முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெகனை கைது செய்ய காங்கிரஸ் சதி: நடிகை ரோஜா

வெள்ளிக்கிழமை, 4 நவம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

நகரி, நவ. 4 - ஆந்திர மாநிலம் நகரியை அடுத்த புத்தூரில் நடந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்தில் நடிகை ரோஜா கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சியை அழிக்க காங்கிரஸ் பல்வேறு சதி வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அவர் மீது சொத்து குவிப்பு வழக்கு போட்டு கைது செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால் அந்த வழக்குகளில் ஆதாரம் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனால் காங்கிரஸ் தலைவர்கள் ஜெகன்மோகன் ரெட்டியை வேறு ஏதாவது ஒரு வழக்கில் சிக்க வைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளனர். 

இதன்படி தற்போது ஓபுலாபுரம் இரும்பு சுரங்க ஊழலை கையில் எடுத்துள்ளனர். இந்த வழக்கில் எப்படியாவது ஜெகன்மோகனை சேர்த்து அவரை கைது செய்ய வேண்டும் என்பதில் மும்முரமாக உள்ளனர். ஆந்திராவில் எப்போது தேர்தல் வந்தாலும் எங்களது கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்றார் ரோஜா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்