின் தான் துருப்புச் சீட்டு: வாகன்

புதன்கிழமை, 20 ஜூலை 2011      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஜூலை. 20 - இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நடக்க இருக்கும் டெஸ்ட் தொடரில் சச்சின் தான் துருப்புச் சீட்டு என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்தார். இது பற்றிய விபரம் வருமாறு- 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 21 -ம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்குகிறது. இதற்காக இரு அணிகளும் ஆயத்தமாகி வருகின்றன. 

இரு அணிகளுக்கு இடையேயான இந்தத் தொடர் குறித்து இங்கிலாந் து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன் லண்டனில் நிருபர்களைச் சந்தித்த போது, தெரிவித்ததாவது - 

இந்திய வீரர் சச்சின் சிறந்த வீரராக உள்ளார். இதைத் கண்டு இங்கிலா ந்து வீரர்கள் பயந்து விடக் கூடாது. அவரும் மனிதர் தான் என்பதை முதலில் நினைத்துக் கொள்ள வேண்டும். சச்சின் தவறு செய்யாமல் இருக்க முடியாது. 

அவரைத் குறித்து வார்த்தைகளால் பேசுவதை விட்டு விட்டு அவருக் கு எதிராக பந்துகளால் பேசவேண்டும். கடந்த 20 ஆண்டுகளாக சச்சி ன் தனது பேட்டினால் தான் பேசி வருகிறார். 

எப்போதும் இல்லாத வகையில் சமீபகாலமாக சச்சின் சிறந்த ஆட்டத் தை வெளிப்படுத்தி வருகிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ் ட் தொடரில் அவர் தான் முக்கிய துருப்புச் சீட்டு. இந்தியாவில் ஜனா திபதி, பிரதமரை விட, சச்சின் தான் பிரபலம். அவரது பேட்டிங் திறன் அசாத்தியமானது. 

நடைபெற உள்ள டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீச்சை வெளிப்படுத்தும் பட்சத்தில், இந்திய வீரர்கள் தவறு செய்ய துவங்குவார்கள். இதைப் பயன்படுத்தி நெருக்கடி கொ டுக்கலாம். இவ்வாறு மைக்கேல் வாகன் கூறினார்.  

கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்று ப் பயணம் மேற்கொண்டு கேப்டன் ஸ்ட்ராஸ் தலைமையிலான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. 

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஒரே ஒரு டி - 20 போட்டி மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் ஆகியவை நடக்க இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்