எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: நபிகள் நாயகம் வழியினைப் பின்பற்றும் இஸ்லாமியப் பெருமக்கள், அவரது போதனைகளான ஈகை, கருணை, அன்பு, மனித நேயம், சினம் தவிர்ப்பு ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடித்து, அவற்றை போற்றி வளர்க்க வேண்டும் என்று ,முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டார். அதிமுக சார்பில் சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சர் ஜெயலலிதாவின் உரையை அதிமுக பொருளாளர் . ஓ. பன்னீர்செல்வம் வாசித்தார் அந்த உரையில் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருப்பதாவது:.
எனது அன்புக்குரிய சகோதர சகோதரிகளே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடத்தப்படும் இந்த இஃப்தார் நோன்பு திறப்பு விழாவில் வழக்கம் போல் நேரில் கலந்து கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம் ஆகும். எனினும், திடீரென்று ஏற்பட்ட உடல்நலக் குறைவின் காரணமாக இந்த விழாவிற்கு என்னால் நேரில் வர இயலவில்லை. என்னால் இந்த விழாவில் கலந்து கொள்ள இயலாவிடினும், எனது எண்ணங்கள் இந்த விழாவைச் சுற்றியே உள்ளன. எனது எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் கழகப் பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம் , எனது உரையை இந்த விழாவில் படிக்குமாறு நான் பணித்துள்ளேன்.
எனது அன்பான அழைப்பினை ஏற்று, ‘இஃப்தார் நோன்பு திறப்பு’ நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள உங்கள் அனைவருக்கும் என் சார்பிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் எனது நன்றியினையும், அன்பு கலந்த வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.ரமலான் திருநாள் ஓர் ஈகைத் திருநாள். தினமும் ஐந்து முறை இறை வழிபாடு மேற்கொள்ளும் இஸ்லாமியப் பெருமக்கள், ரமலான் மாதத்தில் நோன்புடன் கூடிய இறை வழிபாட்டை மேற்கொள்கின்றனர். மனித வாழ்க்கையில் அகமும், புறமும் தூய்மையடைவதற்கான ஒரு பயிற்சி தான் நோன்பு. நோன்பிருத்தல் மூலம் இறைப் பற்று அதிகமாகிறது. ஈகைக் குணம் மேலோங்குகிறது. "ஈகைத் தன்மையும், குன்றாத புகழும் தவிர வாழ்க்கைக்கு ஆக்கமும், ஊக்கமும் தரக்கூடியது ஏதுமில்லை"" என ஈகையின் மகத்துவத்தை எடுத்துரைத்து இருக்கிறார் வள்ளுவப் பெருந்தகை. இறைவனால் அனுப்பப்பட்ட இறைத் தூதர் நபிகள் பெருமகனார், துன்பத்தை தனதாக்கிக் கொண்டு, இன்பத்தை மட்டுமே பிறருக்கு பகிர்ந்து கொடுத்து பரவசப்பட்டவர்கள். இதற்குக் காரணம் அவரது அன்பும், ஈகையும், கருணையும் தான்.
ஒரு பள்ளிவாசல். அங்கே நபிகள் நாயகம் உட்கார்ந்திருந்தார். அப்போது, ஒரு முதியப் பெண்மணி ஒருவர் நபிகள் பெருமகனாரை காண வந்திருந்தார். """"அல்லாவின் திருத்தூதரே, இந்த ஏழைக் கிழவி கொண்டு வந்துள்ள திராட்சைக் குலையை ஏற்று அருள வேண்டும்"" என்று கூறி நபிகள் வசம் அதனைத் தந்தார். அதனைப் பெற்றுக் கொண்ட நபிகள் பெருமகனார், ஒரு பழத்தை எடுத்து சுவைத்தார்கள். பிறகு மூதாட்டியுடனும், தோழர்களுடனும் உரையாடிக் கொண்டே ஒவ்வொரு பழமாக எடுத்துச் சாப்பிட்டார்கள். மூதாட்டிக்கு ஒரே மகிழ்ச்சி. பின்னர், எல்லையற்ற ஆனந்தத்துடன் அந்த மூதாட்டி அங்கிருந்து புறப்பட்டார். மூதாட்டி சென்றவுடன், நபிகள் பெருமகனாரின் தோழர்கள் அவரைப் பார்த்து, ""எல்லாவற்றையும் எல்லோருடனும் பங்கிட்டு உண்ணும் பழக்கம் உடைய தாங்கள், வழக்கத்திற்கு மாறாக எல்லா பழங்களையும் தாங்களே சாப்பிட்டது அதிர்ச்சியாக இருக்கிறது"" என்று தெரிவித்தனர்.
நபிகள் பெருமகனார் சிரித்துக் கொண்டே, """"அம்மா ரொம்பப் பிரியமாக அந்தப் பழங்களை என்னிடம் கொண்டு வந்து கொடுத்தார்கள். முதலில் ஒரு பழத்தை சுவைத்துப் பார்த்தேன். மிகவும் புளிப்பாக இருந்தது. வழக்கம் போல் உங்களுக்கு வழங்கினால் நீங்கள் முகத்தை சுளித்துக் கொண்டு பழம் புளிக்கிறது என்று கூறிவிட்டால் அந்த மூதாட்டி வேதனை அடைவார். மூதாட்டியின் அன்பான மனதை நோகடிக்கக் கூடாது என்பதற்காகத் தான், பழங்கள் அனைத்தையும் நானே சாப்பிட்டேன்"" என்று கூறினார். அடுத்தவர் மனது புண்படக் கூடாது என்பதற்காக புளிப்பையும் இனிப்பாக ஏற்றுக் கொள்கிற பண்பாடு நபிகள் நாயகம் அவர்களிடத்தில் இருந்தது. யாருடைய மனதும் நோகக் கூடாது, யாரையும் குறைத்துப் பேசக் கூடாது என்பதிலே உறுதியாக இருந்தவர் நபிகள் பெருமகனார்
நபிகள் நாயகம் வழியினைப் பின்பற்றும் இஸ்லாமியப் பெருமக்கள், அவரது போதனைகளான ஈகை, கருணை, அன்பு, மனித நேயம், சினம் தவிர்ப்பு ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடித்து, அவற்றை போற்றி வளர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நாடும், வீடும், சுற்றமும், உற்றமும் நலமுடன் வாழவும்; அமைதியும், ஆனந்தமும் எங்கும் பரவவும், எல்லாம் வல்ல இறைவனை வேண்டி, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் இவ்வாறு அவர் அந்த உரையில் குறிப்பிட்டுள்ளார். பங்கேற்றோர
முன்னதாக விழாவில் பங்கேற்றவர்களை வக்ப் வாரிய தலைவர் தமிழ்மகன் உசேன் வரவேற்று பேசினார். அமைச்சர் அப்துல் ரஹிம் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை வாழ்த்தி பேசினார்.முடிவில் அதிமுக சிறுபான்மை பிரிவு செயலாளரும், எம்.பியுமான அன்வர் ராஜா நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன்,சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள் இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு. தமிழரசன், , சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் . ஆர். சரத்குமார் , அகில இந்திய தேசிய லீக் தலைவர் . எஸ்.ஜே. இனாய்த்துல்லாஹ் , தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் . எஸ். ஷேக் தாவூத், மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பேராயர் டாக்டர் மா. பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர். இந்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை வக்ப் வாரியத்தலைவரும்.அனைத்துலக எம்ஜி.ஆர். மன்ற செயலாளருமான தமிழ்மகன் உசேன் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சன்னி பிரிவு தலைமை ஹாஜிமுப்தி டாக்டர் ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் , ஷியா பிரிவு தலைமை ஹாஜி ஹாஜி குலாம் முகமது மெஹடிகான் , அண்ணா சாலை தர்கா அறங்காவலர் சையத் மொய்னுதீன், , ஆற்காடு இளவரசர் முகம்மது அலி , ஆற்காடு இளவரசி பேகம் சாஹிபா சயீதா அப்துல் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 23 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: சென்னை விடுதிகளில் என்.ஐ.ஏ. திடீர் சோதனை
27 Apr 2024சென்னை:பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக சென்னை விடுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
-
உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
27 Apr 2024சென்னை, அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தே
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
உறவினர் உடல்நலக்குறைவால் மரணம்:ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு
27 Apr 2024புதுடெல்லி:மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு சிறப்பு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
-
நைனிடாலில் காட்டுத் தீ: அணைக்க ராணுவ உதவி
27 Apr 2024நைனிடால், உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் ராணுவத்தின் உதவியோடு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்த மாநில அரசு ஈடுபட்டு வருகிறது
-
ரூ.71 லட்சம் மதிப்பில் கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
27 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், துபாயில் இருந்து பயணி ஒருவர் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.
-
ஐ.பி.எல். வரலாற்றிலேயே அதிகபட்ச ரன்களை சேஸ் செய்து புதிய சாதனை படைத்த பஞ்சாப்
27 Apr 2024கொல்கத்தா:ஐ.பி.எல். வரலாற்றிலேயே அதிகபட்ச ரன்களை சேஸ் செய்த அணி என்ற சாதனையை பஞ்சாப் அணி படைத்துள்ளது.
அட மானம் கெட்ட பெயரர் தாங்கிகளா ஆம்பூர் கொலையை கேட்க வக்கில்லா அம்மாவின் அடிமைகளா நோன்பு கஞ்சி குடிக்க போயடிக்ளா நம் உயிரை விட மார்க்கம் முகியமடா